Skip to main content

மாற்றம் பெற்ற பாரதியார் பாடல்

     பாரத நாட்டைப் போற்றிப் பாடிய ‘எந்தையும் தாயும்’ எனத் தொடங்கும்     புகழ்பெற்ற இந்தப் பாரதியார் பாடல்  1907 இல் ‘ஸ்வதேச கீதங்கள்’ சிறு வெளியீட்டிலும் 1908 இல் ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலிலும் 1919 இல் நாட்டுப் பாட்டு நூலிலும் இடம் பெற்றது.


எந்தையுந்  தாயு மகிழ்ந்து குலாவி 

     யிருந்தது மிந்நாடே -அதன் 

முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து 

    முடிந்தது மிந்நாடே -அவர் 

சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 

    சிறந்தது மிந்நாடே -இதை 

வந்தனை கூறி மனதி லிருத்தியென் 

     வாயுற வாழ்த்தேனோ -இதை 

வந்தே மாதரம், வந்தே மாதரம் 

     என்று வணங்கேனோ?


 இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு 

      ளீந்தது மிந்நாடே -எங்கள் 

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 

    அறிந்தது மிந்நாடே -அவர் 

கன்னி யராகி நிலவினி லாடிக் 

     களித்தது மிந்நாடே -தங்கள் 

பொன்னுட லின்புற நீர்வினை யாடியில் 

    போந்தது மிந்நாடே -இதை 

வந்தே மாதரம், வந்தே மாதரம் 

     என்று வணங்கேனோ?


 


மங்கைய ராயவர் இல்லற நன்கு 

     வளர்த்தது மிந்நாடே -அவர் 

தங்க மதலைக்  ளீன்றமு தூட்டித் 

     தழுவி திந்நாடே -மக்கள் 

துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் 

     சூழ்ந்தது மிந்நாடே -பின்னர் 

அங்கவர் மாய அவருடற் பூந்துகள் 

    ஆர்ந்தது மிந்நாடே -இதை 

வந்தே மாதரம்,வந்தே மாதரம் 

     என்று வணங்கேனோ?


பாரதி, பாரத நாட்டைப் போற்றிப் பாடிய  பாடல் தமிழ் மொழியை வாழ்த்திப்பாடுவது போல மாற்றம் பெற்றுள்ளது.  மாற்றம் பெற்றுள்ள இப் பாடல், 1919 இல் திருச்சி சண்முக விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம், ஏழ், எட்டாம் ஆண்டுகளின் அறிக்கையில் (பிங்கள, காலயுக்தி சித்திரை மார்கழி) இடம் பெற்றுள்ளது.


     இந்தப் பாடலைக் கண்டதும் இது பாரதியாரின் பாடல் என்று முதலில் தோன்றும். அடுத்துச் சில சொல் வடிவங்கள் மாற்றம் பெற்றுள்ளது தெரிய வரும்.


 எந்தையுந்  தாயு மகிழ்ந்து குலாவி 

    யியம்பிய திம்மொழியே  -அதன் 

முந்துபல் லாயிர மாண்டுகள் வாழ்ந்தோர்

   மொழிந்ததும் இம்மொழியே -அவர் 

சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து 

    சிறந்தது மிம்மொழியே -இதை 

வந்தனை கூறி மனதி லிருத்தியென் 

     வாயுற வாழ்த்தேனோ -இதை 

செந்தமிழ் வாழிய செந்தமிழ் வாழிய

     என்று செபியேனோ?


 

இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு 

      ளீந்தது மிம்மொழியே -எங்கள் 

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 

    அறிந்தது மிம்மொழியே -அவர் 

கன்னி யராகி நிலவினி லாடிக் 

     கழறிய தி ம்மொழியே -தங்கள் 

பொன்னுடல் மேவப் புதுப்புன லாடிப்

    புகன்றது மிம்மொழியே -இதை 

செந்தமிழ் வாழிய செந்தமிழ் வாழிய

     என்று செபியேனோ?


     மாற்றம் பெற்றுள்ள இப் பாடலின் கீழ் பாரதியார் பெயர் இடம் பெறவில்லை. எனினும் இப் பாடலையும் பாரதியையும் எல்லோர்க்கும் நன்கு தெரியும். 


 அப்படியிருக்க இப்பாடலை, ஒரு வேளை பாரதியே மாற்றிக்கொடுத்திருக்கலாம் அல்லது அந்த மாற்றத்தை அறிந்தும் பெருந்தன்மையோடு ஒப்புதல் அளித்திருக்கலாம். 

    வாழ்நாளில் ஒரு பாடலேனும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பாடுவது பெருமையாகக் கருதப்பட்ட காலத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கமே  பாரதியாரின் புகழ் பெற்ற ஒரு பாடலை, மொழியைப் போற்றுவதற்குப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் பாரதியின் பாடல்கள் மக்களிடம் எவ்வளவு புகழ் பெற்றிருந்தது என்பதை அறியலாம். 

புகழ்பெற்ற பாடல்கள் வழியே தங்கள் கருத்துக்களைச் சொல்லுவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. 

பாடல் எழுதி நூறு   ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றும் உயிரோட்டமாக உள்ளது இந்தப் பாடல்.

(காலச்சுவடு ஆகஸ்டு 2021 இதழில் இப் பாடல் இடம் பெற்றுள்ளது.)

Comments

  1. அருமையான பதிவு ஐயா.நன்றி

    ReplyDelete

Post a Comment

Your feedback

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...