Skip to main content

Posts

Showing posts from August, 2022

ஒப்பனை (Make up)

           திருமணத்தன்று மணமகளுக்கு ஒப்பனைக்கு என தனியாக ஒரு நேரம் ஒதுக்கப்படுகிறது. இதெல்லாம் இந்தக்காலத்தில் வந்த பழக்கங்கள் என நினைத்திருப்போம். தமிழ் இலக்கியங்களில் இந்த ஒப்பனை குறித்தும் கூறப்பட்டுள்ளன.      திருமண நாளன்று நடக்கும் இந்த ஒப்பனையை ‘மணக் கோலம் பூணுதல்’ என இலக்கியங்கள் கூறுகின்றன.    ‘ பதுமாவதி வதுவையில் கோலஞ் செய்தல்’ என மணமகள் பதுமாவதிக்குச் செய்யப்பட்ட ஒப்பனை பெருங்கதையில் விரிவாகக் கூறப்படுகிறது.       சிந்தாமணியில் மணமகளுக்கு ஒப்பனை புரிய ஒப்பனைக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் இருந்த செய்தி கூறப்படுகிறது. அதிலும் கூந்தல் அலங்காரம் விரிவாகக் காட்டப்படுகிறது. அலங்கார மாலை , விலாசினி என்ற ஒப்பனைக் கலையில் தேர்ந்தவர்கள் மணமகள் இலக்கணைக்கு ஒப்பனை செய்ததை நுணுக்கமாக விவரிக்கிறது.      கம்ப ராமாயணத்தில் மேக் அப் குறித்து ‘கோலங்காண் படலம்’ எனத் தனியாக ஒரு படலமே உள்ளது. திருமணத்தன்று சீதைக்கு எப்படி ஒப்பனை செய்தனர் என்பதை பதினான்கு பாடல்களில் கம்பர் காட்டுகிறார்.  ...

எம்மூர் வாரும்

  தமிழ் இலக்கியங்களில் உரை எழுதச் சிரமமான பாடல்களில் முதன்மையானவை சித்தர் பாடல்கள். உண்மையில் சித்தர்களைப் புரிந்து கொள்வது அதைவிடச் சிரமமானது. ஆன்மிகவாதிகள் போலத் தோன்றும் அவர்கள் கோவிலாவது ஏதடா என்று கோவிலுக்குப் போவதை கடுமையாக விமர்சித்தவர்கள்.  அதே நேரம் சிவபக்தியில் திளைத்தவர்கள். சித்தர்களில் ஒருவர் அழுகணிச் சித்தர். அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். அவரது பாடல்களில் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு எளிமையான பாடல் இது.  பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன் மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால் பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா. – பாழாய் முடியாதோ.  படிக்கும் போது உங்களுக்கு என்ன புரிகிறதோ அது தான் பொருள்.  கண்ணதாசனின் இந்தப் பாடல் புரிந்து கொள்ள உதவும். எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன...

Off the wall

  Off the wall   Did you watch the movie last night?   Yes, I did. It was off the wall, wasn’t it?   Off the wall? What does it mean?   Off the wall is a slang expression. It means ‘odd, unusual’. For example, My boss’ sense of humour is really off the wall.   Meaning,  he has a crazy sense of humour?   Yes, that’s right. His sense of humour is unconventional.   Can I say, Some of the books that I have read are strange. They are really off the wall.   You can’t!   But why not?   Because you don’t read books! Ha! Ha!

அப்படியும் இருக்குமோ?

  அது பாரதி விழா. அதில் கலந்து கொண்ட ஜெயகாந்தன் ஒரு மணி நேரம் பேசினார். “ மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் ”   என்றார் பாரதி.   நாமா மாதர்களை இழிவு செய்கிறோம் ? ஏராளமான அணிமணிகளைப் பூட்டிக் கொண்டு அலங்காரப் பதுமைகளாக வலம் வரும் மாதர்கள் அவர்களே அல்லவா அவர்களை இழிவு செய்து கொள்கிறார்கள். அதனால் தான் பாரதி , “ மாதர் , தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் ”   என்றார். பாரதி வரிகளில் அவர் சுட்டிக் காட்டிய புதிய நயத்தை வியந்து கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. மாதர்களும் கைதட்டினார்களா என்பது தெரியவில்லை.

மலையை விட்டுப் போய்விடுவாயா!

 அவள் தோழி அவனிடம் கூறுகிறாள். அடர்ந்த கருங்கூந்தல்  மெல்லிய இயல்பு இப்படியாக இவள். நீ இவளைப்  பிரியாமல் இருந்தால்  நல்லது. நீயோ பொருள் தேடப் போயே ஆக வேண்டும் என்று நினைக்கிறாய். மடல் விரிந்த  மலர்க் கொத்துகளுடன்  எறுழம் பூ கொட்டிக்கிடக்கும் இந்த மலை  முருகப் பெருமானுக்குப் பிரியமான மலை . இந்த மாமலையை உன்னால்  பிரிந்து போகமுடியுமானால் நீ பிரிந்து போ. பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின் பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க் கால் எறுழ் ஒள் வீ தாஅய முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே. (ஐங்குறுநூறு 308)

வளர் பிறை போல

         பிறை தொழுதல் என்பது மூன்றாம் நாள் சந்திரனைத் தொழுவதாகும்.   அகநானூறு நூலில் மாலைப் பொழுதில் பிறையைத் தொழுவது குறிப்பிடப்படுகிறது.     சந்திரனை ஆண் தெய்வமாகக் கருதியதையும் சந்திரனுக்குக் கோவில் இருந்ததையும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார்.      செட்டி நாட்டுப் பகுதிகளில் பிறைதொழுதல் ‘இராவண்டை போடுதல்’ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.   வளம் வேண்டியும் , செழிப்பு நோக்கியும் இன்றும் பௌர்ணமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.   நல்ல நிகழ்ச்சிகளை நடத்தும் போது வளர்பிறை நாட்களில் தொடங்குதல் வழக்கம்.      ‘ தொழுது காண் பிறை’ என குறுந்தொகையும் ‘அந்தி வானத்து வெண்பிறை’ என சிலப்பதிகாரமும் , ‘ வளர்பிறை போல வழி வழிச் சிறக்க’ என மதுரைக் காஞ்சியும் வளர் பிறையைக் கூறுகின்றன.      வளர்பிறையை   ‘அலர் தரு பக்கம்’ என்றும் தேய்பிறையை   ‘வழியது பக்கம்’ என்றும் பரிபாடல் குறிப்பிடுகிறது. பிறையும் பெயரும்             ...

கட்டோடு குழலாட

  கட்டோடு குழலாட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பொட்டோடு நகையாட ஆட ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு  எந்தக் காலத்துக்கும் நின்று கேட்க வைக்கும் இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதியது .  கடவுள் நினைவில் காதலாகிக் கசிந்துருகி அடியார்கள் பாடிய பாடல்களில் கூட காதலைக் கண்டவை அவரது பாடல்கள். மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணம் கடவுளைப் பாட அதில் காதலைக் காட்டும் கண்ணதாசன் வரிகள். முத்தணி கொங்கைகள் ஆடஆட மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. - மாணிக்கவாசகர்

The sands of time - Sydney Shelton

  The sands  of time - Sydney Shelton 1936 லிருந்து ஸ்பெயின் அரசுக்கும் Basques க்கும் இடையே நடந்து வந்த யுத்தத்தை களமாகக் கொண்ட கதை.  ஸ்பெயினில் 1936 இல் பிப்ரவரி முதல்  ஜூன் முடிய நடந்த  269 அரசியல் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு கதையின் வேர்கள் பயணிக்கின்றன.  முதல் அத்தியாயம் சிறையில் இருக்கும் தன் சகாக்களை விடுவிக்க Jaime Miro வின் Bullfight தந்திரத்தோடு கதை துவங்குகிறது.  அவர்களோடு சேர்ந்த நான்கு nuns (கன்னியாஸ்திரிகள்). LUCIA    மாஃபியா தொடர்புகளால் தந்தையும் சகோதரர்களும் சிறைக்குச் செல்ல அவர்களின் நிலைக்கு பழிவாங்க இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாகி கான்வென்ட்க்கு வந்து மௌன வாழ்க்கை துவங்கினாலும்,  Swiss தப்பிச் சென்று தந்தையின் பேங்க் அக்கவுண்ட்டை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும் Lucia ஒரு  அழகிய இளம்  nun  . GRACIELLA தாயின் தடம் புரண்ட முறைகேடான வாழ்க்கையை அருகிருந்து கவனித்ததால் தடுமாறிய ஒரு கணத்தில் தாயால் தாக்கப்பட்டு நினைவிழந்த நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு நிர...

கிருஷ்ணா முகுந்தா முராரே

  அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன் என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பாடலை இயற்றிய  பாபநாசம் சிவன் தமிழ்ச் சொல்லே இல்லாமல் பாடியது இந்தப் பாடல். இது 1944 ல் திரையரங்கில் 750 நாட்களுக்கு மேல் ஓடிய   ஹரிதாஸ்   படத்தில் தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு. கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய ( கிருஷ்ணா முகுந்தா முராரே) கருணா சாகர கமலா நாயக கருணா சாகர கமலா நாயக கனகாம்பர தாரி கோபாலா ( கிருஷ்ணா முகுந்தா முராரே) ( கருணைக் கடலே ,   கமலை மணாளா பொன் னு டை சூடி ய கோபாலா) காளிய மர்த்தன கம்சனி தூஷண காளிய மர்த்தன கம்சனி தூஷண கமலாதள நயனா கோபாலா ( கிருஷ்ணா முகுந்தா முராரே) ( காளிங்க நடனா , கம்சனை வென்றாய் – தாமரை உன்   திருவடி கோபாலா ) குடில குண்டலம் குவலய தள நீலம் மதுர முரளீர் அவ லோலம் கோடி மதன லாவண்யம் கோபி புண்யம் பஜாமி கோபாலம் ( வளைந்த காதணி , குவளையின் நீலம் – இனிய குழலின் மயக்கும் நாதம் கோடி மன்மத அழகு மோகம் – கோபியர் வரமே , கோபாலனை ப்  பாட) கோபி ஜன மனமோகன வியாபக குவலய தள நீலா கோபாலா... குவலய தள நீலா கோபாலா... ...

ஆடுவான் கோகுலத்தில்

ஆடுவான் கோகுலத்தில் ஆயர் மனைகளிலே  கூடுவான் கோபியரை  கொஞ்சும் இள வஞ்சியரை பாடுவான் ஓடுவான்  பார்ப்பதற்கு விளையாட்டு  தேடுவார் கண்களுக்கோர் திசையறிந்த தெய்வமவன் அந்தியிலும் சந்தியிலும்  அர்த்த சாமத்தினிலும்  சிந்தையில் கண்ணனை நான் சேவித்தே வாழுகிறேன்! தந்தை தாய் மக்கள்  என் குலத்தின் உறவினர்கள்  முந்தைப் பிறவிகளில்  முன்றிருந்த பெரியோர்கள் அத்தனையும் கண்ணனவன்  அவதாரம் என்றிருந்தேன்  தாயாக வந்தக்கால்  தலைமாட்டில் நிற்கின்றான் நோயாக வந்தக்கால்  நோய் மருந்தும் ஆகின்றான் பாரதத்தில் அன்று  பார்த்தனுக்குச் சொன்னதெல்லாம்  ஓரளவு எந்தன்  உள்ளத்தும் சொல்கின்றான்!  கையெடுத்து நானோர்  கணக்கை உரைத்து விட்டால்  கை கொடுத்தே என்னைக் கரையேற்ற முந்துகிறான்! கண்ணா என்றழைப்பார் முன் காவலன் போல் வருகின்றான்! காதலானாய் எந்தக் கன்னியர்கள் நினைத்தாலும் ஆதரவாய் வந்து அவர் மடியில் சாய்கின்றான்! "மாலே மணிவண்ணா  வாராய்" என வழைத்தால் காலையிலே நம் வீட்டுக்  கதவைத் திறக்கின்றான் வேராக நின்று விழுது விட வைக்கின்...

பெயர் தெரியாத தியாகிகள்...

ஊரறியோம் பேரறியோம்   உறங்கிவிட்ட கதை அறிவோம்; சீரறிவோம் திறமறிவோம்  தியாகத்தின் சிறப்பறிவோம்!  ஆங்காங்கே மாண்டவர்கள்  ஆயிரம் பேர் என்பதனால்  அத்தனை பேர் வரலாறும்  அறிவதற்கு வசதி இல்லை! தூங்காமல் தூங்கிவிட்ட  சுதந்திரப் பூங்கன்றுகளை  தாங்காமல் தாங்கி விட்ட  தாயகத்து மண்ணறியும் வெள்ளி விழா கொண்டாடி  வீரர்களின் புகழ்பாடி  கள்ளமில்லா தியாகிகளின்  கதை பாடும் வேளை இது! இன்றிங்கே வானுயர  எழுந்திருக்கும் மாளிகைக்கு தன்னெலும்பைத் தந்தவர்கள்  சதை ரத்தம் கொடுத்தவர்கள் அஸ்திவாரங்கள் என  அடியினிலே தூங்குகின்றார்!  மாளிகைக்கு மையிடுவோம்  மாணிக்கக் கதவிடுவோம்! அத்தனையும் மாளிகைக்கே,  அலங்காரம் மாளிகைக்கே!  அஸ்திவாரங்களுக்கு  அலங்காரம் யார் புரிவார்? 'விழவேண்டும் வெள்ளையர்கள்;  வெங்களத்தில் நம்உடலும்  விழ வேண்டும்' என்பதன்றி  விழா வேண்டிச் சாகவில்லை; தன்னை அழித்ததனால்  தாயகத்தைச் செழிக்க வைத்த மன்னர் குலங்களவர்  மாணிக்கக் கற்களவர்! பொன்னை மதித்திருந்தால்  பூமியையே மறந்த...