Skip to main content

நவம்பர் 17

 

நவம்பர் 17 :1883

ஓட்டப்பந்தயத்தில் தொடர் ஓட்ட முறை கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 நவம்பர் 17 :1920

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பிறந்த நாள். 

நவம்பர் 17 :1927

செக்கோஸ்லேவாகியா நாட்டில் பிறந்து தமிழ் மீது ஆர்வம் கொண்டு  தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்த  மொழியியல் வல்லுநர்  கமில் சுவலபில் (Kamil Vaclav Zvelebil, )  பிறந்த நாள். 

தமிழ்க்கடவுளான முருகனிடத்து  மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டவர் இவர்.  

ஜனவரி 17, 2009 இவர் மறைந்த நாள். 

நவம்பர் 17 :1928

லாகூரில் சைமன் கமிஷன் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஊர்வலத்தை அக்டோபர் 30 ஆம் தேதி தலைமை தாங்கி நடத்திச் சென்ற பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் மீது போலிஸார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதால் இன்று அவர் மரணமடைந்தார்.


நவம்பர் 17 :1940

இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சர்தார் வல்லபாய் படேல் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 17 :1970

ரஷ்யாவின் லூனா 17 ராக்கெட்டிலிருந்து லூனாக் கோட் 1 என்னும் ரோவர் நிலவில் இன்று தரையிறங்கியது.

நவம்பர் 17 :1989

பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் மறைந்த நாள். 

இவர் பாடிய முதல் திரைப்பட பாடலான   ' வாராய் நீ வாராய் .. நீ போகுமிடம் வெகு தூரமில்லை '  பாடல் இவரைப்  பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் வரும் இந்தப் பாடலை  ராமநாதன் இசையமைப்பில் எம் . ஜி. யாருக்காக ஜிக்கியோடு இணைந்து திருச்சி லோகநாதன் பாடினார். 

நவம்பர் 17 : 2015

பக்திப்பாடல்களும் பஜனையும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்து புகழ்பெற்ற  பித்துக்குளி முருகதாஸ் மறைந்த நாள். 

 25 ஜனவரி 1920 - அன்று பிறந்த இவர் தொண்ணூற்றுஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...