Skip to main content

எவனோ அவன்? மனப்பாடம் செய்ய ஏற்ற பாட்டு

 

சில பாடல்கள் படித்தவுடன் மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும். நாம் மனப்பாடம் செய்வதற்காகவே எழுதிய பாட்டு போலவே தோன்றும். முழுக் கவனத்துடன் மூன்றுமுறை படித்தால் முதல் இரண்டு வரிகள் மனப்பாடம் ஆகிவிடும். அதன் பின் கடைசி இரண்டு வரிகளை இரண்டு முறை படிக்க மொத்தப் பாடலும் மனப்பாடமாகியிருக்கும்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

(நம்மாழ்வார்)


இந்தப் பாட்டு தான் நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழியில் முதல் பாடலாக உள்ளது. எந்தக் கடவுளின் பெயரையும் சொல்லாமல் 'அவன்' என்ற சொல்லை மட்டும் சொல்லுவது இந்தப் பாட்டின் சிறப்பு. 


அவன் என்பது அவரவர்களின் இஷ்ட தெய்வம். 


பாட்டு சொல்லும் பொருள் இது தான்.

மனமே!

தனக்கும் மேலான ஒருவர் இந்த உலகில் இல்லை என்று கூறும்படியானவன் அவன்.

உயர்ந்த நற்குணங்கள் கொண்டவன் அவன்.

அறியாமை நீங்குமாறு தெளிவாகச் சிந்திக்கும் திறனை எனக்குத் தந்தவன் அவன்.

தூக்கம், சோம்பேறித்தனம், மறதி ஆகியவை கொஞ்சம்கூட இல்லாத தேவர்களின் தலைவன் அவன்.

அத்தகைய பெருமை வாய்ந்த அவனுடைய ஒளிபொருந்திய

திருவடி எல்லாத் துயரையும் துடைக்கும்.

அந்தத் திருவடிகளை வணங்கி நீ வழிபடு !

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...