Skip to main content

நவம்பர் 5

நவம்பர் 5: 1870

இந்திய தேச விடுதலை இயக்க வீரர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்  இன்று பிறந்தார். 

நவம்பர் 5: 1881

சுதேச மித்திரன் வார இதழாக வெளிவர ஆரம்பித்தது.

நவம்பர் 5: 1920

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் நிறுவப்பட்டது.

நவம்பர் 5: 1925

ராஜம் கிருஷ்ணன் பிறந்த நாள். 

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கதைகள், பல்வேறு புத்தகங்களில் வெளியாகின்றன. ஒரு நிமிடத்தில் நினைத்து ஐந்து நிமிடத்தில் எழுதி முடித்த கதைகளெல்லாம் இன்று சர்வ சாதாரணம். அப்படி மேம்போக்காக எழுதப்படுகின்ற கதைகளுக்கு மத்தியில் கதை எழுதுவது என்றால் அந்தச் சூழலை வாழ்ந்து பார்த்து மட்டுமே எழுதுவது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தவர் ராஜம் கிருஷ்ணன்.

'குறிஞ்சித் தேன்' என்பது இவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவல். அந்த நாவல் எழுத நீலகிரி மலைவாழ் மக்களுடன் தங்கி சில காலம் அவர்களோடேயே வாழ்ந்தார்.

சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் சரணடைந்த நிகழ்வை வைத்து 'முள்ளும் மலர்ந்தது' என்று ஒரு நாவல் எழுதினார். அதற்காக சரணடைந்து ஜெயிலில் உள்ள கொள்ளையன் ஒருவனின் குடும்பத்தைப் பார்த்து வரக் கிளம்பினார். அழைத்துச் சென்றது சரணடைந்து வெளியே வந்திருந்த அவதார் சிங் என்ற இன்னொரு கொள்ளையன். துணைக்கு கணவர் தவிர யாரும் இல்லாமல் நீண்ட தூரம் நடந்து கொடூரமான கொள்ளையர்களுக்கு மத்தியில் தங்கி இருந்த வித்தியாசமான அனுபவத்துக்குச் சொந்தக்காரர் அவர். 

கோவா மக்களின் சுதந்திரப் போராட்டத்தை வைத்து எழுதப்பட்ட 'வளைக்கரம்'...

தூத்துக்குடி கடற்கரை மீனவ மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'அலை வாய்க் கரையில்'...

தஞ்சாவூர் நெல் விவசாயக் கூலிகளின் வாழ்க்கையைச் சொல்கின்ற 'சேற்றில் மனிதர்கள்'...

மதுரை உசிலம்பட்டி பெண் சிசுக்கொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட 'மண்ணகத்துப் பூந்துளிகள்'...

உப்பள மக்களின் வாழ்க்கையைப் பேசும் 'கரிப்பு மணிகள்'...

சிவகாசி குழந்தைத் தொழிலாளர்களின் சோகத்தைச் சொல்லும் 'கூட்டுக் குஞ்சுகள்'...

எல்லாம் இப்படி அந்தந்தச் சூழலில் தானே தங்கியிருந்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து எழுதப்பட்டவை தான்.

50க்கும் மேற்பட்ட நாவல்கள் 

500 எண்ணிக்கையில் சிறுகதைகள் 20 வானொலி நாடகங்கள் 

3 வாழ்க்கை வரலாற்றுக் கதைகள் எல்லாம் இவர் படைப்பில் வந்தவை.

திருச்சி மாவட்டம் முசிறியில் 1925 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிறந்த அவர் 2014 அக்டோபர் 20ஆம் தேதி மறைந்தார். 

நவம்பர் 5: 1931

அபிதான சிந்தாமணி தந்த . சிங்காரவேலு முதலியார் காலமானார்.

அபிதான சிந்தாமணி


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...