Skip to main content

ஜனவரி 1

 ஜனவரி 1, 1772 

டிராவலர்ஸ் செக் என்னும் பயணிகள் காசோலை முதன்முதலாக லண்டனில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.


 ஜனவரி 1,1785 

டைம்ஸ் நாளிதழ் பற்றி நமக்குத் தெரியும். உலகப் புகழ் பெற்ற நாளிதழ்களுள் இதுவும் ஒன்று. இந்த நாளிதழ் லண்டனிலிருந்து வெளி வருகிறது. அது இன்று தான் துவக்கப்பட்டது. 

முதலில் யுனிவர்சல் டெய்லி ரெஜிஸ்டர் என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கா விடுதலை இயக்கத்திற்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரெஞ்சு புரட்சிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவும் இதன் முதல் இதழ் வெளியானது. அப்போது இதனுடைய விற்பனை ஆயிரம் பிரதிகள் மட்டும்தான். இப்போதோ பல லட்சம் பிரதிகள் விற்கின்றன.



ஜனவரி 1,1842 

சென்னையில் புதிய கலங்கரை விளக்கம் இன்றுதான் அமைக்கப்பட்டது.


ஜனவரி 1, 1877

இந்தியாவின் வைஸ்ராயான லிட்டன் பிரபு டில்லியில் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் மகாராணி என்று அறிவித்தார்.


ஜனவரி 1,1904 

கார்களில் நம்பர் பிளேட் மாட்ட வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்ட விதி முதன் முதலாக லண்டனில் இன்று அமலுக்கு கொண்டுவரப்பட்டது.


ஜனவரி 1,1919

இந்தியாவில் அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளை விசாரித்து அரசுக்கு அறிவுரை கூற பிரிட்டிஷ் நீதிபதி ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை இன்று  வெளியானது. விடுதலை வீரர்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் தான் ரௌலட் சட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


ஜனவரி 1,1921

காரில் பயண விவரக் குறிப்புகளை எழுதும் லாக் புக் இன்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஜனவரி 1,1923

ரஷ்ய சோவியத் குடியரசு அதாவது USSR இன்று உதயமானது (யூனியன் அப் சோசியலிஸ்ட் சோவியத் ரஷ்யா)


ஜனவரி 1,1965 

இந்திய உணவுக் கழகம் துவங்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...