Skip to main content

நவம்பர் 1

 

நவம்பர் 1: 1848

முதல் ரயில் நிலைய புத்தகக் கடை W.H.ஸ்மித் புக் ஸ்டால் லண்டன் ஹூஸ்டன் ரயில் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

நவம்பர் 1: 1849

இந்தியாவில் பதிவுத் தபால் முறை முதன் முதலில் பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.  எல்லாவிதக் கடிதங்களுக்கும் அப்போதைய பதிவுத் தபால் கட்டணம் எட்டணா (50 பைசா).

நவம்பர் 1: 1858

கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பை இன்றுமுதல் பிரிட்டிஷ் அரசே   ஏற்றுக்கொண்டுவிட்டதாக விக்டோரியா மகாராணி பிரகடனம் செய்தார்.

நவம்பர் 1: 1867

பெங்களுரில் வானிலை ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.

நவம்பர் 1: 1848

பெண்கள் சைக்கிள் பந்தயம் முதன் முதலாக பிரான்சில் நடந்தது.

நவம்பர் 1: 1879

எடிசன் மின் விளக்குக்கான காப்புரிமையைப் பெற்றார்.

நவம்பர் 1: 1881

இன்று கல்கத்தா டிராம்வேஸ் கம்பெனியாரால் குதிரையால் இழுக்கப்படும் முதல்  ட்ராம் கார்  இயக்கப்பட்டது.



நவம்பர் 1: 1950

சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையில் முதல் நீராவி எஞ்சின் தயாரிக்கப்பட்டு   வெளிவந்தது.

நவம்பர் 1,1954

நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் புதுச்சேரி ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் தான் இருந்தது. 

நவம்பர் 1,1954  அதாவது இன்று தான் புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

நவம்பர் 1: 1956

மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு உருப்பெற்ற நாள்

1956-ம் ஆண்டுவரை ஒன்றுபட்டிருந்த மதராஸ் மாகாணம் இன்று ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது

அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்தந்த  மாநிலங்களோடு இணைக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரிந்தபோது, தமிழகத்துக்குச் சொந்தமான 32,000 .கி.மீ பரப்பளவிலான பகுதிகள் ஆந்திரா வசம் சென்றன

`மதராஸ் மனதே என்று சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும் எனக் கூறி அந்த மாநிலத்தினர் போராட்டம் நடத்தினர். அதை எதிர்த்து, .பொ.சி-யின் தமிழரசுக் கழகம், `தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் எனக் கூறி வடக்கெல்லை போராட்டத்தைத் தொடங்கியது.

இறுதியில், சென்னை, திருத்தணி ஆகிய தாயகப் பகுதிகளை தமிழ் மாநிலம் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், சித்தூர், திருப்பதி, காஹஸ்தி போன்ற தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பகுதிகள் ஆந்திராவிடம் பறிபோயின. குறிப்பாக, சித்தூர் மாவட்டத்தில் 19,000 .கி.மீ நிலப்பரப்பும், நெல்லூர் மாவட்டத்தில் 13,000 .கி.மீ. நிலபரப்பும் சேர்த்து மொத்தமாக 32,000 .கி.மீ பரப்பளவிலான பகுதிகளை தமிழ்நாடு, ஆந்திராவிடம் இழந்தது.

தமிழகத்துக்குச் சேரவேண்டிய கொள்ளேகால், மாண்டியா, கொல்லங்கோடு வனப்பகுதி, பெங்களூர் தண்டுப்பகுதி முதலான பகுதிகளை கர்நாடகா மாநிலத்திடம் தமிழ்நாடு இழந்தது.

இதேபோல் கேரளாவிலும், தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை வனப்பகுதி, பாலக்காடு வனப்பகுதி, நெடுமாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளை தமிழ்நாடு இழந்து நிற்கிறது

இன்னும் பல பகுதிகளை இழந்திருக்கவேண்டிய தமிழ்நாடு, மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி போன்ற தமிழகத் தலைவர்களின் தெற்கெல்லைப் போராட்டத்தால் தற்காத்துக்கொள்ளப்பட்டது

இந்த எல்லைப்போராட்டத்தால் 36 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர்

திருவிதாங்கூர் அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நவம்பர் 1: 1956

டில்லி யூனியன் பிரதேசமாகவும் மத்தியப்பிரதேசம் மாநிலமாகவும்  இன்று அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 1, 1959

புகழ் பெற்ற நடிகராக பாடகராக விளங்கிய தியாகராஜ பாகவதர் மறைந்த நாள்.

நவம்பர் 1: 1967

அகில இந்திய வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.

நவம்பர் 1: 1973

லட்சத் தீவு,  மினிகாய்,  அமீன் தீவு ஆகியவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ‘லட்சத்தீவுகள் என்ற  பெயரில் யூனியன் பிரதேசமானது.  இதன் பரப்பு 32 .கி.மீ. 

நவம்பர் 1: 1973

மைசூர் மாநிலத்தின் பெயர் கர்நாடகா என மாற்றப்பட்டது.

நவம்பர் 1:  1984

அக்டோபர் 31 ஆன நேற்று இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியானார்கள்.

நவம்பர் 1, 2006

இதுவரை பெங்களூர் என வழங்கிவந்த கர்நாடக மாநிலத் தலைநகரின் பெயர் பெங்களூரு என இன்று மாற்றப்பட்டது. 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...