Skip to main content

17 டிசம்பர்

 17 டிசம்பர் 1897 

பிரிட்டனில் முதன்முதலாக நடுக்கடலில் மார்க்கோனியால் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு வானொலி மூலம் செய்தி அனுப்பப்பட்டது 

 17 டிசம்பர் 1903 

ஓகியோவைச் சேர்ந்த ஆர்வில் ரைட்டும் வில்பர் ரைட்டும் வட கரோலினாவில் உள்ள சிட்டி ஹாக் என்னும் இடத்தில் தாங்களே வடிவமைத்த 'காற்றை விட கனமான' விமானத்தில் பறந்து காட்டினார்கள்.

முதலில் ஆர்வில் 120 அடி உயரத்தில் 12 நொடிகள் பறந்தார். 

அடுத்து வில்பர் 852 அடி உயரத்தில் 59 நொடிகள் பறந்தார். 

இந்த விமானத்தின் எடை 340 கிலோ.  மூன்று  அமெரிக்கப் பத்திரிகைகள் மட்டுமே  இந்த நிகழ்ச்சியை செய்தியாக வெளியிட்டன.

 17 டிசம்பர்1918 

தேசபக்தன் என்னும் பத்திரிகை திருவிகவால் ஆரம்பிக்கப்பட்டது.

 17 டிசம்பர்1928

சைமன் கமிஷனை எதிர்த்து அக்டோபர் 30ஆம் தேதி லாகூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் தடியடி செய்ததில் லாலா லஜபதிராய்க்கு பலத்த அடிபட்டு அவர் நவம்பர் 17ஆம் தேதி காலமானார். 

லஜபதிராய் மரணத்திற்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்கார்ட்டை கொல்ல பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு ஆகியோர் முடிவு செய்தனர். 

ஸ்கார்ட் என்று நினைத்துக் கொண்டு சான்டர்ஸ் என்னும் போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளை லாகூரில் இன்று அவர்கள் சுட்டுக் கொன்றனர்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...