Skip to main content

எம்மூர் வாரும்

 

தமிழ் இலக்கியங்களில் உரை எழுதச் சிரமமான பாடல்களில் முதன்மையானவை சித்தர் பாடல்கள்.


உண்மையில் சித்தர்களைப் புரிந்து கொள்வது அதைவிடச் சிரமமானது.


ஆன்மிகவாதிகள் போலத் தோன்றும் அவர்கள் கோவிலாவது ஏதடா என்று கோவிலுக்குப் போவதை கடுமையாக விமர்சித்தவர்கள். 


அதே நேரம் சிவபக்தியில் திளைத்தவர்கள்.

சித்தர்களில் ஒருவர் அழுகணிச் சித்தர்.


அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள்.


அவரது பாடல்களில் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு எளிமையான பாடல் இது. 


பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து

மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்

மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்

பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.

– பாழாய் முடியாதோ. 


படிக்கும் போது உங்களுக்கு என்ன புரிகிறதோ அது தான் பொருள். 


கண்ணதாசனின் இந்தப் பாடல் புரிந்து கொள்ள உதவும்.

எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரைச் சொல்லவா

அந்த ஊர் நீயும் கூட

அறிந்த ஊர் அல்லவா


உடலூரில் வாழ்ந்திருந்தேன்

உறவூரில் மிதந்திருந்தேன்


கருவூரில் குடி புகுந்தேன்

மண்ணூரில் விழுந்து விட்டேன்


பையூரையும் பாழூரையும் முறையே கருவறை ,  பூமி எனக் கொள்ளலாம். 

மெய்யூரையும் வேதாந்த வீட்டையும்புரிந்து கொள்ள உங்கள் சொந்த ஞானம் தான் வழி.

இத்தனை ஊர்களையும் படைத்தானே ஒருவன், அவன் எந்த ஊரைச் சேர்ந்தவன்?


மண்ணில் ஆயிரம் மலர்க ளமைத்தவன்

மனதில் ஆயிரம் அலைக ளளித்தவன்

விண்ணில் ஆயிரம் மீன்கள் சமைத்தவன்

வெளியில் ஆயிரம் உயிர்கள் படைத்தவன்

எவ்வூ ருடையான் என்றீரோ?

எம்மூர் வாரும் சொல்கின்றேன்!

 கண்ணதாசன்

 




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...