Skip to main content

மாம்பழ ஊரில் மனக்குயில்கள்


 ராமாயணத்தின் தாக்கம் உள்ள புதுக்கவிதைகள் பல. 

அவற்றுள் ஒன்று.

மாம்பழ ஊரில் மனக்குயில்கள் அழுகின்றன என்பது மு. மேத்தாவின் ஒரு கவிதை. கண்ணீர்ப் பூக்கள் என்ற அவரது தொகுப்பில் உள்ளது இந்தக் கவிதை. 


உடைந்து கிடந்த பிரதேசத்

துண்டுகளை 

ஒட்ட வைத்தவன் நீ...

தீண்டப்படாததாய்

ஒதுக்கப்பட்டவர்க்கு

தெய்வ மகத்துவம்

தேடிக் கொடுத்தவன்

இருநூறு ஆண்டுகளாய் 

அவமானத்தால் குனிந்த எங்கள்

அகலிகைத் தலைகள்

நீ நடந்ததால் நிமிர்ந்தன.

என்பது அந்தக் கவிதை.


காந்தி இதில் ராமனாகத் தெரிவார்.

நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ராமாயணம் பயன்பட்டுள்ளது.

இடத்தாலும் மொழியாலும் இனத்தாலும் பிரிந்து கிடந்த பாரத மக்களை ஒன்று சேர்த்து தீண்டாமையை விலக்கி அடிமை விலங்கறுத்த காந்தியடிகளை ராமனாக மேத்தா பார்க்கிறார்.

காந்தி  ராமனாகத் தோன்றியது எப்படி? 

இனவேறுபாடு ஏதுமின்றி குகன், சுக்ரீவன், விபீடணன் போன்றோரைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொண்டவன் ராமன்.

அரக்கர் குலத்தை அழித்தவன்.

கல்லாகக் கிடந்த அகலிகைக்கு சாபவிமோசனம் தந்தவன் ராமன். 

சுதந்திர உணர்வு இல்லாமல் அடிமையாக இருந்த அந்த நாள் மக்கள் அகலிகையை நினைவுபடுத்துகின்றனர்.

பாரதத்தின் பெருமை மீண்டுவர யார் காரணமோ அவர் ராமனாகத் தோன்றுவது கூட இராமாயணத்தின் வலிமையாக இருக்கலாம். 

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!         

என்ற பாரதிக்கும் காந்தி அப்படித் தெரிந்திருப்பாரோ?

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...