Skip to main content

செப்டம்பர் 23

 

செப்டம்பர் 23, 1803:

இரண்டாவது மராத்தா போர் மேஜர் ஜெனரல் வெல்லெஸ்லி தலைமையில் வந்த             பிரிட்டிஷ் படைக்கும் இந்தியா, ராகோஜி பான்ஸிலே தலைமையில் வந்த மராட்டியப் படைகளுக்கும் அஸாய் என்னுமிடத்தில் கடும்போர் நிகழ்ந்ததுமராட்டியப்படை எண்ணிக்கையில் ஏழு மடங்கு பெரியதுஎனினும் பிரிட்டிஷ் படையின் போர் உத்தி காரணமாக மராத்தா படை படுதோல்வி அடைந்தது.

 செப்டம்பர் 23,1809::

 பிரிட்டனைச் சேர்ந்த ஜோஸப் பிராமா என்பவர் மையூற்றும் பேனாவைத் தயாரிப்பதற்கான  காப்புரிமை பெற்றார்.



 செப்டம்பர் 23,1846:

சூரியனிலிருந்து எட்டாவது கோளான நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்ட நாள்.  

சூரியனை யுரேனஸ் ஒழுங்கற்ற முறையில் சுற்றி வருவதைக் கண்டு பிரிட்டிஷ்  வானியலார் ஜான்.சி.ஆடம்ஸ் இந்த சீரற்ற இயக்கத்துக்கு  வேறொரு கோளே காரணம் என்று 1845 ஆம் ஆண்டு கூறினார்.  

இவரது கணக்கீட்டைக் கொண்டு பிரிட்டிஷ்  வானியலார் ஜேம்ஸ் சால்லிஸ் 1846 ஆம் ஆண்டு இக்கோளை இருமுறை பார்த்தார்ஆனால் இவர் இதை ஒரு விண்மீன் எனத் தவறாகக் கருதிவிட்டார்

இதே சமயத்தில் பிரெஞ்ச் வானியலார் ஆர்பெயின் ஜூன் ஜோஸப் லெவரியர் தனியாக இக்கோளின் இருப்பிடத்தைக்             கணக்கிட்டு அப்பகுதியில் தேடும்படி ஜோன் எச்.கேல்லி (ஜெர்மனி) என்பவரைக் கேட்டுக் கொண்டார்.  

உடனே கேல்லியும்  எல்.டி.அரெஸ்ட் என்பவரும் இவர் குறிப்பிட்ட பகுதியில் தேடத் தொடங்கிய முதல் நாளே அதாவது இன்றே இக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

செப்டம்பர் 23,1848:

அமெரிக்காவின் ஜான் நார்ட்டிஸ் என்பவரால் வர்த்தக ரீதியாக முதன்முதலாக சூயிங்கம்   தயாரிக்கப்பட்டது.

 செப்டம்பர் 23, 1877:

யுரேனஸ் கோளின் ஒழுங்கற்ற வட்ட இயக்கத்தைக் கொண்டு வேறொரு கோள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டுமென்று கணித்து, நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கக்   காரணமாக இருந்த அர்பெயின் ஜீன். ஜோசப், பாரிஸ் நகரில் காலமானார்.

 செப்டம்பர் 23, 1917:

பிரிட்டிஷ் விமானம் ஒன்று ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலை குண்டு வீசித் தாக்கி மூழ்கடித்தது.  விமானத் தாக்குதலில் மூழ்கிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் இது.

செப்டம்பர் 23, 1923

சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் புகழ் பெற்று விளங்கிய எழுத்தாளர் கு. அழகிரிசாமி பிறந்த தினம்.

 செப்டம்பர் 23, 1939:

மனித உளப்பகுப்பாய்வியலை உருவாக்கிய சிக்மண்ட் ப்ராய்டு இங்கிலாந்தில்  மறைந்தார்.

செப்டம்பர் 23 , 1951:

தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கிய பி. யு. சின்னப்பா மறைந்த தினம். 

செப்டம்பர் 23 ,1973::

நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர்  பாப்லோ நெருடா மறைந்த தினம். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...