Skip to main content

பெயர் தெரியாத தியாகிகள்...


ஊரறியோம் பேரறியோம்  

உறங்கிவிட்ட கதை அறிவோம்;

சீரறிவோம் திறமறிவோம் 

தியாகத்தின் சிறப்பறிவோம்!


 ஆங்காங்கே மாண்டவர்கள் 

ஆயிரம் பேர் என்பதனால் 

அத்தனை பேர் வரலாறும் 

அறிவதற்கு வசதி இல்லை!


தூங்காமல் தூங்கிவிட்ட 

சுதந்திரப் பூங்கன்றுகளை 

தாங்காமல் தாங்கி விட்ட 

தாயகத்து மண்ணறியும்


வெள்ளி விழா கொண்டாடி 

வீரர்களின் புகழ்பாடி 

கள்ளமில்லா தியாகிகளின்

 கதை பாடும் வேளை இது!


இன்றிங்கே வானுயர 

எழுந்திருக்கும் மாளிகைக்கு

தன்னெலும்பைத் தந்தவர்கள் 

சதை ரத்தம் கொடுத்தவர்கள்


அஸ்திவாரங்கள் என 

அடியினிலே தூங்குகின்றார்! 

மாளிகைக்கு மையிடுவோம் 

மாணிக்கக் கதவிடுவோம்!


அத்தனையும் மாளிகைக்கே, 

அலங்காரம் மாளிகைக்கே!

 அஸ்திவாரங்களுக்கு 

அலங்காரம் யார் புரிவார்?


'விழவேண்டும் வெள்ளையர்கள்;

 வெங்களத்தில் நம்உடலும் 

விழ வேண்டும்' என்பதன்றி 

விழா வேண்டிச் சாகவில்லை;


தன்னை அழித்ததனால் 

தாயகத்தைச் செழிக்க வைத்த

மன்னர் குலங்களவர் 

மாணிக்கக் கற்களவர்!


பொன்னை மதித்திருந்தால் 

பூமியையே மறந்திருப்பார்; 

தன்னை மறந்ததனால் 

தாயகத்தை நினைத்திருந்தார்!


தாயகத்து வீரருக்கோர்

சரித்திரமும் இல்லையன்றோ? 

உண்மை வரலாற்றை 

உளந்திறந்து பாடி வைத்து


பள்ளியிலே பிள்ளைகட்குப் 

பாடமாய் வைப்பதற்கு 

நல்லறிவு பெற்றவர்கள் 

நாட்டிலே யாருமில்லை!


இன்னும் நாம் படிப்பதெல்லாம் 

எலிசபெத் ராணியைத் தான்!

மண்ணாண்ட கிளைவு முதல் 

மவுண்ட்பாட்டன் பிரபு வரை

படிக்கத்தான் பிள்ளைகளை 

பள்ளிக்கு அனுப்புகிறோம்! 


பகவத்சிங் வரலாறோ

பாபாஜி வரலாறோ

 சுகதேவின் வரலாறோ

 சூரியதேவ் வரலாறோ

 அகமத்ஷா வரலாறோ

 அறியோமே நண்பர்களே!


உண்ணுகிற  சோறெடுத்து  

உண்ணுங்கள்;  உண்ணுங்கால் 

எண்ணுகிற நெஞ்சிருந்தால்  

எண்ணுங்கள் நல்லவரை!


-கண்ணதாசன் 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...