Skip to main content

The sands of time - Sydney Shelton

 The sands  of time

- Sydney Shelton


1936 லிருந்து ஸ்பெயின் அரசுக்கும் Basques க்கும் இடையே நடந்து வந்த யுத்தத்தை களமாகக் கொண்ட கதை.


 ஸ்பெயினில் 1936 இல் பிப்ரவரி முதல்  ஜூன் முடிய நடந்த  269 அரசியல் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு கதையின் வேர்கள் பயணிக்கின்றன.


 முதல் அத்தியாயம் சிறையில் இருக்கும் தன் சகாக்களை விடுவிக்க Jaime Miro வின் Bullfight தந்திரத்தோடு கதை துவங்குகிறது. 


அவர்களோடு சேர்ந்த நான்கு nuns (கன்னியாஸ்திரிகள்).


LUCIA  


 மாஃபியா தொடர்புகளால் தந்தையும் சகோதரர்களும் சிறைக்குச் செல்ல அவர்களின் நிலைக்கு பழிவாங்க இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாகி கான்வென்ட்க்கு வந்து மௌன வாழ்க்கை துவங்கினாலும்,  Swiss தப்பிச் சென்று தந்தையின் பேங்க் அக்கவுண்ட்டை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும் Lucia ஒரு  அழகிய இளம்  nun  .


GRACIELLA


தாயின் தடம் புரண்ட முறைகேடான வாழ்க்கையை அருகிருந்து கவனித்ததால் தடுமாறிய ஒரு கணத்தில் தாயால் தாக்கப்பட்டு நினைவிழந்த நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டு, தந்தையின் மூலமாக கான்வென்டில் விடப்பட்ட பேரழகு வாய்ந்த இளம் (nun)பெண் Gracillia.


MEGAN


-Scott family யின் வாரிசு.

 ஆனால் சித்தி Ellon Scott ன் வஞ்சனையால் plane  விபத்துக்குள்ளான போதும் பிழைத்துக் கொள்கிறாள்.


 பிழைத்த போதும் அனாதையாக்கப்பட்டு கான்வென்டில் அடைக்கலம் புகுந்து வாழும் 17 வயதுப் பெண் இந்த Megan.


TERESA


60 வயதான பெண்.  காலத்தின் கர்ண கொடூரமான நிகழ்வுகளால் வாழ விரும்பாமல் 'கடவுளிடம் ஐக்கியம் புகுந்த' பெண் இவர்.

அழகாக பாடத் தெரிந்த, பிறர்க்கு கெடுதல் நினைக்காத வலுவான கேரக்டர் Terasa.


இவர்கள்  நான்கு பேரும்  தான் அந்த  nuns.


Jaime Miro வின் கூட்டாளிகளுடன் இந்த nuns பயணம் காடு, மலை, எல்லாம் கடந்து போகும் போதே ஒவ்வொருவரைப் பற்றிய flashback


நுண்ணிய பல வேலைப்பாடுகள் கொண்ட hand made art work போல 

எல்லா கேரக்டர்களையும் பின்னிப் பிணைத்துக் கொண்டு செல்கின்ற லாவகம் ஷெல்டனுக்கே உரிய அழகான நடை.


Terasa வின் மரணம் மனதை என்னவோ செய்தது. 


சில நேரங்களில் miracles போல சற்றுச் செயற்கையாக அமைக்கப்பட்ட கதைப் போக்கைத் தவிர விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது கதை.


Graciella வை மீண்டும் கான்வென்ட்டுக்கே அழைத்துச் சென்ற போதும் Lucia, Megan இருவரும் உலக வாழ்க்கையோடு இருப்பதாக கதை முடிகிறது.


Jaime ஒரு ரியல் ஹீரோவாக காட்டப்படுகிறார்.


ஸ்பெயினில் இன்றளவும் நடந்து வருகின்ற கொரில்லா போரின் வேர்கள் சிலவற்றை அடையாளம் கண்டுகொண்ட உணர்வு படித்து முடித்த பின் வருகிறது.


'அவ்வளவு எளிதில் மறக்க முடியாது' என்பதைப் போன்ற எண்ணம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வரும். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...