'தமிழ்த்தாத்தா' உ.வே.சா வின் ஆசிரியராகத் திகழ்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தான் அந்த ஆசிரியர். மதுரையில் பிறந்தவர். அவரது பெற்றோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணிபுரிந்து வந்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் 6.4.1815 அன்று பிறந்த தங்கள் குழந்தைக்கு மீனாட்சி சுந்தரம் எனப்பெயர் சூட்டினர். சிறு வயதிலேயே இலக்கியங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டார். பல ஆசிரியர்களிடம் பாடம் கேட்டு இலக்கணப் புலமையும் பெற்றார். மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி". தந்தை மறைவின் வேதனையின் வடிகாலாக அவர் ஒரு வெண்பா பாடினார். "விரோதி" என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்று. அவ்வெண்பா இது தான். முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும் தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும் ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால் ஈண்டேது செய்யாய் இனி. பல சிவத்திருத்தலங்களுக்கும் சென்று, அத்தலங்களைப் பற...