Skip to main content

அவர் உடல் நலம் எப்படி இருக்கிறது?

 

சீதை அசோகவனத்தில் சிறையில் மிகுந்த மனச்சோர்வுடன் வாடியிருக்கிறாள்.

இனி ராமனைக் காண முடியாதோ என்ற ஏக்கம் ஒரு புறம்!

இராவணனின்  கொடுமைகள் ஒரு புறம்!

அரக்கியரின் அச்சுறுத்தல்கள் ஒரு புறம்!

எதையும் தெரிந்து கொள்ளமுடியாத பலத்த காவல்.

இனியும் உயிர் தரித்திருப்பதில் விருப்பமில்லாமல் இருக்கும் போது, அனுமன்  வந்து, தான் இராமனின் தூதன் என்று  அறிவிக்கிறான். 

சொன்னவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுமனிடம் பேசுகிறாள்.
தன்னுடைய துன்பம்,  இராவணன் செய்யும் கொடுமைகள், அரக்கியரின் அச்சுறுத்தல்கள் எதைப் பற்றியும் கூறவில்லை.

அனுமனிடம் சீதை கேட்டது இது தான் .

இராமனின் உடல் நிலை எப்படி இருக்கிறது?  நீ அறிவாயா?  

எய்து அவன்உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி  ஓங்க,
'உய்தல் வந்துஉற்றதோ ?' என்று அருவி நீர் ஒழுகு  கண்ணாள்,
'ஐய ! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி ?'  என்றாள்.

(கம்ப இராமாயணம்)

பொருள்:

எய்து அவன் உரைத்தலோடும் -  தான்  ராம தூதன்  என்று அனுமன்  சொன்னவுடன்

எழுந்து பேர் உவகை ஏற - மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து

வெய்து உற ஒடுங்கும் மேனி  - துன்பம் உற்றதால் மெலிந்த உடம்பு

வான் உற விம்மி ஓங்க - வானம் வரை விம்மி பெரிதாக

உய்தல் வந்துஉற்றதோ ? என்று - நல்ல வழி வந்து விட்டதோ என்று

அருவி நீர் ஒழுகு கண்ணாள் - அருவி போல நீர் வழியும் கண்களைக் கொண்ட சீதை

ஐய ! சொல், - ஐயனே சொல்

ஐயன் மேனி எப்படிக்கு  - இராமனின் உடல் நலம் எப்படி இருக்கிறது

அறிதி ? என்றாள் - நீ அறிவாயா?  என்றாள்

கண்ணில் நீரைக் காணாமல்

கவலை ஏதும் கூறாமல்

என்னை எண்ணி வாழாமல்

உனக்கென நான் வாழ்வேன்.

(கண்ணதாசன்)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...