Skip to main content

ஓங்கலிடை -வேற்றுமையணி

 

கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்

வேற்றுமைப் படவரின் வேற்றுமை அணியே 

 

என்பது வேற்றுமை அணிக்குத் தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் ஆகும்.

 

 

செய்யுளில் இரு பொருள்களுக்குரிய ஒற்றுமைகளை முதலில்  கூறி,

பின்னர் பிறிதொரு காரணத்தால் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதெனக்

காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்.

 

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்

 

இந்தத் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலில் கதிரவனுக்கும்

தமிழுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமை கூறப்பட்டுள்ளது.

 

இரண்டு ஒப்புமை உடைய பொருட்களாக கதிரவனும் தமிழும் 

இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

 

முதலாவதாக,

 

இரண்டும் மலையில் தோன்றுவது.

 

கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே 

இருந்து தோன்றுகிறது.

 

தமிழ் பொதிகை மலையிலிருந்து தோன்றியது.

ஆக இரண்டும் தோன்றுமிடம் ஒன்று.

 

இரண்டாவதாக

உயர்ந்தோர் தொழும் பண்பு இரண்டிற்கும் உண்டு.

 

கதிரவனை வணங்குல்  இன்றும் நடைபெறுகிறது.

 

தமிழை வணங்கி, வாழ்த்தித் தான் எந்த செயலையும் செய்கிறோம்.

 

ஆதலால் இரண்டும் தொழப்படும் உயரிய பண்பு கொண்டவை.

 

மூன்றாவதாக,

கதிரவன் தனது ஒளியால் ஒலிக்கின்ற கடலால்  சூழப்பட்ட இந்த உலகின்

புற இருளை நீக்குகிறது.

 

தமிழ்மொழி தமது சிறந்த படைப்புகளால் மக்களின்  அறியாமை என்னும் இருளை நீக்கி வருகிறது.

 

கதிரவனும் இருளை அகற்றுகிறது.

தமிழும் அறியாமை என்னும் இருளை அகற்றுகிறது.

 

 இரண்டிற்குமான வேற்றுமை என்ன ?

கதிரவனுக்கு நிகர் உண்டு.

அண்டத்துள் உள்ள பல சூரியன்களுள் ஒன்று தான் இந்தக் கதிரவன்.

ஆனால் தமிழுக்கு நிகரான மொழி இல்லை.

ஒப்பு உவமை கூற முடியாத 

ணையற்ற மொழி தமிழ் மொழி.

அதனால்தான் அது தன்னேரில்லாத தமிழ் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

இரண்டுக்கும் இத்தனை ஒற்றுமை இருப்பினும் 

இவற்றுள் தமிழ் தன்னிகரில்லாதது என்று வேறுபடுத்திக் 

காட்டப்பட்டுள்ளதால் இது  வேற்றுமையணி ஆயிற்று.


வேற்றுமை அணிக்கு எடுத்துக்காட்டாக திருக்குறள்:


"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு "

 

தீயினால் சுட்டபுண் உடம்பில் தோன்றினாலும் உள்ளே ஆறிவிடும்.

ஆனால் நாவினால் பேசிய தீய சொற்கள் ஒருவர் உள்ளத்தைச் சுட்டு

 வடுவாகி நிரந்தரமாக இருக்கும் என்பது

இப்பாடலின் பொருள்.

 

தீ சுடும். நாவும் சுடும். 

அதனால் தீ, நாவு இரண்டிற்கும்

சுடுகின்ற குணம் ஒற்றுமை .

 

ஆனால் இவை இரண்டிற்கும் இடையே

ஒரு வேற்றுமையும் உண்டு.

 

தீயினால் சுட்டபுண் ஆறிவிடும்.

ஆனால் நாவினால் சுட்டபுண் என்றும் ஆறாது.

இது வேற்றுமை.

 

ஆதலால் இது வேற்றுமை அணி.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...