Skip to main content

போ என்ற வார்த்தையால் வாவென்கிறாய்!

திருப்பாவை திருவெம்பாவையில்  வரும் ஒரு சொல் போதுவீர்.

மார்கழி மாதம் பிறந்து விட்டது.  முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும்  நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனுமான நாராயணனே கண்ணனாக அவதரித்திருக்கிறான்.  அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் .
(பா 1)

 

இளமையான கிளி போன்றவளே, என்ன இது? இவ்வளவு பெண்கள் எழுந்து வந்த பின்பும் நீ உறங்குகின்றாயே’ என்று துயில் எழுப்ப வந்தவர்கள் கூறினார்கள்.

அதற்கு உறங்கிய பெண் ‘பெண்களே, இப்போதே புறப்பட்டு விட்டேன்.  சில் என்று கோபத்துடன்அழைக்க வேண்டாம்.’ என்று கூறினாள்.

அதற்கு கூட்டத்தினர் ‘நீ பேசுவதில் வல்லவள். உன் கடுமையான சொற்களையும், வாயையும் நெடுநாட்களாக நாங்கள் அறிவோம்’ என்றனர்.

உறங்கிய அப்பெண் ‘இவ்வாறு பேசும் நீங்கள்தான் பேச்சில் வல்லவர்கள். நானே ஏமாற்றுக்காரியாக இருக்கிறேன். நீங்கள் வேண்டுவது யாது?’ என்று கேட்டாள்.

அதற்கு கூட்டத்தினர் ‘நீ விரைந்து எழுந்து வா. எங்களிடம் இல்லாத தனிச்சிறப்பு உனக்கு என்ன உள்ளது?’ என்று வினவினர்.

அப்பெண் ‘எல்லோரும் வந்து விட்டனரா?’ என்று கேட்டாள். அதற்கு அவர்கள் ‘நீயே வந்து எல்லோரையும் எண்ணிப் பார்த்துக் கொள்.’ என்றனர்.

அவள் அவர்களிடம் ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்’ என்று கேட்டாள்.

அவர்கள் ‘கம்சன் முதலான பகைவர்களின் மிடுக்கினை அழித்த மாயனான கண்ணனைப் பாடுவதற்காகத்தான் அழைக்கின்றோம்.’ என்று கூறினர்.

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரா போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்  (பா 15)


இந்தத் திருப்பாவைப் பாசுரங்களில் வரும் சொற்களான 'நீராடப் போதுவீர்' 'போதுமினோஎன்ற சொற்களுக்கு 'நீராட வாருங்கள்', 'வாருங்களேஎன்ற பொருளையும், 'போதருகின்றேன்', 'போதாய்', 'போந்தாரா', 'போந்தார்', 'போந்து எண்ணிக் கொள்', என்ற சொற்களுக்கு 'வருகின்றேன்', 'வருவாய்', 'வந்தாரா', 'வந்தார்', 'வந்து எண்ணிக்கொள்என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.



    எந்த ஒரு செயலையும் நாம் மனம் விரும்பிவிளையாட்டு போல் செய்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.

    ஆன்மிகத்திலும் அது போலவேநாம் இறைவனை வணங்குவதையும்இறை வணக்கத்திற்குரிய சடங்குகளையும் மகிழ்வாகவே செய்ய வேண்டும். அதைத் தான் இந்தப் பாடல் உணர்த்துகின்றது.

    சிறு பெண்கள் விளையாட்டாகப் பேசிக் கொண்டுதங்கள் தோழியை உடன் அழைத்துச் செல்வது என்பது ஒரு குறியீடு.

    கலகலப்பான அரட்டை போல கடவுளை வழிபடச் சொல்லித் தரும் உளவியல் பக்திநெறி பண்பாடு மொழிவளம் என எந்தக் கோணத்தில் பார்த்தாலும் படிக்கப் படிக்கச் சுவையானவை இந்தப் பாடல்கள்.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...