Skip to main content

நவம்பர் 15

 

நவம்பர்  15: 1673

உடலிலுள்ள சுரப்பிகளைப் பற்றிக் கூறியவரும் தைராய்டு சுரப்பிக்குகவசம் என்னும்  பொருள்படும் கிரேக்கச் சொல்லானதைரோஸ் என்பதை மூலமாகக் கொண்டுதைராய்டுஎன்னும் பெயரைச் சூட்டியவருமான பிரிட்டிஷ்  மருத்துவயியலாளர் தாமஸ் வார்ட்டன் லண்டனில் காலமானார்.


நவம்பர்  15: 1896

தி போனோஸ்கோப் என்னும் முதல் சினிமா பத்திரிகை நியூயார்க்கிலிருந்து வெளிவரத் தொடங்கியது.

நவம்பர்  15: 1913

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத்  தாகூருக்கு வழங்கப்படுவதாக இன்று  கல்கத்தாவிற்குச் செய்தி எட்டியது.  அவருடையகீதாஞ்சலி என்ற நூலுக்காக இப்பரிசு கிட்டியது.  ஆசியாவிலேயே முதன் முதலாக நோபல் பரிசைப் பெற்றவர் இவர்தான்.


நவம்பர்  15: 1917

சமூகவியலின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்ச் சமூகவியலாளர் எமிலி டர்க்ஹெயாம்  பாரிஸ் நகரில் காலமானார்.

நவம்பர்  15: 1920

பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியரானார்.

நவம்பர் 15: 1921

குணச்சித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் பிறந்த நாள்.

நவம்பர்  15: 1930

பிரிட்டிஷ்  தொலைக்காட்சியில் முதன் முதலில் வண்ண விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது.

நவம்பர் 15: 1982

ஆச்சார்யா வினோபா பாவே மறைந்த நாள்.

நவம்பர்  15: 1989

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கராச்சியில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட்  போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதன் முதலாக ஆடினார்.  அப்போது அவருக்கு வயது 16 ஆண்டு 6 மாதம் 25 நாள்.

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...