Skip to main content

2 டிசம்பர்

2 டிசம்பர் 1873:

நியூயார்க் டெய்லி டிராபிக் என்னும் பத்திரிகையில் முதன்முதலாக புகைப்படத்துடன் செய்தி வெளியானது 

2 டிசம்பர் 1901: 

கிங் காம்ப் கில்லட் என்பவர் ரேசர் பிளேடு தயாரிப்பதற்கான காப்புரிமம் பெற்றார் .

2 டிசம்பர் 1911:

நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் காலமானார்.

தம்மை நாடி வந்த தமிழ்ப் புலவர்களுக்கெல்லாம் வாரி வழங்கியவர்.

தமிழின் மேன்மைக்கெனப் பெரும்பொருள் வழங்கி தனியொருவராய் நின்று நான்காம் தமிழ்ச்சசங்கம் ஏற்படுத்திய பெருமைக்குரிய இவரின் விரிவான பெயர் பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை தேவர் என்பதாகும்.   

இவர் காலத்தில் வாழ்ந்த அரைகுறை ஆங்கிலப்புலவர் ஸ்காட்  பிழையுடன் எழுதி வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி அவற்றை குழியில் போட்டு எரித்தவர் தேவர்

பிறர் கையில் பிழையான புத்தகங்கள் கிடைக்கக்கூடாது என்பதே அதற்குக் காரணம். 

'கப்பலோட்டிய தமிழர்' ..சி.,யின் சுதேசிக் கப்பல் ஓட்டும் பெரும் பணிக்குத் தனியொருவராகவே ஒன்றரை லட்சம் பணத்தை அள்ளி வழங்கியவர் இவர்.

2 டிசம்பர் 1933:

பழம்பெரும் நடிகர் எஸ் . ஜி. கிட்டப்பா மறைந்த தினம். 

பல நாடக நடிகர்கள் திரைப்படத்தில் நடித்துத் தான்  புகழ் பெற்ற நடிகர்களாகியிருக்கிறார்கள்.  ஆனால் நாடக நடிகராக புகழின் உச்சியில் இருக்கும் போது திரைப்படத்தில் நடிக்கத். தொடங்கியவர் இவர்.  

பிரபல  நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர் இவர்.

2 டிசம்பர் 1965: 

இந்தியாவில் எல்லைப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது.

2 டிசம்பர் 1988 :

பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். ஒரு இஸ்லாமிய நாட்டின் முதல் பெண் பிரதமர் இவரே.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...