Skip to main content

ஆடுவான் கோகுலத்தில்



ஆடுவான் கோகுலத்தில்

ஆயர் மனைகளிலே 


கூடுவான் கோபியரை 

கொஞ்சும் இள வஞ்சியரை


பாடுவான் ஓடுவான் 

பார்ப்பதற்கு விளையாட்டு 


தேடுவார் கண்களுக்கோர்

திசையறிந்த தெய்வமவன்


அந்தியிலும் சந்தியிலும் 

அர்த்த சாமத்தினிலும் 


சிந்தையில் கண்ணனை நான்

சேவித்தே வாழுகிறேன்!


தந்தை தாய் மக்கள் 

என் குலத்தின் உறவினர்கள்


 முந்தைப் பிறவிகளில் 

முன்றிருந்த பெரியோர்கள்


அத்தனையும் கண்ணனவன் 

அவதாரம் என்றிருந்தேன் 


தாயாக வந்தக்கால் 

தலைமாட்டில் நிற்கின்றான்


நோயாக வந்தக்கால் 

நோய் மருந்தும் ஆகின்றான்


பாரதத்தில் அன்று 

பார்த்தனுக்குச் சொன்னதெல்லாம்


 ஓரளவு எந்தன்

 உள்ளத்தும் சொல்கின்றான்!


 கையெடுத்து நானோர் 

கணக்கை உரைத்து விட்டால் 


கை கொடுத்தே என்னைக்

கரையேற்ற முந்துகிறான்!


கண்ணா என்றழைப்பார் முன்

காவலன் போல் வருகின்றான்!


காதலானாய் எந்தக்

கன்னியர்கள் நினைத்தாலும்


ஆதரவாய் வந்து

அவர் மடியில் சாய்கின்றான்!


"மாலே மணிவண்ணா 

வாராய்" என வழைத்தால்


காலையிலே நம் வீட்டுக் 

கதவைத் திறக்கின்றான்


வேராக நின்று

விழுது விட வைக்கின்றான்


தேராக நின்று

திருநாள் நடத்துகின்றான்


போராகத் தோன்றிப்

புயலாக மாறுகின்றான்


சீராக நடமாடும்

தென்றலுமாய் ஆகின்றான்


கண்ணன் என்னும் அந்தக்

கடலுக்குள் விழுந்துவிட்டால்


சின்னக் குழந்தைகட்கும்

நீந்தத் தெரிந்துவிடும்


காற்றாக வானாக

கனலாகப் புனலாக


ஊற்றாக உருவாக

ஒளியாக மழையாக


நேற்றாக இன்றாக

நாளைக்கும் நிலையாக


ஏற்றாத தீபத்தும்

எரிகின்ற ஜோதியவன்!


எல்லாமும் கண்ணன் தான்

எங்கேயும் கண்ணன் தான்


நல்லார்க்கே என்றும்

நாயகனே கண்ணன் தான்


கண்ணனை நான் நினைக்கின்றேன்

கவலையெல்லாம் மறக்கின்றேன்.


-கண்ணதாசன் 




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...