Skip to main content

செப்டம்பர் 18


செப்டம்பர் 18, 1889 

பரலி சு. நெல்லையப்பர் பிறந்த நாள். 

மகாகவி பாரதியாருக்கு உயிர் நண்பராகவும்  வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குத் தொண்டராகவும் விளங்கிய நெல்லையப்பர் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். சிறைத்தண்டனையை அனுபவித்தவர். 

 பாரதியாரின் கவிதைகளை பதிப்பித்து மக்களிடம் கொண்டு சேர்த்ததில் நெல்லையப்பரின்  பங்கு மிக முக்கியமானது.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர் என வாழ்நாள் முழுதும் உழைத்த அவர் மார்ச் 28, 1971  இயற்கை எய்தினார்.  

செப்டம்பர் 18, 1921:

சித்தரஞ்சன் தாஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


செப்டம்பர் 18, 1925 

காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய தமிழறிஞர்  இரா. சாரங்கபாணி  பிறந்த தினம். 

கா. சுப்பிரமணிய பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார்,  மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, வ. சுப. மாணிக்கம் ஆகியோரிடம் மாணவராக இருந்து நேரடியாகக் கற்கும் வாய்ப்பினைப் பெற்ற இவர் பல நூல்களை எழுதியுள்ளார். 

ஆகஸ்ட்  23, 2010 இவர் மறைந்த நாள்.  

செப்டம்பர் 18,1928:

மிக்கி மவுசை அறிமுகப்படுத்திய வால்ட் டிஸ்னியின் ஸ்டீம் போர்ட் வில்லி என்னும் கார்ட்டூன் பேசும் படம் நியூயார்க்கில் திரையிடப்பட்டது.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...