Skip to main content

Posts

Showing posts from 2022

மணங்கமழ்கூந்தல்

 ' திருவிளையாடல்’ திரைப்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பவர்களுக்கு இந்தப் பாட்டு மனப்பாடமே ஆகியிருக்கும். கொங்கு  தே ர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறி எயிற்று அரிவை கூந்தலின்   நறியவும் உளவோநீ யறியும் பூவே      இது தான் எமது செய்யுள் என சிவாஜி கணேசனின் வசனத்தை ஆறாவது வரியாகச் செய்யுளில் சேர்த்துக் கூறக்கூடாது.   இது இறையனார் எழுதியதாக குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள செய்யுள்.        பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்பது சாதாரணமான கேள்வியல்ல. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லை என்று கூறியதால் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டான் நக்கீரன்.      அந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் கூந்தலுக்கு அகில்புகையை ஊட்டிக் கொண்டனர்.    கூந்தலுக்கு நறுமணம் மிகுந்த எண்ணெய் பூசும் பழக்கமுமிருந்தது.   எண்ணெய் பூசாத போதும் அவள் கூந்தல் மணங்கமழும் என்று கூட ஒரு பாடல் கூறுகிறது. மண்ணா வாயின்...

நீ சொல்வதைக் கேட்டு நடப்பேன்.

இளமைக் காலம் கடந்து போய்விட்டது. இப்போது அவனும் அவளும் மட்டும் இருக்கிறார்கள்.   அவள் அவனிடம் சொல்கிறாள்.   உன் மனத்தை நானும் என் மனதை நீயும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை.   என் அழகில் நீயும் உன் அழகில் நானும் திளைத்திருந்தோம். அந்த அழகெல்லாம் எங்கோ போய்விட்டது.   உனக்கு இப்போது 60 வயதாகிவிட்டது. எனக்கோ நறுமணம் கமழும் கூந்தல் என நீ சொன்ன தலைமுடியெல்லாம் நரைத்துக்கொண்டிருக்கிறது.   நம் இளமை இப்போது இல்லை. நாம் நம் அழகில் கண்ட மயக்கம் கூட இப்போது இல்லை. உன் மனமும் தடுமாறுகிறது.    இந்தப் பிறவியில் உன் மனதை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.    உனக்கேற்ற துணையாக என்னால் வாழ முடிந்ததா என்று தெரியவில்லை. அடுத்த பிறவியில் நான் உன் மனம் போல நடப்பேன். நீ சொல்வதைக் கேட்டு நடப்பேன்.   நம் உள்ளம் நாம் அறிந்திலம் நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பு இங்கு யாங்கு ஒளிந்தன ஆறு ஐந்து இரட்டி ஆண்டு உனக்கு ஆயது என் நாறும் ஐந்து கூந்தலும் நரை விரவுதல் உற்றன இளமையும் காமமும் எங்கு ஒளிந்தனவோ உள்ளம் இல்லாள எ...

நீ தான் பாடியிருப்பாய்!

உனக்குப் போல யாருக்குக் குரல் வளம் இருக்கும் ?   அரசவையில் பாடும் பாடகன் என்றால் சும்மாவா ?  அதுவும் நீ புகழ்பெற்ற நந்தி மன்னனின் அரசவையில் பாடும் பாணன் .   நேற்று இரவு   நீ பாடிய   பாடல் எங்கள் வீட்டிற்குக் கேட்டது .  அந்தப் பாடலைக் கேட்ட எங்கம்மா " காட்டில் ஏதோ பேய்  அலறு கிறது போல " என்று கூறினாள் .     வீட்டில் இருந்த மற்றவர்கள் எல்லாம் " பேயெல்லாம் இல்லை , நரி தான் ஊளையிடுகிறது" என்று கூறினார்கள் .    என் தோழியோ " அது நரியல்லடி நாய் குரைக்கிற சப்தம் " என்று கூறினாள் .     நான் தான் அவர்களிடம் " அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ தான் பாடியிருப்பாய் " என்று தெளிவுபடுத்தினேன் .  உன்னுடைய குரல் வளம் எனக்குத் தெரியும் அல்லவா !   ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம் வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும் பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி நாயென்றாள் நீஎன்றேன் நா.   (நந்தி க் கலம்பகம்)

Words in usage - catch

  Catch You will be caught if copying in the exam. Catch the ball that is thrown. I am going to catch the fish. I should go now to catch the bus. You will catch cold if you play in rain. As the wood is wet, it won’t catch fire. I suddenly caught sight of a man who was hiding. As I walked faster than he did I soon caught him up.

Words in usage - idea

  Idea That’s a good idea. My idea is to start the work from the north. That boy is always full of ideas. I won’t force my idea on you. I have an idea that he will come today. I had no idea that you were here. I have no idea what you mean.     

Words in usage - never

 Never I shall never forget it. Never in my life have I heard or seen such a thing. I never said such a thing. I should never have believed it. This will never do!. Never mind. (It’s doesn’t matter) I have never been there. I have never seen that place.

Words in usage - inform

Inform I informed him that he must start at 12’o clock. Can you inform me what I am to do? Can you give me any information about this matter? He gave a lot of useful information. Has he been informed of his pet’s death yet?