Skip to main content

Posts

Showing posts from September, 2025

அக்டோபர் 1

  அக்டோபர் 1, 1792: பிரிட்டனில் மணியாடர் பட்டுவாடா அறிமுகம் செய்யப்பட்டது . அக்டோபர்  1, 1847: அன்னிபெசன்ட் அம்மையார் பிறந்த நாள் . அக்டோபர் 1, 1848: முதன் முதலாக பாஸ்டன் நகரில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக தனியாக ஒரு  பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1854: இந்தியாவில் முறையான தபால் போக்குவரத்து துவங்கப்பட்டது . அக்டோபர் 1,1869: ஆஸ்திரியா அஞ்சல் நிலையத்தில் முதன் முதலில் போஸ்ட் கார்டு விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1870: பிரிட்டனும்  ஆஸ்திரியாவைப்  பின்பற்றி    போஸ்ட் கார்டு விற்பனையைத் துவக்கியது . அக்டோபர் 1,1880: எடிசன் லாம்ப் வொர்க்ஸால் முதன்முதலில் மின் விளக்குகள் வாலிப ரீதியில் தயாரிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1882: பிரிட்டனில் ரிப்ளை பெய்டு போஸ்ட் கார்டு விற்பனை ஆரம்பிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1918 மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரும் தொழிலதிபருமான கண் மருத்துவர் ஜி.வெங்கடசாமி பிறந்த நாள். அக்டோபர்  1, 1928: நடிகர் திலகம...

செப்டம்பர் 29

  செப்டம்பர் 29, 1688: சென்னை மாநகராட்சி இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநகராட்சியானது .    1753 ஆம் ஆண்டுவரை நீதி நிர்வாகத்தையும் இது தான் மேற்கொண்டது .   1919 ஆம்   ஆண்டில்   பஸ்   போக்குவரத் தையும்   வானொலி ஒலிபரப்பையும் முதன் முதலில் மாநகராட்சி தான் தொடங்கியது . செப்டம்பர் 29,1829: லண்டனில் முதல் போலீஸ்படை அமைக்கப்பட்டது . செப்டம்பர் 29,1836: மதராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி நிறுவப்பட்டது . செப்டம்பர் 29,1910: லண்டனில் ஜேம்ஸ் ஹென்றி என்பவர் எலிப்பொறி கண்டுபிடித்து , காப்புரிமம் பெற்றார் . செப்டம்பர் 29,1916: உலகிலேயே முதன்முதலாக நூறுகோடி டாலருக்கு மேல் சொத்துச் சேர்த்து  ஜான் . டி . ராக்பெல்லர் பெருங்கோடீஸ்வரர் எனப் பெயர் பெற்றார் .   செப்டம்பர் 29,1920: அமெரிக்காவில் ரேடியோக்கள் விற்பனை துவங்கியது . செப்டம்பர் 29, 1963: இந்தியாவின்   முதல்  கோளரங்கம் ( பிளானட்டோரியம்)   பிர்லா அறக்கட்டளையால் அமைக்கப்பட்டது .  ...

செப்டம்பர் 26

செப்டம்பர் 26, 1816: இன்று பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது .   செப்டம்பர் 26,1842: தானே தன்னை அடக்கம் செய்து கொண்ட வினோதம்  மெக்ஸிகோ தளபதி அன்டோனியோ தி சாண்டா அண்ணா 1832 ஆம் ஆண்டு பிரெஞ்சு படையுடன் போரிடும்போது காலில் பலத்த காயம் படவே காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதாயிற்று . அகற்றப்பட்ட அந்தக் காலை அவர் தன் வீட்டில் நான்கு ஆண்டுகள் பதப்படுத்தி வைத்திருந்தார் . அதன் பின் அவர் மெக்ஸிகோவின் ஜனாதிபதியாக ஆகிவிட்டார் . அவரது ஆதரவாளர்கள் அந்தக் காலை பாண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று செயின்ட் பாவ்லா   தேவாலய வளாகத்தில் இன்று அடக்கம் செய்தனர் . செப்டம்பர்  26, 1913: திருக்குறள்   வீ . முனுசாமி   பிறந்த   நாள் .   செப்டம்பர் 26, 1919: இந்திய ரோட்டரி கிளப்பின் முதல் கூட்டம் கல்கத்தாவில் நடந்தது .   செப்டம்பர் 26,1942: CSIR  தொடங்கப்பட்டது . செப்டம்பர் 26, 1954: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மறைந்தார் .   " மங்கையராய்ப் பிறப்பதற்க...

செப்டம்பர் 25

  செப்டம்பர் 25, 1524: வாஸ்கோடகாமா போர்ச்சுகீசிய இந்தியாவின் வைஸ்ராயாக இந்தியாவிற்குக் கடைசி     முறையாக வந்து சேர்ந்தார் .  வந்த மூன்றாவது மாதமே டிசம்பர் 24 ஆம் தேதி கொச்சியில் காலமானார் . செப்டம்பர் 25,1690: அமெரிக்காவின் முதல் செய்தித்தாள் பப்ளிக் அக்கரன்ஸஸ் போத் ஃபாரின் அண்ட டொமஸ்டிக் வெளியான நாள் .  லண்டனிலிருந்து பாஸ்டனுக்குக் குடியேறிய பெஞ்சமின்       ஹாரிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது .  அங்கு நடந்த போரைக் கடுமையாக விமர்சித்ததன் காரணமாக முதல் இதழுக்குப் பிறகு இதற்கு அரசு தடை விதித்துவிட்டது .  அன்றைய வர்ஜீனியா கவர்னர் பெர்க்லி , இரண்டாம் சார்லஸ் மன்னருக்கு எழுதிய கடிதத்தில் படிப்பறிவு மக்களிடையே கீழ்ப்படியாமையை உருவாக்கி விடும் .  எனவே இது தடை செய்யப்பட்டது என்று கடிதம் எழுதினார் . செப்டம்பர் 25,1857: பிரிட்டிஷ் படை லக்னோவை முற்றுகையிட ஆரம்பித்தது .   செப்டம்பர் 25,1897: பெட்ரோலில் ஓடும் முதல் மோட்டார் பஸ் லண்டனில் துவக்கப்பட்டது . செப்டம்பர் ...