Skip to main content

31 டிசம்பர்

 31 டிசம்பர் 1599 

கிழக்கு இந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காக த  கம்பெனி ஆப் மெர்சன்ஸ் ஆப் லண்டன் டிரேடிங் இன் டு தி ஈஸ்ட் இண்டீஸ் (The Company of Merchants of London Trading Into the East Indies) என்னும் கம்பெனி நிறுவப்பட்டது.  இதுதான் 1833 ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்று குறிப்பிடப்பட்டது.

 31 டிசம்பர்1600

இந்தியாவில் வாணிகம் செய்பவதற்காக கிழக்கு இந்திய கம்பெனிக்கு உரிமம் அளித்து இங்கிலாந்து மகாராணி ஆணை பிறப்பித்தார் 1858 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதேசங்களில் நிர்வாகத்தையும் இதுதான் கவனித்து வந்தது.

 31 டிசம்பர்1695 

பிரிட்டனில் ஜன்னல் வரி என்ற ஒரு வரி விதிக்கப்பட்டது இதனால் பல வீடுகளில் ஜன்னல்களை செங்கற்கள் கொண்டு அடைத்து விட்டனர்.

 31 டிசம்பர்1891

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அறிவியலைக் கதை போல கூறியவருமான பெ.நா.அப்புசாமி காலமானார்.

 31 டிசம்பர் 1915

 புவியீர்ப்பு பற்றிய புதிய கொள்கையை ஐன்ஸ்டீன் வெளியிட்டார்

 31 டிசம்பர்1921

 இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


 31 டிசம்பர்1923 

பிபிசி முதன்முதலாக பிக் பென் (Big Ben) கடிகாரத்தின் மணியோசையை ஒலிபரப்பியது.



 31 டிசம்பர்1938 

கார் ஓட்டும் போது குடித்துவிட்டு ஓட்டுகிறார்களா என்பதை கண்டுபிடிக்க உதவும் ட்ரங்கோ மீட்டர் என்னும் கருவி இந்தியானா போலீஸ் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.



 31 டிசம்பர்1985 

இந்தியாவின் முதல் மொபைல் டெலிபோன் சர்வீஸ் டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டது.





Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...