Skip to main content

அது ஒரு நிலாக்காலம் ...

 அது ஒரு நிலாக்காலம்


"அப்போதேல்லாம் இந்த மாதிரி மொபைல் போன், வீடியோ கேம்ஸ் எல்லாம் இல்லை. ஸ்கூல் விட்டு வந்த பிறகு மண்ணுல தான் விளையாடுவோம். வாரத்துல ஒரு நாள் நீச்சல் ...அதெல்லாம் ஒரு காலம். அந்த நாளெல்லாம் இனி வரவா போகிறது."


பழைய நினைவுகளில் மனம் மலரும் போது இப்படிப்பேசுவதைப் பார்த்திருப்போம்.


கடந்தகால நினைவுகள் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் இப்படிச் சொல்வதுண்டு.


நிலா எப்படி இந்த நினைவுகளோடு வந்து சேர்ந்துகொண்டது?

நிலா என்றும் உள்ளது தான்.

அன்று நிலா இருந்தது. அந்த நிலா வெளிச்சத்தில் ஓடி விளையாட தெருவெங்கும் குழந்தைகள் இருந்தனர். மகிழ்ச்சியும் இருந்தது. 

இன்றும் அந்த நிலா அப்படியே இருக்கிறது ... அந்த இனிய நாட்கள் தான் இல்லை.


இப்படி எங்கெல்லாம் பழைய நினைவுகள், ஏக்கங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நிலாவை நினைக்காமல் இருக்கமுடியாது போல.


கண்ணதாசன் வரிகள் கூட,

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே...

என்று அந்த பழகிய காலத்தில் கொண்ட நினைவுகளை அசை போடும். 


அந்தக் காலத்தில் பாரி மன்னன் மூவேந்தர்கள் முற்றுகையில் இறந்த பிறகு அவன் மகள்கள் கையறு நிலையில் பாடும் போதும் இந்த நிலாவை நினைத்துப் பாடுவதாக ஒரு பாடல்.


அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

(புறநானூறு)


அந்த மாதம் நிலா வந்தது.

எங்கள் தந்தையும் இந்தக் குன்றில் எங்களோடு இருந்தார்.

இன்றும் அந்த நிலா இருக்கிறது.

எங்கள் தந்தையும் இல்லை. எங்கள் குன்றும் இல்லை.


பாட்டு என்னமோ எளிமையாகத் தான் உள்ளது. அது சுமந்து வரும் உணர்ச்சி தான் வலிமையானது.


அந்த உணர்ச்சி உண்மையானது என்பதற்கு சமீபத்திய சாட்சியாக இருப்பது இந்தப் பாட்டு.

இதை எழுதியவர் சிவரமணி என்ற இளம்பெண் கவிஞர். 23 வயது மட்டுமே வாழ்ந்தவர். இலங்கைத் தமிழ்க் கவிஞர். 


அன்றைய பொழுதும் 

இன்றைய பொழுதும் 

ஒரே சூரியன் 

ஒரே சந்திரன்- ஆனால் 

அன்றோ ஒரு உறக்கம் 

நிகழ்வுகள் புரியாத

நிம்மதிப் பெருமூச்சு ...இன்றோ உறக்கங்கள் தோல்வி கண்ட

விழிப்பின் பரிதவிப்பு...


ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளில் நாகரிகம், அறிவியல் என எவ்வளவோ மாற்றம் வந்த போதும் அந்த அடிப்படை உணர்ச்சி மட்டும் அப்படியே தான் இருக்குமோ?


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...