Skip to main content

10 Tamil - பிழையும் திருத்தமும்

  

X

உடுக்க இழந்தவன் கைபோலே ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.   

திருத்தம்:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.   


X

இந்துத் தமிழ் நாளிதழ்

இந்து தமிழ் நாளிதழ் 


X

மா. பொ. சி

ம. பொ. சி


X

காற்றைக் கலங்கப்படுத்தாதே

காற்றைக் களங்கப்படுத்தாதே 


X

புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றன.

புனல் மட்டுமே அடைக்கப்படுகிறது.


X

அதுப் போல

அது போல


X

புரிந்துக்கொள்கிறான்

புரிந்துகொள்கிறான்


X

ஆய்ந்துப் பார்

ஆய்ந்து பார்


X

கூப்பிடுமாறுக் கூறினான்

கூப்பிடுமாறு கூறினான்


X

...ஆகியவைத் தப்பாட்டத்தின் வேறு பெயர்கள்

...ஆகியவை தப்பாட்டத்தின் வேறு பெயர்கள்


X

ஆட்சிச் செலுத்தினான்

ஆட்சி செலுத்தினான்


X

விழிப் பெற்ற பயனாகவும் மெய்ப் பெற்ற அருளாகவும் மொழிப் பெற்ற பொருளாகவும்...

விழி பெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும்...


X

நடந்துச் செல்வதற்குத் துன்பப்படு கிறோம். 

நடந்து செல்வதற்குத் துன்பப்படு கிறோம். 


X

அப்பாட்பட்டு

அப்பாற்பட்டு


பதிணென்கீழ்க்கணக்கு

பதினெண்கீழ்க்கணக்கு


X

மாகானம்

மாகாம்


X

ஆனையம்

ணையம் 


X

பறிந்துரை

ரிந்துரை


X

ஏற்றவாரு 

ஏற்றவாறு 


X

ஆசிரியத்தலை

ஆசிரியத்தளை 


X

வெண்டலை 

வெண்டளை


X

பறப்பினான்

ப்பினான்

X

மன்னிட்டு மூடினான்

மண்ணிட்டு மூடினான்


X

பரிக்கப்பட்ட மலர்

பறிக்கப்பட்ட மலர்


X

தாய் பிரிந்துவிட்டால்... (எச்சம்)

தாய் பிரிந்துவிட்டாள்.   (முற்று)


X

உருப்புகள் இயங்குதல்

றுப்புகள் இயங்குதல்


X

மரங்கள்தோரும்

மரங்கள்தோறும் 


X

அனுப்புனர், பெறுனர்

அனுப்புநர், பெறுநர்


X

ஏராலம்

ஏராளம்


X

வெழியே

வெளியே 


X

உரைமேல் முகவரி

உறைமேல் முகவரி


X

சேநாதிபதி

சேனாதிபதி 


X

களைவாணர்

கலைவாணர்


X

வெழியிடுபவர்

வெளியிடுபவர் 


X

கயல்விளி 

கயல்விழி 


X

சித்தால்

சித்தாள்


X

வேளான்மை

வேளாண்மை


X

நிபுநர்

நிபுணர்


X

நிருவனங்கள்

நிறுவனங்கள் 


X

வெழியே வந்தோம்

வெளியே வந்தோம்


X

கூளித் தொழிலாளி

கூலித் தொழிலாளி


X

ஏலனம்

னம் 


X

அதற்கேட்ப

அதற்கேற்ப 


X

அங்கொன்ரும்

அங்கொன்றும் 


X

காட்டிற்க்குள்

காட்டிற்குள்


X

மழை துளி

மழைத்துளி


X

சிறப்பு கூட்டம்

சிறப்புக் கூட்டம்


1.

பிழை :

           சென்னை மாகாணத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற போது சென்னைப்     பற்றியத் தீர்மானத்தை .பொ.சி முன்மொழிந்தார்.

 

திருத்தம்:

 

           சென்னை மாகாணத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற போது சென்னை பற்றிய    தீர்மானத்தை .பொ.சி முன்மொழிந்தார்.

 

2.   

பிழை :

           இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துறைத்திருப்பதாக அதிகாறப்பூர்வமற்ற      கருத்துகள் நிலவின.

 

திருத்தம்:

 

           இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரபூர்வமற்ற      கருத்துகள் நிலவின.

 

3.

பிழை :

           பண்டையத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக      இருந்திருக்கின்றனர்.

 

திருத்தம்:

 

           பண்டைய தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக      இருந்திருக்கின்றனர்.

 

4.   

பிழை :

           கொள்வோர் கொள்க ;  குறைப்போர் குரைக்க.

 

திருத்தம்:

 

           கொள்வோர் கொள்க ;  குரைப்போர் குரைக்க.

 

5.   

பிழை :

           கலம்பகம் பதினெட்டு உருபுகளைக் கொண்டது.

 

திருத்தம்:

 

           கலம்பகம் பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது.

 

6.   

பிழை :

           வைகறை வேளையில் தங்கநிறச் சூரியன் தனது கதிர்களால் இருளைத்      துறத்துகிறது.

 

திருத்தம்:

 

           வைகறை வேளையில் தங்கநிறச் சூரியன் தனது கதிர்களால் இருளைத்      துரத்துகிறது.

 

7.   

பிழை :

           வசன கவிதை வடிவம் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது      புதுக்கவிதை வடிவம் உருவாக்க காரணமானது.

 

திருத்தம்:

 

           வசன கவிதை வடிவம் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது      புதுக்கவிதை வடிவம் உருவாகக் காரணமானது.

 

8.   

பிழை :

           குறள் வெண்பா இரண்டு அடிகளை கொண்டதாக வரும்.

 

திருத்தம்:

 

 

           குறள் வெண்பா இரண்டு அடிகளைக் கொண்டதாக வரும்.

 

9.   

பிழை :

           நான் உயிர்ப்பிழைக்கும் வழிகளை அறியேன் என்று கருணையன் கூறினான்.

 

திருத்தம்:

 

           நான் உயிர் பிழைக்கும் வழிகளை அறியேன் என்று கருணையன் கூறினான்.

 

10.  

பிழை :

           முதலாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி நாட்டின் வளத்தையும் ஆட்சி      சிறப்பையும் நயம்பட எடுத்துரைக்கிறது.

 

திருத்தம்:

 

           முதலாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி நாட்டின் வளத்தையும் ஆட்சிச்      சிறப்பையும் நயம்பட எடுத்துரைக்கிறது.

 

11.  

பிழை :

           உயர் கல்வியைத் தமிழில் கற்பதற்க்கு வழிவகை செய்ய வேண்டும்.


திருத்தம்:

           உயர் கல்வியைத் தமிழில் கற்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

 

 

12.  

பிழை :

           பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினென் கீழ்கணக்கும்  தமிழின்      பெருமையை   எட்டுத்திக்கும் முழங்கின.

 

திருத்தம்:

 

           பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கும் தமிழின்      பெருமையை எட்டுத்திக்கும் முழங்கின.

 

13.  

பிழை :

           தெய்வத்தையோ மனிதனையோ குழந்தையாக பாவித்து பிள்ளைதமிழ் பாடினர்.

 

திருத்தம்:

            தெய்வத்தையோ மனிதனையோ குழந்தையாகப் பாவித்து பிள்ளைத்தமிழ் பாடினர்.

14.  

பிழை :

           ஒரே பொருளை பற்றி நூறுபாடல்களை பாடுவதற்கு சதகம் என்று பெயர்.

 

திருத்தம்:

            ஒரே பொருளைப் பற்றி நூறு பாடல்களைப் பாடுவதற்கு சதகம் என்று பெயர்.

15.  

பிழை :

           கைமாறு கருதாமல் அறம் செய்வது பண்பாடாகும்.

 

திருத்தம்:

            கைம்மாறு கருதாமல் அறம் செய்வது பண்பாடாகும்.

16.  

பிழை :

           பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தல் வேண்டும்.

 

திருத்தம்:

            பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் வேண்டும்.

17.  

பிழை :

           உவமணி காணம்கொள் என்று

             ஒலித்து அழுவ போன்றே!

 

திருத்தம்:

 

            உவமணி கானம் கொல் என்று

             ஒலித்து அழுவ போன்றே!

 

 

18.  

பிழை :

           ஈற்றடியின் ஈற்றுச்சீர் மலர் என்னும் வாய்ப்பாட்டை கொண்டு முடிந்துள்ளது.

 

திருத்தம்:

 

           ஈற்றடியின் ஈற்றுச்சீர் மலர் என்னும் வாய்ப்பாட்டைக் கொண்டு முடிந்துள்ளது.

 

19.  

பிழை :

           யானைகள் மட்டுமே பினிக்கப்படுகின்றன. மக்கள் பினிக்கப்படுவதில்லை.

 

திருத்தம்:

 

           யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகின்றன.  மக்கள் பிணிக்கப்படுவதில்லை.

 

20.  

பிழை :

           வென்மேகங்கள் அங்கும் இங்கும் அளைமோதுகின்றன

 

திருத்தம்:

           வெண்மேகங்கள் அங்கும் இங்கும் அலைமோதுகின்றன.

21.  

பிழை :

           வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

           தமிழ் கூறு நல்லுலகம் என்றார் தொல்க்காப்பியர்.

 

திருத்தம்:

 

           வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

           தமிழ் கூறு நல்லுலகம் என்றார் தொல்காப்பியர்.

22.  

பிழை :

           தமிழ் தொட்டாலும் கை மனக்கும் ; சொன்னாலும் வாய் மனக்கும்.

 

திருத்தம்:

 

           தமிழ் தொட்டாலும் கை மணக்கும் ; சொன்னாலும் வாய் மணக்கும்.

23.  

பிழை :

           உலக தமிழ் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?

 

திருத்தம்:

 

           உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?

 

24.  

பிழை :

           நேற்று என்னை சந்தித்தவர் என் நண்பர்.

 

திருத்தம்:

 

           நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

25.  

பிழை :

           உடலுக்கு தேவையான உணவை தேடிக்கொணரும் வழிகளை அறியேன்.

 

திருத்தம்:

 

           உடலுக்குத் தேவையான உணவைத் தேடிக்கொணரும் வழிகளை அறியேன்.

 

26.  

பிழை :

           கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்போது மதில் மேலிருந்த கொடியானது   மறுப்பு கூறுவதைப்போல இருந்தது.

 

திருத்தம்:

 

           கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்போது மதில் மேலிருந்த கொடியானது   மறுப்புக் கூறுவதைப்போல இருந்தது.

 

27.  

பிழை :

           இப்படம் திருப்புடை மருதூரில் அமைந்துள்ள 17ஆம் நூற்றான்டைச் சேர்ந்த    சுவரோவியம் ஆகும்.

 

திருத்தம்:

 

           இப்படம் திருப்புடை மருதூரில் அமைந்துள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவரோவியம் ஆகும்.

 

28.  

பிழை :

           ஆரிலும் சாவு நூறிலும் சாவு.

 

திருத்தம்:

 

           ஆறிலும் சாவு நூறிலும் சாவு

 

29.  

பிழை :

           நமது கடமை நாட்டை காக்க என காலாட்படை கம்பீரமாக செல்கிறது.

 

திருத்தம்:

 

           நமது கடமை நாட்டைக் காக்க என காலாட்படை கம்பீரமாகச் செல்கிறது.

 

30.  

பிழை :

           போரில் வீரர்கள் மட்டுமே கொல்லப்படுகின்றனர்.  மக்கள் கொள்ளப்படுவதில்லை.

 

திருத்தம்:

 

           போரில் வீரர்கள் மட்டுமே கொல்லப்படுகின்றனர்.  மக்கள் கொல்லப்படுவதில்லை.

 

31.  

பிழை :

           சாலையோரமாக வந்து கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் பசியோடு இருப்பதை     பார்த்தான்.

 

திருத்தம்:

 

           சாலையோரமாக வந்து கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் பசியோடு இருப்பதைப்    பார்த்தான்.

 

32.  

பிழை :  

           தம்பி! குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்றான் குமரன்.

 

திருத்தம்:

 

          தம்பி! குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்றான் குமரன்.

 

33.  

பிழை :

           ஐவகை இலக்கணங்கள் அறங்கேறின.

 

திருத்தம்:

 

           ஐவகை இலக்கணங்கள் அரங்கேறின.

 

34.  

பிழை :

           குழத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன.

 

திருத்தம்:

 

           குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன.

 

35.  

பிழை :

           ஒரு செயலை எடுத்து கொண்டால் அதை முடிப்பதற்கு எவ்வித செயல்களை    செய்வாய் என்பதையும் அறிவேன்.

 

திருத்தம்:

           ஒரு செயலை எடுத்துக் கொண்டால் அதை முடிப்பதற்கு எவ்வித செயல்களைச் செய்வாய் என்பதையும் அறிவேன்.

 

36.  

பிழை :

           நம் அனவருக்குள் ஒற்றுமை வேண்டும்.

 

திருத்தம்:

 

           நம் அனைவருக்குள்ளும் ஒற்றுமை வேண்டும்.

 

 

 

37.  

பிழை :

           அந்த பக்கம் சென்றான்.

 

திருத்தம்:

 

           அந்தப் பக்கம் சென்றான்.

 

38.  

பிழை :

           அவன் திருப்பி திருப்பிச் சொல்லி கொண்டான்.

 

திருத்தம்:

 

           அவன் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டான்.

 

39.  

பிழை :

           கம்மஞ்சோறு தந்து அதன் மேல் துவயலையும் வைத்தார்கள்.

 

திருத்தம்:

 

           கம்மஞ்சோறு தந்து அதன் மேல் துவையலையும் வைத்தார்கள்.

 

40.  

பிழை :

           காட்டில் செல்வதர்கு வழிகளை அறியேன்.

 

திருத்தம்:

           காட்டில் செல்வதற்கு வழிகளை அறியேன்.

 

41.  

பிழை :

           ஆசிரியர்தலை மிகுதியாகவும் வெண்டலை கலித்தலை ஆகியவை விரவியும் வரும்.

 

திருத்தம்:

 

           ஆசிரியத்தளை மிகுதியாகவும் வெண்டளை கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.

 

42.  

பிழை:

          மூன்று அடிமுதல் எழுதுபவர் மனநிலைகேர்ப அமையும்.

 

திருத்தம்:

 

           மூன்று அடிமுதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.

 

43.  

பிழை :

           ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குரைவாகவும் பயின்று வரும்.

 

திருத்தம்:

 

           ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.

 

44.  

பிழை :

           மக்களின் உரிமைகள் பறிக்க படவில்லை.

 

திருத்தம்:

 

           மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை.

 

45.  

பிழை :

           மக்களின் வாழ்வில் வெருமை இல்லை.

 

திருத்தம்:

 

           மக்களின் வாழ்வில் வெறுமை இல்லை.

 

46.  

பிழை :

           இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள நீ எடுத்த முயற்சிகளை நான்      அறிவேன்.

 

திருத்தம்:

 

           இந்தக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள நீ எடுத்த முயற்சிகளை நான் அறிவேன்.

 

47.  

பிழை :

           வள்ளுவரின் வாக்கு பொய்குமா?

 

திருத்தம்:

 

           வள்ளுவரின் வாக்கு பொய்க்குமா?

 

48.  

பிழை :

           உன் அன்பு நன்பன் நான்.

 

திருத்தம்:

 

           உன் அன்பு நண்பன் நான்.

 

 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...