Skip to main content

பழத்தைத் தொட்டியில் வீசிவிட்டு தோலைத் தின்று ...


ஒரு வாழைப் பழத்தை உரித்து அந்தப் பழத்தைத் தொட்டியில் போட்டுவிட்டு அதன் தோலைத் தின்று சந்தோஷப்படுவோமா என்ன?

ஒரு பாட்டு என்பதும்  வாழைப் பழம் போலத் தான். சில நேரங்களில் உரித்தே கொடுப்பார்கள். அதனால் நாம் அப்படியே சாப்பிடலாம். சில நேரம் நாம் உரித்த பின் தான் சாப்பிட வேண்டும். அது தோலா பழமா என்று பார்த்துவிட்டு அப்புறம் தான் தின்னத் தொடங்க வேண்டும்.

அப்படி தோலோடு தந்த ஒரு பழம் இது.


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.

(திருமூலர்)

தோலை முதலில் பார்க்கலாம். அதாவது மேலே தெரிகிற பொருள் என்ன என்று பார்க்கலாம்.

அந்தணனின் கடமை கடவுளை வழிபடுவது தான். கடவுள் விக்ரகத்தை அபிஷேகம் செய்து வழிபட அவனுக்குப் பால் வேண்டும். அவன் செய்யும் யாகங்களுக்கு நெய் வேண்டும். பாலுக்கும் நெய்க்கும் அவன் என்ன செய்வான்? இந்தத் தேவைகளுக்காக பால் தரும் பக்குவத்தில் உள்ள பசுமாடுகளை வளர்ப்பான். அப்படி ஒரு அந்தணன் வீட்டில் ஐந்து பசுமாடுகள் உள்ளன. ஆனாலும் கோவில் வேலைகளைப் பார்த்துக்கொண்டு அவன் பசுமேய்க்க முடியாது. அவனுக்கு பசு மேய்த்துத் தர யாரும் இல்லாததால் பால் கறந்தபின் பசுக்களை அவிழ்த்து விட்டு விடுவான். அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒழுங்காகத் தீனி தின்னாமல் போனதால் ஒழுங்காகப் பால் கறக்கவுமில்லை. மேய்க்க மட்டும் ஒரு ஆள் இருந்து சரியாக மேய்த்தால்அந்தப் பசுக்கள் நன்றாகப் பால் கொடுக்கும்.

திருமூலர் திருமந்திரத்தில் எப்படிப் பால் கறப்பது என்றா சொல்லுவார்?

 உள்ளே இருக்கும் பழத்தைப் பார்க்க வேண்டும். 

சரி எது பழம்?

பார்ப்பான் என்பது இயல்பிலேயே புலன்களை கட்டுப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்த விரும்பும் எவரையும் குறிக்கும். ஐந்து பசுக்கள் என்பது ஐம்புலன்களைக் குறிக்கும். விரும்பியபடியெல்லாம் மனம் அலைபாயாமல் இருக்க எதைப் பார்ப்பது, எதைக் கேட்பது, எதைச் சுவைப்பது ஆகிய ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடு அவசியம். விரும்பியதைப் பார்த்து, கிடைத்ததை எல்லாம் தின்று தீர்க்க ஆசை என்பது தானாய் அலையும் பசுமாடுகள் போல... 

அது பசுமாடு தான் என்றாலும் பாலுக்காகாதே. அதாவது உருவம் தான் மனிதன் போல ... உண்மையில் அவன் மனிதன் ஆக மாட்டான்.

இந்தப் புலனடக்கம் ஆன்மீக வாழ்க்கைக்கு அடிப்படை என்பது தான் பாடல் தரும் பழம்.

நாம் தின்னப் போவது தோலா? பழமா?

மனம் போன போக்கில் எதை வேண்டுமானாலும் தின்னலாம். நம் விருப்பம் தானே!


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...