Skip to main content

காரைக்குடி செய்த தவம்


 பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை என்பார்கள்.


அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் சில அபூர்வமான மனிதர்கள் தோன்றுவதுண்டு.


அப்படி ஒரு பெரிய மனிதர் அழகப்ப செட்டியார்.


காரைக்குடி, சிவகங்கை மக்கள் செய்த தவம் அவர் அந்த மண்ணில் பிறந்தது.


அந்தக் காலத்திலேயே பெரும் தொழிலதிபர் அவர்.  அவருடைய தேயிலைத் தோட்டங்கள் கேரளா, கல்கத்தா, பம்பாய், மலேசியா, பர்மா என விரிந்துகிடந்தன. 


துணி ஆலைகள், உணவு விடுதிகள், திரையரங்குகள், ஈயச் சுரங்கங்கள்,  ஆயுள் காப்பீட்டு நிறுவனம்,  விமானப் போக்குவரத்து நிறுவனம் என எல்லாத் துறையிலும் அவர் கொடி கட்டிப் பறந்தார்.


தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு காரைக்குடியில் நிலத்தை நன்கொடையாக வழங்கியவர்.


பரந்து விரிந்திருக்கும்  அழகப்பா பல்கலைக்கழகம் இவர் தந்த கொடையால் உருவானது தான்.


செல்வம் சேர்ப்பதே தன்னை நம்பி இருப்பவர்களை வாழவைக்கவும் தன் மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் தான் என்று ஒரு அறவாழ்வை அமைத்துக்கொண்டு அதன்படி  வாழ்ந்த வள்ளல் அவர்.

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 1909ஆம் ஆண்டு பிறந்தார். 48 ஆண்டுகள் தான் இந்த மண்ணில் இருந்தார்.

அவர் பிறந்த நாள்  ஏப்ரல் 6.  


மண்ணில் 48 ஆண்டுகள் தான் என்றாலும் மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர் அவர்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...