Skip to main content

நவம்பர் 23

 

நவம்பர் 23 :1552

பெண்கள் தங்கிப் படிப்பதற்கான பள்ளிக்கூடம் முதன் முதலாக லண்டனில் கிரைஸ்ட் மருத்துவமனையில் துவக்கப்பட்டது.

நவம்பர் 23 :1616

Globe (க்ளொப்) என்னும் உலக உருண்டையை வடிவமைத்த ரிச்சர்ட் ஹக்குல்யட் காலமானார்.


நவம்பர் 23 :1921 

கவிஞர் சுரதா பிறந்த நாள். 

இராசகோபாலன் என்ற தன் பெயரை சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா. சுப்புரத்தினம் என்பது  கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர்.  உவமைக் கவிஞர் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் இவர். 

 20 ஜூன்  2006) இவர் மறைந்த நாள். 

நவம்பர் 23 :1926 

சத்ய சாய் பாபா பிறந்த நாள். 

ஆந்திராவில் உள்ள  புட்டபர்த்தி கிராமத்தில்  பிறந்த சத்தியநாராயண ராயூ தான் பின்னாளில் சத்ய சாய் பாபா என்ற பெயரில் ஆன்மிகவாதியாகவும் அவதாரமாகவும் கருதப்பட்டார்.

அவரது பெற்றோர்  மீசரகண்ட ஈஸ்வரம்மா மற்றும் ரத்னாகரம் பெத்தவெங்கட் ராயூ தம்பதியர்.  ஆன்மிகத்தோடு தன்னுடைய அறக்கட்டளை மூலம் அறப்பணியும் செய்துவந்த இவர் 24 ஏப்ரல் 2011 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். 

நவம்பர் 23 :1937

புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் காலமானார்.

நவம்பர் 23 :1952

கொடைக்கானலில் முதன் முதலாக ரேடியோ டெலஸ்கோப் நிறுவப்பட்டது.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...