Skip to main content

Posts

Showing posts from 2024

ஜனவரி 1

 ஜனவரி 1, 1772  டிராவலர்ஸ் செக் என்னும் பயணிகள் காசோலை முதன்முதலாக லண்டனில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.  ஜனவரி 1,1785  டைம்ஸ் நாளிதழ் பற்றி நமக்குத் தெரியும். உலகப் புகழ் பெற்ற நாளிதழ்களுள் இதுவும் ஒன்று. இந்த நாளிதழ் லண்டனிலிருந்து வெளி வருகிறது. அது இன்று தான் துவக்கப்பட்டது.  முதலில் யுனிவர்சல் டெய்லி ரெஜிஸ்டர் என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கா விடுதலை இயக்கத்திற்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரெஞ்சு புரட்சிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவும் இதன் முதல் இதழ் வெளியானது. அப்போது இதனுடைய விற்பனை ஆயிரம் பிரதிகள் மட்டும்தான். இப்போதோ பல லட்சம் பிரதிகள் விற்கின்றன. ஜனவரி 1,1842  சென்னையில் புதிய கலங்கரை விளக்கம் இன்றுதான் அமைக்கப்பட்டது. ஜனவரி 1, 1877 இந்தியாவின் வைஸ்ராயான லிட்டன் பிரபு டில்லியில் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் மகாராணி என்று அறிவித்தார். ஜனவரி 1,1904  கார்களில் நம்பர் பிளேட் மாட்ட வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்ட விதி முதன் முதலாக லண்டனில் இன்று அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜனவரி 1,1919 இந்தியாவில் அரசு எதிர்ப்பு...

31 டிசம்பர்

 31 டிசம்பர் 1599  கிழக்கு இந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காக த  கம்பெனி ஆப் மெர்சன்ஸ் ஆப் லண்டன் டிரேடிங் இன் டு தி ஈஸ்ட் இண்டீஸ் ( The Company  of Merchants of  London Trading  Into  the East Indies)  என்னும் கம்பெனி நிறுவப்பட்டது.  இதுதான் 1833 ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்று குறிப்பிடப்பட்டது.  31 டிசம்பர்1600 இந்தியாவில் வாணிகம் செய்பவதற்காக கிழக்கு இந்திய கம்பெனிக்கு உரிமம் அளித்து இங்கிலாந்து மகாராணி ஆணை பிறப்பித்தார் 1858 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதேசங்களில் நிர்வாகத்தையும் இதுதான் கவனித்து வந்தது.  31 டிசம்பர்1695  பிரிட்டனில் ஜன்னல் வரி என்ற ஒரு வரி விதிக்கப்பட்டது இதனால் பல வீடுகளில் ஜன்னல்களை செங்கற்கள் கொண்டு அடைத்து விட்டனர்.   31 டிசம்பர்1891 சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அறிவியலைக் கதை போல கூறியவருமான பெ.நா.அப்புசாமி காலமானார்.  31 டிசம்பர் 1915  புவியீர்ப்பு பற்றிய புதிய கொள்கையை ஐன்ஸ்டீன் வெளியிட்டார்  31 டிசம்பர்1921  இன்சுலின் கண்டுபிடிக்...

30 டிசம்பர்

 30 டிசம்பர் 1687  சென்னை நகர சபை துவக்கப்பட்டது.  30 டிசம்பர் 1691 பாயிலின் விதியை வகுத்து அளித்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியல் மற்றும் வேதியல் விஞ்ஞானி ராபர்ட் பாயில் லண்டனில் காலமானார்.   30 டிசம்பர்  1703 ஜப்பானில் ஈடோ என்று அழைக்கப்பட்ட இன்றைய டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சம் பேர் பலியானார்கள். 30 டிசம்பர் 1879 ரமண மகரிஷி இன்றுதான் பிறந்தார்.  30 டிசம்பர்1931  பன்மொழிப் புலவரும் கான்கிரீட் கலவையில் ஏற்படும் சிக்கல்களை கணக்கிடக்கூடிய கால்குலோ கிராப்  கருவியைக் கண்டுபிடித்தவருமான பா.வே.மாணிக்கவேல் நாயக்கர் காலமானார்.  30 டிசம்பர்1943  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தலைமை கமிஷனர் வீட்டில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினார்.  30 டிசம்பர்1971  இந்திய விண்வெளி திட்டத்தின் நிர்மாண சிற்பி டாக்டர் விக்ரம் சாராபாய் திருவனந்தபுரத்தில் காலமானார். 30 டிசம்பர் 2013 இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை அளித்து பெரும்புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் மறைந்த தினம்.

29 டிசம்பர்

 29 டிசம்பர் 1530 முகலாய மன்னராக டெல்லியில் ஹுமாயூன் முடிசூட்டிக்கொண்டார்.  29 டிசம்பர்1944  லட்சுமி காந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார்.  29 டிசம்பர் 1977  காரில் இருந்தபடியே திரைப்படம் பார்க்கும்படியான உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கம் மும்பையில் திறந்து வைக்கப்பட்டது.   29 டிசம்பர்1990   இந்தியாவில் கர்னால் தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி மையத்தில் முதன் முதலாக பரிசோதனை குழாய் மூலம் எருமைக் கன்று பிறந்தது. 29 டிசம்பர் 2015 தமிழறிஞர் தமிழண்ணல் மறைந்த தினம். இராம.பெரியகருப்பன் என்பது அவருடைய இயற்பெயர்.  சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் தொடங்கி பிழையின்றி தமிழ் எழுத வழிகாட்டும் நூல்கள் வரை அவருடைய பணி தமிழ் உலகில் என்றும் போற்றப்படும்.  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர்.

28 டிசம்பர்

 28 டிசம்பர் 1869  அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் செம்பிள் சூயிங்கம் தயாரிப்பதற்கு காப்புரிமை பெற்றார்.  28 டிசம்பர்1903  லண்டனில் முதன் முதலாக கார் ஓட்டும் உரிமம் ரிச்சர்ட் கெயின் என்பவருக்கு வழங்கப்பட்டது.  28 டிசம்பர் 1932 ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி பிறந்த நாள்.  28 டிசம்பர் 1936 விகடன் பத்திரிகை, வாசன் பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனங்களின் நிறுவனர் எஸ். பாலசுப்பிரமணியன் பிறந்த நாள்.  28 டிசம்பர் 1937 இந்திய மக்களின் நேசத்துக்குரிய தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்த நாள்.  28 டிசம்பர் 1944  லட்சுமி காந்தன் கொலை வழக்கு தொடர்பாக புகழ்பெற்ற திரைப்பட நடிகர் எம் கே தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டார்.  28 டிசம்பர் 1947 எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்த நாள்.

27 டிசம்பர்

 27 டிசம்பர் 1831  பீகிள் என்னும் கப்பலில் சார்லஸ் டார்வின் தனது ஆய்வுப் பயணத்தை துவக்கினார். 27 டிசம்பர்1892  கன்னியாகுமரியில் கடலில் பாறையில் 25ஆம் தேதி முதல் தனிமைத் தியானத்தில் ஈடுபட்டிருந்த சுவாமி விவேகானந்தர் இன்று தனது தியானத்தை முடித்துக் கொண்டார்.  27 டிசம்பர் 1911 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக ஜன  கண   மன பாடல் பாடப்பட்டது. 27 டிசம்பர்1948  பெங்களூரில் ஏரோநாட்டிக்கல் சொசைட்டி நிறுவப்பட்டது 27 டிசம்பர்1986  டெல்லியில் 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அழகான பஹாய் பிரார்த்தனை கூடம் கட்டி முடிக்கப்பட்டது ஆசியாவிலேயே முதலாவது பஹாய் ஆலயம் இது. 27 டிசம்பர்1988  இந்தியாவில் முதன் முதலாக வெப்ப காற்றூட்டப்பட்ட பலூனில் பறக்கும் போட்டி துவங்கியது

26 டிசம்பர்

 26 டிசம்பர் 1530  மொகலாய மன்னர் பாபர் காலமானார்.  26 டிசம்பர் 1898 ரேடியம் என்னும் தனிமம் பிறந்த நாள் க்யூரி தம்பதிகள் இக்கதிரியக்க தனிமத்தை கண்டுபிடித்தனர்.   26 டிசம்பர் 1925 முதுபெரும் அரசியல்வாதியும் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவருமான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரா. நல்லகண்ணு பிறந்த நாள்.   26 டிசம்பர்1949  ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை  (Theory of Relativity)    அறிவிக்கப்பட்டது. 26 டிசம்பர்1950 ராஜகோபாலாச்சாரியார் உள்துறை அமைச்சர் ஆனார். 26 டிசம்பர்1981  நடிகையர் திலகம் என்று புகழ் பெற்று விளங்கிய சாவித்திரி காலமானார். 26 டிசம்பர் 2021  பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் மறைந்த நாள்.  

Me vs. Myself

  Deciding when to use “me” and when to use “myself” is a common mistake.   Many people make the mistake of saying 'myself' when they should say 'me', because they think 'myself' sounds more polite. This is wrong!     ' Me' is an object pronoun, so it refers to the person that the action of the verb is being done to.   For example, you could say     My parents want  me  to help with the chores more. or   Please call  me  if you have any questions.   Myself  is a reflexive pronoun, like himself, itself or themselves.   It’s generally only used in the same sentence as 'I'.   For example, you could say   I gave  myself  a break from studying today.   Or   I cleaned the entire house by  myself . Use 'myself' when you are doing the action to 'you'.

What is a Pangram sentence?

  A pangram sentence is a sentence that has all the 26 letters of the Alphabet.   Isn't that interesting!   A less common name for pangram sentences is  holoalphabetic sentence.   These types of sentences are mostly used in testing equipment, handwriting and even typewriting skills. Calligraphists often practice with these types of sentences to improve their skills.   A very common example of a pangram is –   The quick brown fox jumps over the lazy dog.   This sentence has all the letters of the Alphabet from A to Z.     It is a very well recognised sentence, especially by typewriters and font developers.   

Tautology

  When in a sentence different words of same meaning are used for the sake of force, it is the use of tautology. It is also a phrase or expression in which the same thing is said twice in different words.   Examples:   1) I have seen it with my own eyes. 2) I want to hear fairy tales and stories. 3) They need a new hot water heater. 4) Rahul proudly told his mother that he made the model himself. 5) I know it's true because I heard it with my own ears. 6) He is always making predictions about the future. 7) In my opinion, I think he is wrong. 8) The storm hit at 2 p.m. in the afternoon. 9) Having a corona test is a necessary requirement for the job. 10) I went to see him personally.  

Be happy always

  You smile.   You want to be kind to strangers.    Your shoulders are relaxed.    Your hands are open. Happy is that upbeat feeling of contentment that seems to spread across your body.   Happy is the most common word for a positive emotion.     What makes us happy?  That differs from person to person.   Happy as a feeling lends itself to lots of idioms.   Over the Moon   The phrase may have become popular from football games when player kicked the ball so hard that it appeared to go over the moon.   Now that would make a fan happy.     On Cloud Nine Happiness on Cloud Nine  probably came first from Buddhism.   At the ninth level towards enlightenment, a being is said to live on a bright cloud where selfishness washes away.   In Seventh Heaven Seven   is considered a lucky number.   Being happy, of course, is lucky. ...

Its vs. It’s

  We know, many people confuse “there”, “their” and “they’re”.   And many also confuse “it’s” and “its”. Because both words are pronounced the same way, yet have a different meaning.   “It’s” is a contraction of “it is”, so it is the subject “it” plus the verb “is”.   For example, you could say “it’s really cold outside today”. “Its”, on the other hand, is the possessive form of “it”.     Madurai is known for its historical importance.

Bring vs. Take

  “Bring” and “take” have almost the same meaning, but they imply different directions.   Their relationship is similar to the one between the verbs “come” and “go”.   “Bring” suggests movement towards the speaker, making it similar to “come”:   You ask people to bring things to the place where you already are.   For example, you could say “ bring   that book over here”,   or   “ Please  bring  sweets to the party” .   “Take”, on the other hand, suggests movement away from the speaker, making it similar to “go”:   You take things to the place where you are going.   You could say “ don’t forget to  take  your book to school”,   Or   “Please  take  me home ”.

17 டிசம்பர்

 17 டிசம்பர் 1897  பிரிட்டனில் முதன்முதலாக நடுக்கடலில் மார்க்கோனியால் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு வானொலி மூலம் செய்தி அனுப்பப்பட்டது   17 டிசம்பர்  1903  ஓகியோவைச் சேர்ந்த ஆர்வில் ரைட்டும் வில்பர் ரைட்டும் வட கரோலினாவில் உள்ள சிட்டி ஹாக் என்னும் இடத்தில் தாங்களே வடிவமைத்த 'காற்றை விட கனமான' விமானத்தில் பறந்து காட்டினார்கள். முதலில் ஆர்வில் 120 அடி உயரத்தில் 12 நொடிகள் பறந்தார்.  அடுத்து வில்பர் 852 அடி உயரத்தில் 59 நொடிகள் பறந்தார்.  இந்த விமானத்தின் எடை 340 கிலோ.  மூன்று  அமெரிக்க ப் பத்திரிகைகள் மட்டுமே  இந்த நிகழ்ச்சியை செய்தியாக வெளியிட்டன.  17 டிசம்பர்1918  தேசபக்தன் என்னும் பத்திரிகை திருவிகவால் ஆரம்பிக்கப்பட்டது.  17 டிசம்பர்1928 சைமன் கமிஷனை எதிர்த்து அக்டோபர் 30ஆம் தேதி லாகூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் தடியடி செய்ததில் லாலா லஜபதிராய்க்கு பலத்த அடிபட்டு அவர் நவம்பர் 17ஆம் தேதி காலமானார்.  லஜபதிராய் மரணத்திற்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்கார்ட்டை கொல்ல பகத்சிங், சந்திரசேகர் ஆசாத...

15 டிசம்பர்

    15 டிசம்பர் 1857  அறிவியலில் ஏரோ டைனமிக்ஸ் (Aero Dynamics) எனும் புதிய துறை உருவாக காரணமாக இருந்த பிரிட்டிஷ் இயற்பியல் விஞ்ஞானி சார் ஜார்ஜ் கேலி இங்கிலாந்தில் காலமானார்.  15 டிசம்பர் 1862  ஸ்டாம்ப்களுக்காக (For Stamp collectors) ஒரு பத்திரிக்கை தி மந்த்லி அட்வர்டைசர் என்னும் பெயரில் இங்கிலாந்தில் வெளிவர ஆரம்பித்தது.  15  டிசம்பர் 1932   இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றிய டி. என். சேஷன்  பிறந்த நாள்.  பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டிருந்த தேர்தல் கமிஷன் எவ்வளவு அதிகாரங்கள் கொண்டது என்று காட்டிய நேர்மையும் தீரமும் கொண்ட தேர்தல் கமிஷனர் இவர். இவரது பதவிக்காலத்துக்குப் பின்னரே தேர்தல் கமிஷன் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்தது.    திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்பது அவரது பெயரின் விரிவாக்கம்.   15 டிசம்பர் 1950  சிறு சிறு சமஸ்தானங்களாக சிதறி இருந்த  இந்தியாவை  ஒருங்கிணைத்தவரும்  இந்தியாவின்  முதல் துணை ப்  பிரதமரும்...