Skip to main content

சிவகாமியின் சபதம் - கல்கி

 சிவகாமியின் சபதம்

- கல்கி


 சரித்திரத்தின் பாதையில் காலம் பிறப்பித்த பல சிருஷ்டிகளில்... பல வகை பரிமாணங்களில் ஒன்றை...


 பல்லவ சாம்ராஜ்யத்தின் மகேந்திர சக்கரவர்த்தியையும் மாமல்லரையும் அவரது அவையோடு அருகிருந்து கண்ட அனுபவத்தை தருகிறது சிவகாமியின் சபதம்.


அந்தப் புறத்தில் பல பெண்களைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மன்னனும் பெண்ணாசை கொண்டவன் என்று பொதுவான எண்ணத்தை மாற்றி 'அது அப்படி அல்ல' அது ஒரு நிர்பந்தத்தோடு கூடிய ராஜதந்திரம் என்ற ஆழமான உண்மையைக் கூறுகிறது கதை.


 ஆயனச் சிற்பியின் சிற்பக்கலை ஆர்வம், அஜந்தா வர்ண ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இவை சராசரி மனிதர்களுக்கும் கீழே அவரை தள்ளிவிட்டது காலத்தின் விளையாட்டு.


 ஆயிரம் முக பாவங்களை அழகாக வெளிக்காட்டினாலும் கூட நானும் சுக துக்கங்களில் தடுமாறும் ஒரு சராசரிப் பெண் தான் என்று காட்டுகிறது சிவகாமியின் படைப்பு.


இளமையில் இருந்த துணிவும் மனோதிடமும் முதுமையில் எளிதாக தடம் புரளும். அப்போது அவர்கள் கொடூரமான செயல்களுக்கும் அஞ்ச மாட்டார்கள். கண்மூடித்தனமான காதல் எடுத்துக் கொண்ட வேலையை முழுமையாக செய்ய விடாமல் அழிவுக்கு வழி செய்துவிடும் என்பதை உணர்த்துகிறது நாகநந்தினி பிட்சுவின் வாழ்க்கை. 



மண்ணாசை இல்லாத மன்னர்களும் இருந்தார்கள் என்று காட்டிய பாண்டியன் வாழ்க்கை, சென்ற இடமெல்லாம் சைவத் திருநெறி பரப்பிய ஞானசம்பந்தர், அகிம்சையை விரும்பினாலும் தந்திரங்களில் வெல்ல முடியாத பல்கலை வித்தகர் மகேந்திர பல்லவர், போர் வெறியன் சாளுக்கிய புலிகேசி, ஏகபத்தினி விரதம், தந்தை சொல்லே மந்திரம் என வாழ்ந்து வந்த மாமல்லன், உண்மையான தளபதியாக இருந்து அகிம்சை நெறி திரும்பி துறவு பூண்ட தியாகம் என ஒரு சாம்ராஜ்யம் முழுமையும் கடந்து வந்த அனுபவம்.


 ஒரு சரித்திர நாவலை மர்ம நாவல் போல எழுத முடியும் என்று நிரூபித்திருக்கின்றது கல்கியின் எழுத்து. 


 ஹர்ஷவர்த்தனரைப் பற்றி மெலிதாகப் பேசுகிறது கதை.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...