Skip to main content

திருமண வயது அன்றும் இன்றும்

 

திருமண வயது அன்றும் இன்றும்

            சிலப்பதிகாரக் காலத்தில் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு) தான் முதன்முதலாக ஆண், பெண்ணிற்கான திருமண வயது குறிப்பிடப்படுகிறது.  கோவலன் கண்ணகி திருமணத்தின்போது கோவலனுக்கு வயது 16 என்றும் கண்ணகிக்கு 12 என்றும் இளங்கோவடிகள் கூறுகிறார்.

கண்ணகி :  மாக வான் நிகர் வண்கை, மாநாய்க்கன் குலக்கொம்பர்

                         ஈகைவான் கொடி அன்னாள் ஈராறாண்டு அகவையாள்.

கோவலன் :   இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண்டு அகவையான்

            சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியாருக்கு 12 வயதானதும் திருமண ஏற்பாடு செய்தனர் என்ற குறிப்பு வருகிறது.

            காலப்போக்கில் இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து வைக்கும் போக்கு நிலவியது. 

            1891-ஆம் ஆண்டு குழந்தைத் திருமணம் தவறு எனக் கருதப்பட்டு, குழந்தை திருமணத்தைத் தடுக்கச் சட்டம் இயற்றப்பட்டது.  பெண்ணுக்கு வயது 12 ஆன பின்பே திருமணம் என்பது சட்டமாக்கப்பட்டது. 

1925ல் பெண்ணின் திருமண வயது 13 என உயர்த்தப்பட்டது.

1929-ல் சாரதா சட்டம் மூலம் பெண்ணின் திருமண வயது 14 என நிர்ணயிக்கப்பட்டது. 

1949-ஆம் ஆண்டு இச்சட்டம் திருத்தப்பட்டு பெண்ணின் திருமண வயது 15 ஆக உயர்த்தப்பட்டது.

1956-ல் பெண்ணின் திருமண வயது 16 என்றும் ஆணின் திருமண வயது 19 என்றும் மாற்றப்பட்டது. 

            இன்றைய சட்டப்படி பெண் 18 வயதையும் ஆண் 21 வயதையும் பூர்த்தி செய்த பின்பே திருமணம் நடத்த முடியும்.

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...