Skip to main content

Posts

Showing posts from August, 2024

Wig என்ன பெரிய wig

  இப்போதெல்லாம் யாரும் வயதாவதை ஏற்றுக்கொள்வதில்லை. நரைத்த முடியை மைபூசிக் கொண்டு  இள'மை'யோடு  பூரித்துப் போகிறோம்.  இன்னும் சில முதியவர்கள் மை பூசியும் இளமைத்தோற்றம் வராததால் விக்( wig ) வைத்துக் கொள்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த  விக் வைத்துக் கொள்ளும் பழக்கம் ஐரோப்பாவில் இருந்தது.  முதியோர்கள் மட்டுமல்லாது,  சிறு வயதினர் கூட wig வைத்துக் கொள்வதை நாகரீகமாகக் கருதினர். செல்வந்தர்கள் விதவிதமாக wig வைத்துக் கொண்டு அடிக்கடி மாற்றிக்கொண்டனர்.  நீளமாக wig வைத்துக் கொள்வது கௌரவமாகக் கருதப்பட்டது.  சமூகத்தில் முக்கியமானவர்கள் நீளமான full length wig வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.  அப்படி பெரிய விக் வைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை  கட்டுக்கடங்காமல் போவதைப் பார்த்து, இதற்கென ஒரு சட்டம் போட்டார்கள். அந்தச் சட்டப்படி நீதிபதிகளும் பிஷப்களும் மட்டுமே பெரிய விக் வைத்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் நீளமாக விக் வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது.  எனவே Bigwig  persons சமூகத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர். பழைய ஐரோப்பிய...

கொஞ்சம் கொஞ்சம் கதை

  ஆவுக்குப் பிச்சை ஆட்டுக்குப் பிடுங்கல்  இதுவும் சிரிப்பு தான் கழுதை வயது Twinkle, Twinkle, Little Star போட்டுக் கொடுங்க அதுதான் அரசியல் சூத்திரம் அழுகியமுட்டையும் சுவை தான் இதற்கும் கூட இயந்திரம் காத்து வாக்குல... நானாகத் தேடிக்கொண்டது தான் இது. Arm chair critic ? அப்படினா? மின்னலுக்கு எண்ணெய் தடவி கம்பி நீட்டிட்டு போயிட்டாங்க இப்படி எல்லாமா பாப்பாங்க? மாப்பிள்ளை அவர் தான். ஆனால்… வெட்டியாவே இருக்கட்டும் அந்தப் பெட்டி  Nit picking கூட மன வளக்கலை தான் குற்றவுணர்ச்சியா? நமக்கா? மண்ணைக் கவ்விவிட்டது வருவதுவரட்டும் ஒரு வாத்துக்காகவா? ஒரு காதில் நுழைந்து... சார்லி சாப்ளின் மேனரிசம் Wig- ல் என்ன பெரிய wig ஆல்பியா நதியும் அரசியல் சாக்கடையும் நெருப்பா? கடலா? - இரண்டில் எது? எவ்வளவு கோபம்? நமத்துப்போன பட்டாசு பூனை- சுத்தமா? அசுத்தமா? பொறுத்திருப்போம் ஒற்றைச் செருப்புகள் இடப்பக்கம் கூடாதா? அல்பட்ராஸ் Insult to injury ஒரு காட்டில் ஒரு சிங்கம் இசையைச் சந்திக்க வேண்டிவரும் ஆவுக்குப் பிச்சை ஆட்டுக்குப் பிடுங்கல்   சாக்கும் வைக்கோலும்  Though there is no  வில் t...

என் பிள்ளை மட்டுமா குறும்பு செய்கிறான்?

என் பிள்ளை மட்டுமா குறும்பு செய்கிறான்? இந்த ஊரில் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். குறும்பு செய்யும் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.  அப்படியிருக்க, ஊருக்குள் யார் என்ன குறும்பு செய்தாலும் 'கண்ணன் தான் செய்தான்' என்று எல்லோரும் உன் மேல் குற்றம் சொல்லுகிறார்கள்.  இப்படி உன் மேல் வேண்டுமென்றே குற்றம் சொல்லும் அவர்களை விட்டு விலகிவிடு கண்ணா!  உன்னை அன்புடன் அழைத்து அரவணைக்கும் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள். நீ அவர்கள் இருக்குமிடம் வந்து விளையாடு கண்ணா! அழகும் சமர்த்தும் பொருந்திய குழந்தை தானே நீ! பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீம்புகள் செய்வார் எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான்! நீஇங்கே வாராய் நல்லார்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச் சுடரே! உன்மேனி சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய். (பெரியாழ்வார் - பெரிய திருமொழி)

பெயர் சூட்டுதல்

தன் தந்தையின் பெயரை தன் குழந்தைக்குச் சூட்டுவது சங்ககாலத்தில் மரபாக இருந்தது.  சிறந்தோன் பெயரன் , எந்தை பெயரன் என்றெல்லாம்  அப்பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. சிந்தாமணியில் சீவகன் தன் முதல் குழந்தைக்கு தன் தந்தையின் பெயரான ‘சச்சந்தன்’ என்ற பெயரைச் சூட்டுகிறான்.   சீவகனின் ஆறாவது மகன் பெயர் தத்தன்.   அது சீவகனின் தாய் விஜயமாதேவியின் தந்தை பெயர். இ லக்கணை சீவகனின் ஒரு மனைவி . இலக்கணையின் தந்தை கோவிந்தன் பெயரை தன் எட்டாவது மகனுக்குச் சூட்டுகிறான். தந்தையின் தகப்பன் , அவர் வழிப் பாட்டன் , தாய் வழித் தந்தை , பாட்டன் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளனர். குடும்பத்தின் கட்டமைப்பு மீண்டும் அமையவும் பெயருக்குரிய அந்த முன்னோர் தன் பெயரிடப்பட்ட அக்குழந்தையை ஆசிர்வதித்து வாழ்நாள் முழுவதும் காத்து வருவர் என்பதற்காகவும் பெயரிடும் மரபு இருந்து வந்திருக்கிறது. தசரத மன்னன் தன் நான்கு மகன்களுக்கும் ஜாதகம் குறித்து , பிறந்த நட்சத்திரத்தின்படி பெயரிட்டதை இராமாயணம் கூறுகிறது.  தசரதனின் குலகுருவாகிய வசிட்டர் ஜாதக நட்சத்திரம் பார்த்து தசரதனின் குழந்தைகளுக்கு இராமன் , பரதன் ...

Beautiful Lines - லியோ டால்ஸ்டாய்

  எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஒவ்வொரு ஆபத்திலும் அதில் ஈடுபடுவது அல்லது ஈடுபடாமல் இருப்பது என்ற இரண்டு வழிகள் உள்ளன.  கடமை உணர்ச்சியால் தூண்டப்பட்டு ஆபத்தில் இறங்குவது வீரமாகும்.  கீழ்த்தர உணர்ச்சிகளின் வசப்பட்டு ஆபத்தில் இறங்குவது கோழைத்தனமாகும். தற்பெருமை மற்றும் பண ஆசையால் புதுமை மோகத்தால் தன் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கும் ஒருவனை வீரன் என்று சொல்ல முடியாது. அதற்கு மாறாக தன் குடும்பத்துக்கு தான் செய்ய வேண்டிய கடமை என்னும் கண்ணியமான உணர்ச்சி காரணமாகவோ அல்லது தன் மனசாட்சிக்கு அது ஒவ்வாது என்ற நிலையின் காரணமாகவோ ஆபத்துக்கு ஆளாக மறுக்கும் ஒருவனை கோழை என்று சொல்லி விடவும் முடியாது. (போர்க் களத்தில் பேசும் ஒரு உரையாடல்) (A dialogue in the Short story Invasion by Lio Tolstoy )

Test Your English

Word Power :      1         2         3       4       5        6         7        8       9       10   11       12       13     14     15      16       17      18     19       20   21       22       23    24     25      26       27      28      29       30    31       32       33     34    3 5      36      37      38      39       40    41       42    Test Yo...

கழுகுகள் கூடவே வர என்ன காரணம்?

  சார்லஸ் டார்வின் ஒருமுறை தென் அமெரிக்காவிற்குப் போனார். தென் அமெரிக்காவின் நிலையை ஆராய்ந்து அறிவதற்காகப் போனார். அவருக்குத் துணையாக அமெரிக்க பூர்வகுடிகள் நாற்பது ஐம்பது பேர் கூடவே போனார்கள்.  அவர் ஆராய்ச்சிக்காக கொண்டு சென்ற சாமான்களை தூக்கிக்கொண்டு செல்வது தான் அந்த நாற்பது ஐம்பது பேர்களுடைய வேலை. ஏனென்றால் இப்போது போல ரயிலோ அல்லது போக்குவரத்துக்கு பிற வாகனங்களோ இல்லாத காலம் அது.  அப்படி அவர்கள் போகும் போது அவர்களின் தலைக்கு மேலே கழுகுகளும் பருந்துகளும் வட்டமிட்டு கொண்டு கூடவே வந்தன. சார்லஸ் டார்வின் ஆச்சரியமாக அந்த பருந்துகளைப் பார்த்துக் கொண்டே அந்த பூர்வகுடிகளிடம் அவை தம்மைச் சுற்றிப் பறப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள் சொன்னார்கள்.  "சாதாரணமாக இப்படி கூட்டமாக நாங்கள் போகின்றோம் என்றால் யுத்தத்திற்காகத் தான் போவோம். யுத்தம் நடந்த பின்பு பல பிணங்கள் மண்ணில் விழும். அந்தப் பிணங்களை சாப்பிட்டு ப்   பழகியதால் கூட்டமாக யார் போனாலும் இந்தக் கழுகுகள் கூடவே வரும் " .  விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் அமெரிக்க பூர்வ பழங்குடி மக்களிடம் இருந்து ...

Keats ன் வறுமை பற்றி Robert Browning .

  சேர்ந்தே இருப்பது ? வறுமையும் புலமையும்  என்று ஒரு திரைப்பட வசனம் சொல்லும்.  அந்தக் காலம் தொடங்கி பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் கொடிய வறுமையில் வாடியிருக்கிறார்கள். சங்கப் பாடல் தொடங்கி இப்போது வரை புலமையும் வறுமையும் எப்படியோ பொருந்திப் போய்விட்டது. இது ஒரு தனிப் பாடல். புலவரின் வறுமையை இப்படிச் சொல்கிறது.  தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா,  என்னைப் படைத்தபோதே எனக்கு கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லித்தந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால்,  கையில் கொஞ்சம் தங்கத்தையாவது கொடுத்து என்னைக் காப்பாற்றியிருக்கவேண்டும். ஆனால் அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் அவதிப்படுகிறேன்.  கொஞ்சம் காசுக்காக இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையாகிவிட்டதே! பாடல் இது தான்.  கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான்            குடிக்கத்தான் கற்பித்தானா! இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்           கொடுத்துத்தான் இரட்சித்தானா! அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் ...

The growth of the soil- பாரதியாரைப் பிரமிக்க வைத்த நாவல்

இயற்கை என்ற பின்னணியில் எழுந்த இந்த இலக்கியம் தன்னைப் பிரமிக்க வைத்ததாக ஒரு நாவலைப் பாராட்டி சுதேசமித்திரனில் பாரதியார் எழுதியுள்ளார். அந்த நாவல் நார்வே நாட்டைச் சேர்ந்த  Knut Hamsun (நட் ஹெம்சன்) என்பவரால் எழுதப்பட்டது. நாவலின் பெயர் The growth of the soil. கடவுள்களால் சூழப்பட்ட இவ்வுலகில் மனிதன் தான் கதாநாயகன். அவனது உழைப்பில் உருவான உன்னதம் தானே இவ்வுலகம். இந்த நிஜத்தைச் சொல்கிறது இந்த நாவல். 1920 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த நாவலுக்கு வழங்கப்பட்டது. நாவலின் ஆரம்பத்தில் யாருமே இல்லாத வெட்ட வெளியும் காடும் நதியும் மட்டுமே காணப்படுகின்ற நிலத்தில் நடந்து செல்கிறான் ஒரு மனிதன். அவன் பெயர் ஐசக். அந்த நிலம் அவனை அழைக்கிறது. அந்த பரந்த பூமியை பராமரிக்க மனிதன் எவனும் இல்லை. தனக்குள் பேசிக் கொள்கிறான் ஐசக். கையில் ஒரு சாக்கு மூட்டை வைத்திருக்கிறான். அதில் கொஞ்சம் உணவுப் பொருள்களும் அவசியமான சில ஆயுதங்களும் இருக்கின்றன.அவன் சரியான நிலத்தைத் தேடிக் கொண்டே போகிறான். அது மனிதன் கைபடாத இடம் என்பதைப் புரிந்து கொள்கிறான் . அவன் பலசாலி. உழைப்பை நேசிப்பவன். அந்த இடத்தை சீ...

காணாமல் போனவை

 சீட்டு விளையாட்டில் (playing cards) சீட்டுக்களைக் கலக்குவதை shuffling என்று சொல்வார்கள்.  சீட்டு விளையாடும்போது ஜோக்கர் வர வேண்டுமே என நினைப்போம். வரவே வராது. நாம் சீட்டு எடுக்கும் போது வராத ஜோக்கர் ஆட்டம் முடிந்து மீண்டும் விளையாடுவதற்கு சீட்டுக்களைக் கலக்கும்போது கண்ணில்படும். அப்படிக் கலக்கும்போது இந்த ஜோக்கர் கார்டு எங்கே இருக்கிறது, எங்கே செல்கிறது என கவனிக்க முயற்சிப்போம். ஆனால் கலக்கப்படும் போது அது நம் கவனத்தில் இருந்து தப்பித்துப் போய் விடும். எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாதபடி அந்த கார்டு எங்கேயோ போய் ஒளிந்து கொள்ளும். நம்மோடு நெடுநாள் இருந்த ஒருவரை எப்போதும் மறக்க முடியாதவர் என பெருமையாகச் சொல்லுவோம். ஆனால் சில ஆண்டுகள் கழித்து நாம் மறந்து விட்டிருப்போம். அப்படி கவனம் பெறாத முகங்கள், கவனம் பெறாத நம் எண்ணங்கள் எல்லாமே காணாமல் போன கார்டுகள் ஆகிவிடும். இதை lost in the shuffle என்று சொல்லுவார்கள். கார்டுகளுக்குள் மறைந்து விட்ட ஜோக்கர் கார்டு போல, கால ஓட்டத்தில் மறைந்து போனவை குறித்த பட்டியல் நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அது மனதுக்குள் எங்கேயோ ...

மாம்பழ ஊரில் மனக்குயில்கள்

 ராமாயணத்தின் தாக்கம் உள்ள புதுக்கவிதைகள் பல.  அவற்றுள் ஒன்று. மாம்பழ ஊரில் மனக்குயில்கள் அழுகின்றன என்பது மு. மேத்தாவின் ஒரு கவிதை. கண்ணீர்ப் பூக்கள் என்ற அவரது தொகுப்பில் உள்ளது இந்தக் கவிதை.  உடைந்து கிடந்த பிரதேசத் துண்டுகளை  ஒட்ட வைத்தவன் நீ... தீண்டப்படாததாய் ஒதுக்கப்பட்டவர்க்கு தெய்வ மகத்துவம் தேடிக் கொடுத்தவன் இருநூறு ஆண்டுகளாய்  அவமானத்தால் குனிந்த எங்கள் அகலிகைத் தலைகள் நீ நடந்ததால் நிமிர்ந்தன . என்பது அந்தக் கவிதை. காந்தி இதில் ராமனாகத் தெரிவார். நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ராமாயணம் பயன்பட்டுள்ளது. இடத்தாலும் மொழியாலும் இனத்தாலும் பிரிந்து கிடந்த பாரத மக்களை ஒன்று சேர்த்து தீண்டாமையை விலக்கி அடிமை விலங்கறுத்த காந்தியடிகளை ராமனாக மேத்தா பார்க்கிறார். காந்தி  ராமனாகத் தோன்றியது எப்படி?  இனவேறுபாடு ஏதுமின்றி குகன், சுக்ரீவன், விபீடணன் போன்றோரைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொண்டவன் ராமன். அரக்கர் குலத்தை அழித்தவன். கல்லாகக் கிடந்த அகலிகைக்கு சாபவிமோசனம் தந்தவன் ராமன்.  சுதந்திர உணர்வு இல்லாமல் அடிமையாக இருந்த அந்த நாள் மக்கள் அகலிகை...

வழி நடக்கவா? வழியனுப்பவா?

இது ராமாயணத்தின் தாக்கத்தில் பிறந்த ஒரு கவிதை.  மூன்றாவது கை என்ற கவிதைத் தொகுப்பில் உள்ளது இந்தக்  கவிதை.  வழி நடந்த வைதேகி தேவையில்லை வழியனுப்பும் வைதேகிகளே தேவை விதிமுறைகள் வழிதவறும் போது வழி நடந்த வைதேகி தேவையில்லை (எஸ். சுபா ) சமுதாயத்தில் பின்பற்றப்படும் அறம்  அல்லது வழக்கம் என்பது காலம்தோறும் மாறக்கூடியது தான். அரியணையில் உட்காரப் போகிறோம் என்று இருந்த நேரத்தில் இனி காட்டு  வாழ்க்கை தான் என்றானது ராமனுக்கு. தான் படும் கஷ்டம் தன் மனைவிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறான். ஆனால் வைதேகியோ  அரண்மனையோ காடோ எதுவானாலும் கூட நடக்க முடிவு செய்கிறாள். அவள் நினைத்தபடி காட்டுக்கும் செல்கிறாள். ராமன் செய்தது நியாயம் தான் என்று நினைத்த சீதை (வைதேகி) துன்பத்தில் கூட நடக்கிறாள் . கணவன் எத்தனை தவறு செய்தாலும் கல்லானாலும் கணவன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா? விதிமுறைகள் வழிதவறும் போது வழி நடந்த வைதேகி தேவையில்லை. என்ற வரிகளில் விடை இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 28

  ஆகஸ்ட் 28, 1952 அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஆள வந்தார் கொலை இன்று தான் நடந்தது.  சைனா பஜாரில் பேனா கடை வைத்திருந்த ஆளவந்தார் இன்று கொலை செய்யப்பட்டார். தலை இல்லாத அவர் உடல் மட்டும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பப்பட்டது. மறுநாள் மானாமதுரை ரயில் நிலையத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...