Skip to main content

இது சமையல் குறிப்பு அல்ல

 

மா, பலா, வாழை என்ற முக்கனிகளை தனித் தனியே பிழிந்து  வடி கட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.  

பின்  அவற்றை ஒன்றாகக் கலந்து சிறிதளவு சர்க்கரையையும்   கற்கண்டுத் தூளையும்  சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

அதனுடன் நல்ல தேன் சிறிது சேர்த்துக் கலக்க வேண்டும்.

பின் தேவையான அளவு பசும் பால் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்துக்  கொள்ள வேண்டும்.

அதனுடன்  கொஞ்சம் முந்திரி, பாதாம்  பருப்புகளை பொடியாகத் தூவி விட வேண்டும்.

அதன் மேல் நல்ல நெய்  சிறிதளவு விட்டு  இளஞ்சூட்டில்  இறக்கி எடுக் வேண்டும்.

அதைச் சிறுசிறு துண்டுகளாகச் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் சுவை எப்படி இருக்கிறது?

அந்தச் சுவையை விட மேலான இனிய தெளிந்த அமுதே

 திருவரங்கத்தில் நடனமாடும் பெருமானே!

உன் திருவடிகளில் என் பாமாலையை அணிகலனாக அணிந்து எனக்கு அருள்புரிய வேண்டும்.

 திரு அருட்பா  

 

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே

 

 பொருள்:

 

தனித்தனிமுக் கனிபிழிந்து  - தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து

வடித்தொன்றாக் கூட்டி -வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து 

சருக்கரையும் - கொஞ்சம் சர்க்கரை

கற்கண்டின் பொடியும் -கொஞ்சம் கற்கண்டின் பொடி

மிகக் கலந்தே - நன்றாக கலந்து.  

தனித்தநறுந் தேன்பெய்து - சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து

பசும்பாலும் - அதோடு கூட கொஞ்சம் பசும் பால்

தெங்கின் தனிப்பாலும் - மற்றும் தேங்காய்ப் பால்

சேர்த்து - சேர்த்து

ஒருதீம் பருப்பிடியும் விரவி - அதோடு கொஞ்சம் முந்திரி, பாதாம்  போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி

இனித்தநறு நெய்யளைந்தே - அது மேல்நல்ல நெய் விட்டு 

இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த - இளஞ்சூட்டில்  இறக்கி எடுத்த

சுவைக் கட்டியினும்அந்தச் சுவையை விட மேலா 

இனித்திடுந்தெள்ளமுதே - இனிய தெளிந்த அமுதே!

அனித்தமற(அநித்தம் + அற)- நிலையில்லாதவை விலக

திருப்பொதுவில் விளங்குநடத்தரசே ! -திருவரங்கத்தில் நடனமாடும் பெருமானே!

அடிமலர்க்கென் சொல்லணியாம் -உன்னுடைய திருவடிகளில் என் பாமாலையை

அலங்கலணிந் தருளே - அணிகலனை அணிந்தருளே

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...