Skip to main content

நவம்பர் 10

 

நவம்பர் 10:1899

கி..பெ. விசுவநாதம்பிள்ளை பிறந்த நாள்

இவருடைய வேண்டுகோளை ஏற்றுத்தான்  அன்றைய தமிழக முதல்வர்  எம்.ஜி.ஆர்., தஞ்சையில் தமிழுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்தார். அது தான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

நவம்பர் 10:1910

கொத்தமங்கலம் சுப்பு  பிறந்த நாள். 

தில்லானா மோகனாம்பாள்  திரைப்படம் காலம் கடந்து இன்றும் பேசப்பட்டும் ஒரு திரைப்படம்.

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற நாவல் தான் தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக எடுக்கப்பட்டது.  

கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர், பத்திரிக்கையாளர்,  நாடகநடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர் இவர். 

15 பிப்ரவரி 1974 இவர் மறைந்த நாள். 

நவம்பர் 10:1910

பிரபல வரலாற்று நாவலாசிரியர் சாண்டில்யன் பிறந்த நாள். 

நவம்பர் 10:1916

தமிழ்ப்  பேராசிரியர் மற்றும் தமிழறிஞர்  ..ஞானசம்பந்தன்  பிறந்த நாள்.       


நவம்பர் 10: 1977

புகழ் பெற்ற எழுத்தாளரும் கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியருமான தமிழ்வாணன்  காலமானார்.

நவம்பர் 10: 1990

இந்திய பிரதமராக சந்திரசேகரும் துணைப் பிரதமராக தேவிலாலும் பதவியேற்றனர். இன்று பதவியேற்ற அந்த அரசு 21.6.1991 ல் கவிழ்ந்தது.

நவம்பர் 10: 2019

பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டிருந்த தேர்தல் கமிஷன் எவ்வளவு அதிகாரங்கள் கொண்டது என்று காட்டிய நேர்மையும் தீரமும் கொண்ட தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் மறைந்த நாள்.

திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்பது அவரது பெயரின் விரிவாக்கம். 

1991 முதல் 1996 வரை அவர் தேர்தல் கமிஷனராக இருந்த காலத்தில் தில்லுமுல்லு அரசியல்வாதிகளை அலறவைத்தவர் அவர். 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...