Skip to main content

My favourite sweet

 


கா.தரணிசாய்ராம்

II – B

      எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் ஆகும் “மைசூர் பாக்” ஏன் என்றால் மைசூர்பாகின் சுவை,  நிறம், வாசனை மற்றும் வடிவம் மிகவும் அருமையாக இருக்கும்;;. என் பாட்டி “மைசூர் பாக்” தயார் செய்யும் நேரத்தில் அதன்  வாசனை என் மூக்கை துளைக்கும்;.

 

M.S.Indhiraprasath

II-B

     எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பச்சைப்பயிறு லட்டு.

     அது மிகவும் சுவையாக இருக்கும்.

     பச்சைப்பயிறு, நாட்டுச்சாக்கரை, முந்திரி, பாதம், ஏலக்காய், நெய் கலந்து செய்வதால்

    உடலுக்கு சத்து மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.

 

ம.லிபிகா

II – B

      எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் கேசரி. ஏனெனில் அது இனிப்பாகவும் முந்திரி, திராட்சை, நெய் போன்றவற்றுடன் கலந்து செய்வதால் மணம் நன்றாக இருக்கும்.

 

K.N.Mruthula

   II-B    

 

எனக்கு பிடித்த இனிப்பு பண்டம் “ஜிலேபி”

     அதன் சிவப்பு நிறம் எனக்கு பிடிக்கும். அது உளுந்து மாவில் செய்யப்படுகிறது.

     உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

     தற்போது கருப்பட்டி, வெல்லம் கலந்து செய்யப்படுகிறது.

     ஜிலேபி போல லட்டு, குலோப்ஜாமூன் போன்ற இனிப்புகளும் மிகவும் பிடிக்கும்.  

                நன்றி.

 

K.N.மிதுவ்னா

II – B

     எனக்கு பிடித்த இனிப்பு பண்டம் குலோப்ஜாமூன்

     பால்கோவா, சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிறது.

     இது சிறிய மற்றும் பெரிய உருண்டைகளாக செய்யப்படுகிறது.

     மேலும் எனக்கு அனைத்து விதமான “பாயாசம்” வகைகளும் பிடிக்கும்.

     பால் கொழுக்கட்டை மிகவும் பிடித்த ஒன்று.

நன்றி

 

K.M. Mithul

 II-A

      எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு எள்ளு உருண்டை. அது மிகவும் சுவையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் அதில் எள்ளு,  வெல்லம்,  வேர்கடலை சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

மு.N.மித்ராஸ்ரீ

II-A

எனக்கு பிடித்த இனிப்பு பண்டம்

 

     எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் ‘மைசூர்பாகு’.

     இந்த இனிப்பு பண்டம் கடலைமாவு, நெய் போன்றவற்றால் செய்யப்படுகிறது.

     எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு மற்றும் இதில் சர்க்கரை தவிர வெல்லம், கருப்பட்டி போன்ற    

 இனிப்பு பொருட்கள் கொண்டு மைசூர்பாகு தயாரிக்கப்படுகிறது.

     மேலும் பூந்தி, லட்டு, பால்கோவா போன்ற இனிப்புகள் எனக்கு பிடிக்கும்.

நன்றி

 

டீ.மு. நேகா

II-A

      எனக்கு பிடித்த இனிப்பு பண்டம் பால்கோவா. இது பாலால் செய்யப்படும். பண்டிகை நாட்களில் என் வீட்டில் வாங்கும் பலகாரங்களில் இதுவும் ஒன்று. அதில் எனக்கு மிகவும் பிடித்தது பால்கோவா தான். அதன் சுவை நினைத்தாலே எனக்கு நாக்கில் எச்சில் ஊறும். இது ஸ்ரீவில்லிபுத்தூர் ஊருக்கு மிகவும் பிரபலமானது.

 

A.Nivetha Nithya

II-A

      எனக்கு குலோப்ஜாமூன்,  ஜிலேபி,  லட்டு மிகவும் பிடிக்கும். குலோப் ஜாமூன் பாகுடன் சேர்த்து உண்ண மிகவும் ருசியாக இருக்கும். இந்த இனிப்பு வகைகள் எப்போது கொடுத்தாலும் ருசியாக விரும்பி உண்ணுவேன். நான் கோபித்துக் கொண்டால் என் பெற்றோர் எனக்கு இதை கொடுத்து என்னை சமாதானம் செய்து என்னை மகிழ்விப்பார்கள்.

 

A.J. Suhanthan

II-A

      எனக்கு பிடித்த தின்பண்டம் குலோப்ஜாமூன். அது மிகவும் இனிப்பாக இருக்கும்.

 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...