12 டிசம்பர் 1760
கான்சாகிபின் படை பூலித் தேவனின் நெற்கட்டான் சேவல் கோட்டையை தாக்கத் தொடங்கியது.
12 டிசம்பர்1882
பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாவின் நாவல் ஆனந்த மடம் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் மூலம் தான் வந்தே மாதரம் பாடல் நாடெங்கும் பரவி பெரிய எழுச்சியை உருவாக்கியது .
பத்திரிக்கைத் துறையை ஒரு வலிமையான ஆயுதமாக மாற்றிக் காட்டிய இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் 64 வயதில் காலமானார்.
ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் அயித்மாத்தொவ் பிறந்த தினம்.
இவர் எழுதிய எனது முதலாசிரியன்(The First Teacher) என்ற நூல் உலகப்புகழ் பெற்றது.
தமிழ்த் திரையுலகின், முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்த சௌகார் ஜானகி பிறந்த நாள்.
திரைப்படப் பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான ஆலங்குடி சோமு பிறந்த நாள்.
ஆண்டவன் உலகத்தின் முதலாளி.. அவனுக்கு நானொரு தொழிலாளி.. என்ற காலம் கடந்தும் புகழ்பெற்ற பாடல் இவர் எழுதியது தான்.
12 டிசம்பர்1940
விடுதலைப் போராட்ட வீரரும், நாடகக் கலைஞருமான எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் மறைந்த தினம்.
நாடக மேடையில் முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மரணத்தில் அவருக்கு கிடைத்த பெரும்பேற்றினை கௌரவப்படுத்த மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
12 டிசம்பர்1965
சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய டாங்க் விஜயாந்தா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
12 டிசம்பர்1992
ஐதராபாத் நகரில் ஹுசைன் சாகர் ஏரியில் 320 டன் எடையும் 17.2 மீட்டர் உயரமும் உள்ள புத்தர் சிலை நிறுவப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback