Skip to main content

நவம்பர் 11

 

நவம்பர் 11: 1851

முதன் முதலாக லிவர்பூலிலிருந்து மான்செஸ்டருக்கு ரயில் மூலம் தபால் அனுப்பப்பட்டது.

நவம்பர் 11: 1851

அமெரிக்காவில் டெலஸ்கோப்பிற்கு காப்புரிமம் பதிவு செய்யப்பட்டது.

நவம்பர் 11: 1888

மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள். 

நம் பாரத நாடு  விடுதலையடைந்த பின்  அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். 

நவம்பர் 11: 1911

பழம்பெரும் நடிகை டி. பி. ராஜலட்சுமி பிறந்த நாள். 

இவர் தான் தமிழ்த் திரைப்படத்தில் நடித்த முதல் பெண் நடிகை. 

தமிழில் வெளிவந்த, முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.  இந்தப்படம் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 

நவம்பர் 11: 1917

ரஷ்யாவில் 8மணி நேர வேலை முறை அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 11: 1918

முதல் உலகப் போர் இன்றுடன் முடிந்தது.  பாரிஸ் நகருக்கு வடக்கே காம்பெயின் காட்டில் ரெத்தோண்டஸ் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டியில் காலை 5 மணிக்கு போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது.  கையெழுத்தான 6 மணி நேரத்துக்குள் அதாவது பதினோராவது மாதம் 11 ஆம் நாள் காலை 11 மணிக்கு அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் ஏற்பட்டது.  1567 நாள்கள் நடந்த முதல் உலகப் போர் முடிந்தது.

இப்போரில்,  ஒரு கோடிப் பேர் இறந்தனர்.  2 கோடிக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.  இது தவிர பட்டினியால் 50 இலட்சம் பேர் இறந்தனர்.

நவம்பர் 11: 1925

காஸ்மிக் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி .மில்லிகன் அறிவித்தார்.


நவம்பர் 11: 1952

கலிபோர்னியாவின் ஜான் முல்லின் இவெயினி ஜான்சன் ஆகிய இருவரும்வீடியோ ரெக்கார்டர்செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.

நவம்பர் 11: 1907

விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பமானது.

நவம்பர் 11: 1975

இந்தியாவின் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனாவில் ஆரம்பிக்கப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...