Skip to main content

இப்படிப் படுத்துகிறான்!

குழந்தை கண்ணன் பிறந்த பின்பு ஆயர்பாடி எப்போதும் விழாக் கோலத்தில் இருக்கிறது. குழந்தை வளர்ந்து வருகிறான். வீட்டுக்கு வெளியே விழாக் கோலம். வீட்டின் உள்ளே  புலம்பல் கேட்கிறது. 

யசோதை தான்,தன் தோழியர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

நீங்கள் எல்லாம் வயதுக்கு ஏற்றவாறு குறும்பு செய்யும் பிள்ளைகளைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு அமைதியாக சாதுவாக இருக்கின்றன. அதனால் உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.

இங்கே என் பிள்ளை செய்வதைப் பாருங்கள். இவனைத் தொட்டிலில் படுக்க வைத்தால், தொட்டில் கிழிந்து போகிற அளவு காலால் உதைக்கிறான். அந்தப் பிஞ்சுக் கால்களுக்கு வலிக்குமே என்று அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டால் ஒரு இடத்தில் இருந்தால் தானே. அப்படியும் இப்படியும் எம்பிக் குதிக்கிறான். எனக்கு இடுப்பெல்லாம் விட்டுப் போகிறது.

இப்படிக் குதிக்கிறானே இவனுக்கு நோகுமே என்று எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டால் கால்களால் வயிற்றில் உதைக்கிறான். எனக்கும் இவன் குறும்புகளைச் சமாளிக்கும் வலிமை இல்லை. பாருங்கள்! நான் எவ்வளவு மெலிந்து போய்விட்டேன்.

இப்படி, குழந்தையின் குறும்புகளை துன்பம் போலச் சொல்லிக் கொண்டே அந்த இன்பத்தை அனுபவிப்பது யசோதை மட்டுமா என்ன! 

ஒவ்வொரு தாயும் யசோதை போல ... அதனால் தானோ என்னவோ ஒவ்வொரு குழந்தையும் கண்ணன் போல...

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. 


கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!

(பெரியாழ்வார் - பெரிய திருமொழி)


சொல்லும் பொருளும்

கிடக்கில் - கிடத்தி வைக்கும்பொழுது

மருங்கு - இடுப்பு

இறுத்திடும் - முறித்துவிடும்

ஒடுக்கி - தன்னுடன் சேர்த்து வைத்து

புல்கு - தழுவு

புல்கில் - தழுவிக் கொண்டால் 

உதரம் - அடிவயிறு

மிடுக்கு - வலிமை

நங்காய் - தோழிகளே .

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...