Skip to main content

கந்தகோட்டம் என்றும் பேசும்


ஜனவரி 30 வள்ளலார் நினைவு நாள்.

இராமலிங்க வள்ளலார் முருகப் பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டவர்.

சென்னை பாரிமுனை (பாரிஸ் கார்னர்) கந்தகோட்டம் முருகன் கோவில் தான் அவர் பெரும்பகுதி நேரம் இருந்த கோவில் வளாகம். அந்த கந்தகோட்டம் முருகன் மீது வள்ளலார் திருப்பதிகம் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகக் கொண்டவர்.

திருவாசகத்தில் திளைத்தவர்.

எந்த உயிருக்கும் துன்பம் தரக் கூடாது என்ற (ஜீவகாருண்யம்) கொள்கை கொண்டவர்.

பசிப்பிணி போக்குவது பெரும் புண்ணியம் என்று போதித்தவர்.

சைவ சமயத்தைச் சார்ந்த போதும் திருமாலைப் போற்றியவர்.

இறைவனை ஜோதி வடிவமாகத் தரிசித்தவர்.

ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு பாவிலும்  பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தவர்.

192 சீர்களில் இவர் பாடிய  ஆசிரிய விருத்தம் இன்றும் தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் என்ற பெருமையுடையது.

அடி எண்ணிகையில் பெரிய ஆசிரியப்பாவும் இவர்  பாடியது தான். 1596 அடிகள்.

தொழுவூர் வேலாயுத முதலியார் இவருக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் எனப் பெயரிட்டதோடு இவர் பாடல்களைத் தொகுத்து  'திருவருட்பா' என்ற  பெயரில் பதிப்பித்தவர்.

அருட்பா என்ற இவரது பாடல்களை   “மருட்பா” என்று கூறினார் ஆறுமுக நாவலர்.

வடலூரில் 1865 இல் சன்மார்க்க சங்கம் தொடங்கி, 1872 இல் அதை சத்திய ஞானசபை ஆக்கினார்.

பல நூல்கள், கட்டுரைகள் என வள்ளலாரின் தமிழ்ப் பணி, அவரது ஆன்மீகப் பணி போலவே , அறப்பணி போலவே அவரது புகழை என்றும் பேசும்.

1823 இல் அக்டோபர் 5 ஆம் நாள் பிறந்த வள்ளலார் 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நடு இரவில் இயற்கை எய்தினார். 51 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த மாமனிதர் அவர்.

என்றும் வாழும் அவரது வாக்குகள்:

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...