Skip to main content

வேறு மரத்தடியில் போய்ப் பேசுவோம்

  

அவள் ஊர் கடற்கரையோரம் தான்.

தன் மனதுக்கு இனியவனோடு கடற்கரையோரத்தில் இருக்கக்கூடிய ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்திருக்கிறாள்.

 

அவன் ஏதோ சொல்ல அவளுக்கு வெட்கம்.

 

அப்போது அவனிடம் அவள் சொல்கிறாள்.

 

நான் குழந்தையாக இருந்தபோது என் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். 

 அப்போது விளையாட்டுக்காக ஒரு புன்னை மர விதையை மண்ணில் நட்டு வைத்தேன்.

பின்னர் அதை மறந்து விட்டேன்.

ஆனால் என் தாயோ அதை மறக்கவில்லை.

நான் நட்டு வைத்த அந்த புன்னை விதையை சீராட்டி வளர்த்தாள்.

இப்போது அது பெரிய மரம் ஆகிவிட்டது.

அதைப் பார்க்கும்போதெல்லாம் என் தாய் என்னிடம் சொல்வார்

“அந்த மரம் உனக்கு தங்கை போன்றது”என்று.

 அந்த தங்கை மரம் வேறு எங்கும் இல்லை;

 நீயும் நானும் அமர்ந்து இருக்கிறோமே இதுதான் அந்த மரம்.

 என் தங்கை முன்பாக நான் எப்படி உன்னோடு பேச முடியும். 

வா! நாம் வேறு மரத்தடியில் போய்ப் பேசுவோம். 

 

 பாடல்:

 

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,

அன்னை கூறினள், புன்னையது நலனே-

 அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,

வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்

துறை கெழு கொண்க!- நீ நல்கின்,

இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

(நற்றிணை)

 

பொருள்:

 

விளையாடு ஆயமொடு -  விளையாடும் தோழிகளோடு


 வெண் மணல் அழுத்தி - வெள்ளை மணலில் அழுத்தி

மறந்தனம் - மறந்து விட்டோம்

துறந்த - துறந்தும் விட்டோம்

காழ் 
முளை - விதை   முளை விட்டு

அகைய - கிளை விட்டு பெரிதாகி

நெய்  பெய் - நெய் ஊற்றி

தீம் பால் பெய்து - சுவையான பாலை இட்டு

இனிது வளர்ப்ப - சிறப்பாக வளர்த்து வரும் போது

நும்மினும் சிறந்தது - உன்னை விட சிறந்தவள்

நுவ்வை ஆகும் என்று - உன் தமக்கை ஆகும் என்று

அன்னை கூறினள் - என் தாய் கூறினாள்

புன்னையது நலனே - என்று அதன் சிறப்பை புனைந்து உரைத்தாள்

நாணுதும்-  எனக்கு வெட்கமாக இருக்கிறது

நும்மொடு நகையே - உன்னோடு சிரித்து மகிழ்ந்து இருப்பது

விருந்தின் பாணர் - விருந்தாக வந்த பாணன்

விளர் இசை கடுப்ப - மெல்லிய இனிய இசை போல

வலம்புரி - வலம்புரி சங்கு

வான் கோடு நரலும் - வானம் போல வெளுத்த , அது இசைக்கும்

இலங்கு நீர்த் - அப்படிப்பட்ட நீரை உடைய

துறை கெழு - நிலத்தின் தலைவனே

கொண்க!- - அறிந்து கொள்

நீ நல்கின் -  நீ சம்மதித்தால்


இறைபடு நீழல் - நிறைந்த நிழல் தரும் மரங்கள் 

 

பிறவுமார் உளவே. - இங்கு நிறையவே இருக்கிறது

  

மரத்தைக் கூட உடன் பிறந்த சகோதரியாக நினைத்து வாழ்ந்த சமுதாயம் நம்  சமுதாயம். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...