Skip to main content

கனவு மெய்ப்பட வேண்டும்


மறைந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பாரதியைப் பற்றி நினைக்காமல் பலரது வாழ்க்கையில் சில நாட்கள்சில வாரங்கள் கூட நகர்வதில்லை.

  

 தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளில் இலக்கியங்கள் படைக்கும் அளவுக்கு இருந்தபோதும் இவை தவிர பல மொழிகளும் பாரதிக்கு பல அத்துபடி .


அதனால் தான்,

 “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” 

என்ற பாரதியின் முழக்கம் உலகமெங்கும் சத்திய வாக்காகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.


மதுரையில் சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக துவங்கிய வாழ்க்கை பின்னர் சென்னையில் பத்திரிக்கை ஆசிரியர் என்று பரிமாணத்தை அடைந்தது.


 பத்திரிக்கைத் துறையில் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) போடும் வழக்கத்தை உருவாக்கியவர் பாரதி.


 பெண்களுக்கு என தனியாக அவர் நடத்திய பத்திரிக்கையான சக்கரவர்த்தினி, இன்று வரும் பெண்கள் பத்திரிக்கைக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது. 

  

 பாரதி பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தார்.


பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கும் அதேநேரம் பிறமொழிகளில் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.


உள்ளூர் செய்திகளையே ஒழுங்காகத் தெரிந்து கொள்ள முடியாத காலத்தில் உலகச் செய்திகளை தமிழர்களுக்கு வழங்கியதில் பாரதியின் பங்கு அளப்பரியது.


ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் வீழ்ச்சி பாரதி மூலமாகவே பல தமிழர்களை எட்டியது.


வால்ட் விட்மனையும் ஷெல்லியையும் தமிழுக்குத் தந்தவர் பாரதி தான்.


புதுக்கவிதை என்ற புது வடிவத்துக்கு வித்திட்டவர் பாரதி. 


 உணர்ச்சிகளை அப்படியே வழங்குகின்ற வசன கவிதைகள் என்ற வடிவம் பாரதியாரால் தான் தமிழுக்கு வந்தது.


 எப்படி கவிதை எழுதினாரோ அப்படியே வாழ்ந்து காட்டியவர் பாரதி. 


அதனால் தான் காசு பணத்துக்கு அடங்கிப் போகாமல், ஆளுமைக்கும் அதிகாரத்துக்கும் அஞ்சாமல் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாட முடிந்தது; அப்படியே வாழ முடிந்தது.


தமிழறிஞர்கள் தமிழ் தவிர கூடுதலாக பல மொழிகள் தெரிந்திருந்தால் அது தமிழுக்கு உலக இலக்கியங்களை கொண்டு தருவதுடன் உலகம் முழுமைக்கும் தமிழைக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பினார்.


பல மொழிகள் அறிந்திருந்த போதும் அவருடைய அந்தக் குறுகிய ஆயுட்காலத்துக்குள் அவருடைய அத்தனை கனவுகளையும் அவரால் மெய்ப்படுத்த முடியாமலேயே போய்விட்டது.


அந்தக் கனவுகளை நோக்கி தமிழ் உலகம் தன்னை உயர்த்திக் கொள்வது தான் அந்த மகாகவிக்குச் செய்யும் உண்மை அஞ்சலியும் நன்றியுமாய் அமையும்.


கனவு மெய்ப்பட வேண்டும்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...