Skip to main content

Posts

Showing posts from November, 2025

நவம்பர் 30

  நவம்பர் 30: 1606 முதல் ஆங்கில நகைச்சுவை நாடகாசிரியரும் நாவலாசிரியருமான ஜான் லிலி லண்டனில்   காலமானார் .   ‘ யூப்பூயஸ் ’ ( Euphuos ) என்னும் நாவலை எழுதியவர் .   இவரது நடையே யூப்பூயிஸம் என்ற சொல் ஆங்கில அகராதியில் இடம் பெறக் காரணமாயிற்று . நவம்பர் 30: 1825 ‘ புரோமைன் ’ என்னும் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது . நவம்பர் 30: 1858 புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் . மனிதர்கள் போலவே தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை முதலில் கண்டுபிடித்து நிரூபித்தவர் அவர் . உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக. 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உய...

நவம்பர் 29

  நவம்பர் 29: 1856 இந்தியாவில் முதன் முதலாக தபால் கவர் விற்பனை ஆரம்பம் . நவம்பர்  29: 1908 கலைவாணர் என அழைக்கப்படும்  என். எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள்.  நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் புகழ் பெற்றவர் இவர்.  பிரபல நடிகை டி. ஏ. மதுரம் இவர் மனைவி.   நவம்பர்  29: 1989 திரைப்படப் பாடலாசிரியர்  மருதகாசி மறைந்த தினம்.   A. M. ராஜா , P. சுசீலா இணைந்து பாடிய  வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே  ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!   என்ற பாடலைக் கேட்கும் எவரின்  மனமும் உருகிப்போகும்.  அந்தப் பாடலை எழுதியது மருதகாசி தான்.  பிப்ரவரி  13, 1920  பிறந்த இவர் நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே  என்றும் நம்ம வாழ்க்கையில் பஞ்சமேயில்ல .... என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜன் குரலில் கேட்டிருப்போம்.  அதுவும் மருதகாசியின் பாடல் தான்.  நவம்பர் 29: 1993 இந்தியாவின் மிகப் பிரபலமான தொழிலதிபர் ஜே . ஆர் . டி . டாடா காலமானார் .

நவம்பர் 25

  நவம்பர் 25: 1948 தேசிய மாணவர் படை (NCC) துவங்கப்பட்டது . நவம்பர் 25: 1958 மோட்டார் வாகனங்களில் செல்ஃப் ஸ்டாட்டரைக் கண்டுபிடித்த சார்லஸ் பிராங்லின் கெட்டரிங் காலமானார் .  

நவம்பர் 24

  நவம்பர் 24 :1859 சார்லஸ் டார்வினின் ‘ உயிரினங்களின் தோற்றம் ’ என்னும் நூல் வெளியானது . நவம்பர் 24 :1943 திருவாங்கூர், கொச்சி,மைசூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தன.

நவம்பர் 23

  நவம்பர் 23 :1552 பெண்கள் தங்கிப் படிப்பதற்கான பள்ளிக்கூடம் முதன் முதலாக லண்டனில் கிரைஸ்ட் மருத்துவமனையில் துவக்கப்பட்டது . நவம்பர் 23 :1616 Globe (க்ளொப்) என்னும் உலக உருண்டையை வடிவமைத்த ரிச்சர்ட் ஹக்குல்யட் காலமானார் . நவம்பர்  23 :1921   கவிஞர் சுரதா பிறந்த நாள்.  இராசகோபாலன் என்ற தன் பெயரை சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா. சுப்புரத்தினம் என்பது  கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர்.  உவமைக் கவிஞர் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் இவர்.   20 ஜூன்  2006) இவர் மறைந்த நாள்.  நவம்பர்  23 :1926   சத்ய சாய் பாபா பிறந்த நாள்.  ஆந்திராவில் உள்ள  புட்டபர்த்தி கிராமத்தில்  பிறந்த சத்தியநாராயண ராயூ தான் பின்னாளில் சத்ய சாய் பாபா என்ற பெயரில் ஆன்மிகவாதியாகவும் அவதாரமாகவும் கருதப்பட்டார். அவரது பெற்றோர்  மீசரகண்ட ஈஸ்வரம்மா மற்றும் ரத்னாகரம் பெத்தவெங்கட் ராயூ தம்பதியர்.  ஆன்மிகத்தோடு தன்னுடைய அறக்கட்டளை மூலம் அறப்பணியும் செய்துவந்த இவர் 24 ஏப்ரல் 2011 அன்று உடல் நலக்க...

நவம்பர் 22

  நவம்பர் 22 : 1497 இந்தியாவிற்கு கடல்வழி காணப்புறப்பட்ட வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையை    அடைந்தார் . நவம்பர் 22 : 1774 இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட வழி வகுத்த ராபர்ட் கிளைவ் தற்கொலை செய்து கொண்டார் . நவம்பர் 22 : 1938 வரலாற்றுக் காலத்துக்கு முன்பு வாழ்ந்து அழிந்து போய்விட்டதாகக் கருதப்பட்ட கொய்லகாந்த் என்னும் மீன் தென்னாப்பிரிக்கக் கடற்பகுதியில் உயிரோடு பிடிக்கப்பட்டது . நவம்பர் 22 : 1967 தமிழறிஞர்அ.சிதம்பரநாதன் செட்டியார் காலமானார் . நவம்பர் 22 : 1972 சித்தாந்த சைவமணி என்று புகழ்பெற்ற டி . எஸ் . மீனாட்சி சுந்தரம்பிள்ளை காலமானார் . நவம்பர் 22 : 2016 சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா மறைந்த நாள் .   திருவிளையாடல் படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலான ' ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா ' , கவிக்குயில் படத்தில் வரும் ' சின்னக் கண்ணன் அழைக்கிறான் ' உட்பட பல திரைப்படப் பாடல்கள் இவர் பாடியவை .   புல்லாங்குழல் , வீணை , மிருதங்கம் என பல   வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராக ...

நவம்பர் 21

  நவம்பர் 21: 1947 ‘ ஜெய் ஹிந்த் ’ என்ற வாசகம் பொறித்த சுதந்தர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது .   மூணரை அணா மதிப்புடையது இது . நவம்பர் 21: 1970 ‘ ராமன் விளைவு ’ கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர் . சி . வி . ராமன் பெங்களுரில் காலமானார் . நவம்பர் 21: 1991 காந்தியவாதியும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவருமான   தமிழக முன்னாள்   கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியார் காலமானார் . நவம்பர் 21: 1994 சிறந்த கல்வியாளரும் பொருளியலாளருமான மால்கம் . எஸ் . ஆதிக்ஷேஷய்யா காலமானார் . நவம்பர்  21: 2022 தமிழறிஞர் ஔவை து. நடராசன் மறைந்த நாள்.  

நவம்பர் 20

  நவம்பர் 20: 1666 ஆக்ரா சிறையிலிருந்து பழக்கூடை மூலம் தப்பி வந்த சிவாஜி இன்று ரெய்கார் வந்து   சேர்ந்தார் . நவம்பர் 20: 1906 ரோல்ஸ் என்பவரும் ராய்ஸ் என்பவரும் சேர்ந்து ரோல்ஸ்சாய்ஸ் கம்பெனியை நிறுவினார்கள் . நவம்பர் 20: 1917 ஜகதீஷ் சந்திர போஸ், கல்கத்தாவில் போஸ் ஆய்வு மையத்தைத் துவக்கினார் . நவம்பர் 20: 1918 பாரதியார் புதுவை எல்லையைக் கடந்து கடலூருக்குள் நுழையும் போது பிரிட்டிஷ் போலிஸாரால் கைது செய்யப்பட்டார் . நவம்பர் 20: 1936 பி . பி . சி தொலைக்காட்சியில்   முதன் முதலில் மகளிர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது . நவம்பர்  20: 1950 இசையமைப்பாளரும் கானா பாடல்களில் புகழ்பெற்றவருமான  தேவா பிறந்த நாள்.  நவம்பர் 20: 1963 காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் . நவம்பர்  20: 2022 பாசமலர், படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய  தமிழ்த் திரைப்பட கதை, திரைக்கதை, வசன கர்த்தா  ஆரூர் தாஸ்  மறைந்த நாள்.  பெரும்பாலான  எம். ஜி. ஆர் படங்களுக்கும் சிவாஜி ...

நவம்பர் 19

  நவம்பர் 19: 1850 பிலடெல்பியாவைச் சேர்ந்த பிரடெரிக் லாங் கென்ஹயிம் போட்டோ ஸ்லைடுக்கான ( Photo slide ) காப்புரிமம் பெற்றார் . நவம்பர் 19: 1883 திறந்த ஊது உலையையும் புதிய முறையில் மின் முலாம் பூசுவதையும் கண்டுபிடித்த வில்லியம் ஸீமன்ஸ் காலமானார் . நவம்பர் 19: 1887 நியூயார்க் நகரில் சுதந்தர தேவியின் சிலைபீடத்தில் பொறிக்கப்பட்ட பாடலை எழுதிய அமெரிக்கப் பெண் கவிஞர் ரம்பா லாசரஸ் காலமானார் . நவம்பர் 19: 1905 லார்டு மிண்டோ   இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாகவும்   வைஸ்ராயாகவும் பதவியேற்றார் . நவம்பர் 19: 1917 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் . நவம்பர் 19: 1982 சிறந்த வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் புகழ் பெற்ற நடிகர் அசோகன் காலமானார் . நவம்பர்  19: 2008 புகழ்பெற்ற வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் மறைந்த நாள். படத்தில் வில்லனாக நடித்த போதும் உண்மையில் தனிமனித ஒழுக்கத்தில், பக்தியில் அப்பழுக்கற்ற புகழுக்குச் சொந்தக்காரர்.  

நவம்பர் 18

  நவம்பர் 18: 1477 வில்லியம் காக்ஸ்டனின் ‘ த டிக்டஸ்  அண்ட்  சேயிங்ஸ் ஆப் தி பிலாசபர்ஸ் ’ ( Dictes and Sayings of the Philosophers) என்ற நூல் வெளியானது. பிரிட்டனில் அச்சான முதல் நூல் இது . நவம்பர் 18: 1626 ரோம் நகரில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது . நவம்பர் 18: 1727 அம்பர் மகாராஜா இரண்டாம் ஜெய்சிங்கினால் ஜெய்ப்பூர் நகர் நிர்மாணிக்கப்பட்டது . நவம்பர் 18: 1870 ஹோமரின் ‘ ஒடிசி ’ யில் வருணிக்கப்பட்ட டிராய் நகரை கிரீசில் இதாகா என்னுமிடத்தில் ஹென்ரிக் ஹிலிமான் என்பவர் அகழாய்வின் மூலம் கண்டு பிடித்தார் . நவம்பர் 18: 1928 அமெரிக்காவில் மிக்கி மவுசை மையமாகக் கொண்டு ‘ ஸ்டீம் போட் வில்லி ’ என்னும் முதல் கார்டூன் படம் பேசும் படமாகத் திரையிடப்பட்டது . நவம்பர் 18: 1936 கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அறியப்படுகிற வ . உ . சிதம்பரம்பிள்ளை மறைந்த நாள் . நவம்பர் 18: 1962 அணுக் கொள்கைக்கு அடிப்படை அமைத்தவரும் 1922 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவ...

நவம்பர் 17

  நவம்பர் 17 :1883 ஓட்டப்பந்தயத்தில் தொடர் ஓட்ட முறை கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது .   நவம்பர்  17 :1920 பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பிறந்த நாள்.  நவம்பர்  17 :1927 செக்கோஸ்லேவாகியா நாட்டில் பிறந்து தமிழ் மீது ஆர்வம் கொண்டு  தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்த  மொழியியல் வல்லுநர்  கமில் சுவலபில் (Kamil Vaclav Zvelebil, )  பிறந்த நாள்.  தமிழ்க்கடவுளான முருகனிடத்து  மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டவர் இவர்.   ஜனவரி 17, 2009 இவர் மறைந்த நாள்.  நவம்பர் 17 :1928 லாகூரில் சைமன் கமிஷன் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஊர்வலத்தை அக்டோபர் 30 ஆம் தேதி தலைமை தாங்கி நடத்திச் சென்ற பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் மீது போலிஸார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதால் இன்று அவர் மரணமடைந்தார் . நவம்பர் 17 :1940 இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சர்தார் வல்லபாய் படேல் கைது செய்யப்பட்டார் . நவம்பர் 17 :1970 ரஷ்யாவின் லூனா 17 ராக்கெட்டிலிருந்து லூனாக் கோட் 1 என்னும் ரோவர...

நவம்பர் 16

  நவம்பர் 16 :1801 கட்டபொம்மனின் சகோதரர் செவத்தையா பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு எதிரே எழுப்பப்பட்ட கோபுரத்தில் தூக்கிலிடப்பட்டார் . நவம்பர் 16 :1893 அன்னிபெசன்ட் அம்மையார் தூத்துக்குடியில் வந்து இறங்கினார் . நவம்பர் 16 :1923 பி . பி . சி . யில் முதன் முதலாகப் பொழுதுபோக்கிற்கான இசைக் கச்சேரி ஒலிபரப்பப்பட்டது . நவம்பர் 16 :1995 இந்தியாவின் முதல் பறக்கும் ரயில் சென்னைக் கடற்கரைக்கும் சேப்பாக்கத்திற்குமிடையே   ஓடத் தொடங்கியது .   முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார் .   ஆசியாவின் முதலாவதும் உலகின் இரண்டாவதுமான பறக்கும் ரெயில் திட்டம் இது .  

நவம்பர் 11

  நவம்பர் 11: 1851 முதன் முதலாக லிவர்பூலிலிருந்து மான்செஸ்டருக்கு ரயில் மூலம் தபால் அனுப்பப்பட்டது . நவம்பர் 11: 1851 அமெரிக்காவில் டெலஸ்கோப்பிற்கு காப்புரிமம் பதிவு செய்யப்பட்டது . நவம்பர்  11: 1888 மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்.  நம் பாரத நாடு  விடுதலையடைந்த பின்  அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர் இவர்.  நவம்பர்  11: 1911 பழம்பெரும் நடிகை டி. பி. ராஜலட்சுமி பிறந்த நாள்.  இவர் தான் தமிழ்த் திரைப்படத்தில் நடித்த முதல் பெண் நடிகை.  தமிழில் வெளிவந்த, முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.  இந்தப்படம் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்தது.  நவம்பர் 11: 1917 ரஷ்யாவில் 8 மணி நேர வேலை முறை அறிவிக்கப்பட்டது . நவம்பர் 11: 1918 முதல் உலகப் போர் இன்றுடன் முடிந்தது .   பாரிஸ் நகருக்கு வடக்கே காம்பெயின் காட்டில் ரெத்தோண்டஸ் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டியில் காலை 5 மணிக்கு போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது .   கையெழுத்தான 6...