Skip to main content

இப்படி எல்லாமா பாப்பாங்க?

 

எதையேனும் முக்கியமாக கவனிக்க வேண்டியதாக இருந்தால் கவனமாகப் பார்ப்பது  இயல்பு. 


"வச்ச கண்ணு வாங்காமப் பார்க்கிறது" என்று பேச்சுவழக்கில் அதைச் சொல்வார்கள். பார்க்கும்போது பார்வை தடைபடாமல் சிமிட்டிக் கொள்வது இமைகளின் வழக்கம். அதையும் தாண்டி இமைகளையே சிமிட்டாமல் தொடர்ந்து பார்ப்பதை தான் 'வச்ச கண்ணு வாங்காமப் பார்ப்பது' என்று கூறுவார்கள்.


பார்க்கின்ற பொருளின் உண்மைத் தன்மையில் சந்தேகம் தோன்றும் போது மொத்த கவனத்தையும் ஒருங்குபடுத்திப் பார்ப்பது வழக்கம். அதை 'உத்துஉத்துப் பார்ப்பது' என்பார்கள்.


சாதாரணமாகப் பார்க்க வேண்டியவற்றில் சிலவற்றை மட்டும் ஊன்றிக் கவனித்துப் பார்ப்பது சில நேரங்களில் அவசியமாகும். பணத்தை எண்ணும் போது ஏதாவது ஒரு தாளில் அது நல்ல நோட்டு தானா என்ற சந்தேகம் வரும்போது அதை மட்டும் அந்தப்புறம் இந்தப்புறம் எல்லாம் திருப்பிப் பார்ப்போம்.


 "அப்படி என்ன கண்ணை உள்ள வெச்சுப் பார்க்கறீங்க. நல்ல நோட்டு தான்" என்று நமக்குப் பதில் சொல்வார்கள். 


பார்த்தல் ஒரு நிலை. 

கருத்தாகப் பார்த்தல் என்பது அதை விடவும் முக்கியமானது. 


கண் பார்வையில் உன் கவனத்தை வைத்துக்கொண்டு பார் என்பது அதன் பொருள். 

கவனம் இல்லாமல் பார்ப்பதை 'ஏனோ தானோ என்று பார்க்கும்' பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்.


நாம் எதையெல்லாம் கண்ணை உள்ளே வைத்துக்கொண்டு பார்க்கிறோம் ? 

டிவி சீரியல் பார்க்கும் போது....


 சினிமா பார்க்கும் போது...


இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.  

அடுத்த முறை சினிமா தியேட்டருக்குப் போகும் போது திரையைப் பார்ப்பதற்குப் பதில் பின்னால்  திரும்பிப் படம் பார்ப்பவர்களின் முகத்தைப் பாருங்கள்.  இறுக்கமான உணர்வில் சிலையாக  உட்கார்ந்திருப்பார்கள்.

அதிலும் மொபைல் பார்க்கும்போது கண்ணை மட்டுமல்ல மொத்த புலன்களையும் உள்ளே வைத்து விடுகிறோம். 

ஆனால் கவனமாக கருத்தாகப் படிக்க வேண்டிய பாடத்தை இங்குமங்கும் பார்த்துக்கொண்டே படிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். 

எங்கே கண்ணை உள்ளே வைத்துக் கொண்டு இருக்கிறோமோ அது கவனம் பெறுகிறது; மனதில் நிறைகிறது. 


 நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒன்று தப்பிப் போய்விடக் கூடாது என்று கவனமாகப் பார்ப்பதை "கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்ப்பது" என்று சொல்வார்கள். 


அதை அப்படியே அகராதி வைத்துப் புரிந்துகொண்டு விளக்கெண்ணையை கண்ணில் விட்டு விடக்கூடாது.


அதிக நேரம் இமைக்காமல் ஒன்றைப் பார்க்கும் போது கண்ணோடு சேர்ந்து மூளையும் அதைக் கவனிக்கிறது. 

Keep one's eyes peeled 

என்று ஆங்கிலத்தில் அதைக் குறிப்பிடுவார்கள். 


அதாவது கண்ணை வாழைப்பழம் ஆக நினைத்துக் கொண்டால் இமையை வாழைத் தோலாக நினைத்துக் கொள்ளலாம். பழத்தைத் தடுக்கும் தோலை உரித்து விடுவது போல காட்சியைத் தடுக்கும் இமைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்பதுதான் இதன் பொருள். 


தொடர்ந்து ஒன்றை அப்படி பார்த்துக் கொண்டே இருப்பதை 'பார்த்துப் பார்த்து கண்ணே பூத்துப் போச்சு' என்பார்கள்.


 பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்திருப்பதில் பூஞ்சை பிடிப்பது போல நீண்ட காலமாக இமைக்காமல் இருந்ததால் கண்களிலும் அப்படி என்பது தான் அதற்குப் பொருள். 


அவன் வரவை எதிர்பார்த்து கதவில் சாய்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அவள். அசையாமல் நின்று நீண்டநேரம் காத்திருப்பதை அறிந்து "நிலைப்படியே நீயாக நின்றிருக்கிறாய்" என்று நெகிழ்ந்து போகிறான் அவன். 


ஆளுக்கு ஒரு சாவி வைத்துக்கொண்டு "போகும்போது வீட்டைப் பூட்டி விட்டுப் போய் விடுங்கள்" என்ற அளவில் வாழ்கின்ற நமக்கு இந்த கதவாகிக்  காத்திருக்கும் காதல் எல்லாம் புரியவா போகிறது?





Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...