Skip to main content

3 டிசம்பர்

3 டிசம்பர் 1833:

ஆண் பெண் இரு பாலரும் சேர்ந்து கல்வி பயில்வதற்கு ஓக்கியோவில் முதன்முதல் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது 

3 டிசம்பர்1884:

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ பிறந்த நாள்.

3 டிசம்பர்1887:

 ஸ்டாக் எக்சேஞ்ச் முதன் முதலில் நேட்டிவ் ஷேர் அண்டு ப்ரோக்கர்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

3 டிசம்பர்1910:

 முதன்முதலாக நியான் குழல் விளக்கு பாரிசில் நடந்த மோட்டார் கண்காட்சியில் எரிய வைத்து காண்பிக்கப்பட்டது

3 டிசம்பர்1912:

 முதல் பால்கான் போரில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது

3 டிசம்பர்1919:

 "இந்தியாவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கொண்டு வருவதை என்னை விட வேறு எவரும் அவ்வளவு கடுமையாக எதிர்க்கவில்லை அது ஒரு இமாலய தவறு" என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மாண்டேகு என்று கூறினார். 

(பின்னாளில் அவரே அதை மாண்டேகு செம்ம்ஸ்போடு சீர்திருத்தம் என்ற பெயரில் முரண்பாடாக மாற்றிக் கொண்டார்.)

3 டிசம்பர் 1926: 

மர்ம நாவல்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியை அகதா கிறிஸ்டி மர்மமான முறையில் காணாமல் போனார்.


3 டிசம்பர் 1971:

 இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 14 நாள் போர் துவங்கியது. போரின் விளைவாக கிழக்கு பாகிஸ்தான் தனியாகப் பிரிந்து பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவானது

3 டிசம்பர் 1971:

 தொலைக்காட்சியில் முதன் முதலில் ஆங்கில செய்தி ஒளிபரப்பப்பட்டது

3 டிசம்பர்1979:

 இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி வீரர் தயான்  சந்த் காலமானார்.


3 டிசம்பர்1998:

கவிஞர் முடியரசன் மறைந்த நாள்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...