Skip to main content

இதுவல்லவா ஆசிரியர் மாணவர் உறவு

'தமிழ்த்தாத்தா' உ.வே.சா வின் ஆசிரியராகத் திகழ்ந்த  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தான் அந்த ஆசிரியர். 
மதுரையில் பிறந்தவர். அவரது பெற்றோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணிபுரிந்து வந்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் 6.4.1815 அன்று பிறந்த தங்கள்  குழந்தைக்கு  மீனாட்சி சுந்தரம் எனப்பெயர் சூட்டினர்.

சிறு வயதிலேயே இலக்கியங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டார். பல ஆசிரியர்களிடம் பாடம் கேட்டு இலக்கணப் புலமையும் பெற்றார்.

மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி". 

தந்தை மறைவின் வேதனையின் வடிகாலாக அவர் ஒரு வெண்பா பாடினார்.

"விரோதி" என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்று. 

அவ்வெண்பா இது தான். 

முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும் 
தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும் 
ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால் 
ஈண்டேது செய்யாய் இனி.

பல சிவத்திருத்தலங்களுக்கும் சென்று, அத்தலங்களைப் பற்றித்
தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றியவர் அவர்.

ஒவ்வொரு கோவிலில் அவர் வணங்கும்போது தமிழுக்குப் புதிய புதிய படைப்புகள் கிடைத்தன.

மீனாட்சி சுந்தரம்பிள்ளை திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார்.

திருவாவடுதுறை ஆதீனம் தான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற பட்டத்தை வழங்கியது. அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

எப்படியாவது மகா வித்துவானின் மாணவனாக வேண்டும் என்ற விரும்பிய உ.வே.சாமிநாதய்யர் 1871ல் மகாவித்துவானின் மாணாக்கரானார். 

அந்த நாள் முதல் தன் ஆசிரியர் நிழலிலேயே இருந்தார் உ. வே.சா. எந்த நிலையிலும் தன் ஆசிரியரின் பெயரைக் கூட சொல்லாமல் 'ஐயா' என்றே பக்தியோடு இருந்த அவர் தன் ஆசிரியரின் வாழ்நாள் முழுதும்  வேறு யாரையும் மகா வித்துவான் என்று அழைக்கவில்லை. 

மகா வித்துவான் பிள்ளை 1876ல் நோய்வாய்ப்பட்டார். தன் இறுதி நிமிடங்களில் தன் ஒரு மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், தன் இன்னொரு மாணாக்கர்  உ.வே.சா வை திருவாசகம் படிக்குமாறு கூறினார். அவர்  திருவாசகம் அடைக்கலப் பத்தைப் பாட,  அதைக் கேட்டுக்கொண்டே இறைவனடி சேர்ந்தார். 

அந்த நாள் பிப்ரவரி 1. வருடம் 1876. அப்போது பிள்ளை அவர்களுக்கு வயது 61.

ஒரு ஆசிரியர் மாணவர் உறவு இப்படிக் கூட இருக்க முடியுமா என்று வியந்து  போகும்படி அமைந்தது அவர்கள் வாழ்க்கை.
 ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய ஒரு நூல் உ.வே.சா வின் என் சரிதம். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...