Skip to main content

சங்கப் பாடல்கள் ஏன் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கின்றன?

 

கத்தி கையை அறுத்துவிட்டது.


எது செய்தது? கத்தி.

என்ன செய்தது? அறுத்துவிட்டது.

எதைச் செய்தது? கையை.


இது நமக்கு எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிற ஒரு வாக்கியம்.

இதில் வருகிற கத்தி எப்படிப்பட்டது என விவரித்தால் அது அடை.

அதாவது கூர்மையான கத்தி, கூர்மழுங்கிய கத்தி என்றெல்லாம் விவரித்தால் அது கத்திக்கான அடை.

கத்தி போலவே 'கையை' என்பதற்கும் கூடுதல் செய்தி தரப்படலாம்.அதாவது வலக்கையா இடக்கையா என்பது போல.

இதுவும் அடை தான்.

'அறுத்துவிட்டது' என்பதோடு நிறுத்தாமல் ஆழமாக அறுத்துவிட்டது, லேசாக அறுத்துவிட்டது என்றுகூடக் கூறலாம்.

இவையும் அடை தான்.

கத்தி கையை லேசாக அறுத்துவிட்டது.

கத்தி வலக்கையை லேசாக அறுத்துவிட்டது.

கூர்மையான கத்தி வலக்கையை லேசாக அறுத்துவிட்டது.

இங்கு, கூர்மையான என்பது கத்திக்கு அடை.

வலக்கை என்பது கையோடு சேர்ந்த அடை.

லேசாக என்பது அறுத்துவிட்டது என்பதன் அடை.

இப்படி ஒவ்வொன்றுடனும் ஒரு சொல் சேர்த்துச் சொல்வது அடைச் சொல் என்று கூறப்படும்.


இதைக் கவனித்துப் பாருங்கள்.

'போன வாரம் சேலம் போயிருந்தபோது வித்தியாசமாக இருக்கிறது என்று ஒரு கத்தி வாங்கினேன் என்று சொன்னேனல்லவா அந்தக் கத்தி' என கத்திக்கு இவ்வளவு நீள விபரம் சொன்னால் அது அடைத்தொடர்.

கத்திக்குச் சொல்லப்படும் நீளமான அடைத்தொடர் போலவே கைக்கும் அறுத்துவிட்டதுக்கும் நீள அடை சேர்த்தால் இப்போது பல பேருக்கு 'கத்தி கையை அறுத்துவிட்டது ' என்ற செய்தியைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.

பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமையே இந்த அடைத்தொடர்கள் தான்.

வெறுமனே கத்தி என்று சொன்னால் அந்தக் கத்தியை visualise செய்ய நம் அறிவு முயற்சிப்பதில்லை.

சிவப்புக் கைப்பிடியுடன் நுனியில் வெள்ளைக் கோடு வரையப்பட்ட பளபளப்பான கத்தி என்றவுடன் கத்தியை நம் கற்பனையில் பார்க்க முயற்சிக்கிறோம்தானே.

இப்படி யோசிக்க வைப்பது தான் சங்கப் பாடல்களின் சிறப்பு. இந்த அடைகளால் தான் அந்தக் காலத்திய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்தப் பாடல்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்க இந்த அடைகள் தான் காரணம்.

இப்படிச் சொல்லும் அந்த அடை விபரங்களோடு சொல்ல வந்த செய்தியை நேராகச் சொல்லாமல் மறைத்துச் சொல்லும் உத்தி ஒரு தனி அழகு.


நேராக ஒரு விஷயத்தைச் சொல்ல முடியாத போது இப்படி அடைவழியே சொல்பவரின் மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் காட்ட இந்த உத்தி மிகவும் பயன்படுகிறது.

அப்படிச் சொல்லும் போது அதை உள்ளுறை, இறைச்சி என்றெல்லாம் நுட்பமாகச் சொல்லுவார்கள். 

இந்த அடை ஏன் இங்கு வருகிறது? என யோசிக்கும்போது அதுவரை நமக்குத் தெரியாத ஒரு புதிய காட்சி பளீரெனத் தெரியும். 


பனிக்காலம்

மாலை நேரம்

தனிமையில் அவள்

தனிமை போக்க வருகிறது 

அவன் தேர்.


ஏதோ வேலையாக பல நாட்கள் வெளியூர் போய்விட்டு அவன் ஊருக்குத் திரும்பும் காலம். அது பனிக்காலம். மாலைப் பொழுதில் அவன் தேர் வீட்டுக்குத் திரும்புகிறது. அவனைப் பிரிந்த தனிமையில் வீட்டில் அவள் காத்திருக்கிறாள். இது தான் செய்தி.

இதை ஒரு குறுந்தொகைப் பாடல்  இலக்கிய அழகுடன்  சொல்கிறது. 

அந்தப் பாடல் எது? 

தேடிப் பார்க்கலாமா!


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...