Skip to main content

தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு...

 


பாரி மன்னன் இறந்த பின்பு அவனது மகள்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பாரி மன்னனைப் பாடிப் புகழ்ந்த அவைப்புலவரான கபிலர்  பாரிமகளிருக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் முடிப்பதற்காக பறம்பு மலையை விட்டுப் பிரிய நேர்கிறது.


இத்தனை நாள் சோறும் நீரும் தந்து ஆதரித்த  மலையை விட்டுப் போகும் போது அவரது மனம் வேதனையில் வாடுகிறது.


பறம்பு மலையே!


என் மன்னன் பாரி இருக்கின்ற வரையில் நீ வயிராற உணவும் நீரும் தந்தாய். 

இன்று எங்கள் மன்னன் இல்லை. 

இதுவரை எங்களுக்கு எல்லாமாக இருந்த மலையே உன்னை விட்டு நாங்கள் போகிறோம் .

திரண்ட முன்கைகளில் சிறிய வளையலை அணிந்த பாரி மன்னன் மகள்களுக்கு கணவர்களைத் தேடி கண்ணீருடன் உன்னை வாழ்த்தி விடை பெறுகிறோம்.


மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,

அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்

பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி

நட்டனை மன்னோ முன்னே; இனியே,

பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று

நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்

சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே;

கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்

நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.


பறம்பு மலையை விட்டு பாரி மகளிர் அங்கவை, சங்கவையுடன் கண்ணீர் சிந்த கபிலர் விடைபெறும்போது வந்த உணர்வினை நினைவு படுத்தும்  பாடல் வரிகள்...



போறாளே பொன்னுத்தாயி

பொல பொலவென்று கண்ணீர் விட்டு

தண்ணீரும் சோறும் தந்த

மண்ணை விட்டு...


பால் பீச்சும் மாட்ட விட்டு

பஞ்சாரத்துக் கோழியை விட்டு

போறாளே பொட்டப் புள்ள

ஊரை விட்டு










Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...