Skip to main content

இதெல்லாம் ஆசிரியப்பாவா?

இருப்பானிடங் கொடுவெனக் கொடுத்தனன் இரண்டினில்

ஒருபேனா இனியொரு தடையில்லை தொடர்ந்தெழுத 

கருப்பில் எழுதா தேயென் றார்

இருக்கும் இதுவொன் றும்போச் சே.

இது பாவாகுமா?

நிச்சயமாக. 

இது ஆசிரியப்பா தான்.

முதலில் அசை , தளை என்ற சடங்குகளை முடித்து விட்டு அதன் பின் விதிகளுக்கு வருவோம்.

அசை:

இருப்/பா/னிடங் -புளிமாங்கனி

கொடு/வெனக்-கருவிளம்

கொடுத்/தனன்-கருவிளம்

இரண்/டினில்-கருவிளம்

ஒரு/பே/னா-புளிமாங்காய்

இனி/யொரு-கருவிளம்

தடை/யில்/லை-புளிமாங்காய்

தொடர்ந்/தெழு/த-கருவிளங்காய்

கருப்/பில்-புளிமா

எழு/தா-புளிமா

தே/யென்-தேமா

றார்-மா

இருக்/கும்-புளிமா 

இது/வொன்-புளிமா 

றும்/போச்-தேமா

சே-மா

தளை:

இருப்/பா/னிடங் > கொடு/ வெனக் : ஒன்றிய வஞ்சித்தளை

கொடு/ வெனக்>கொடுத்/தனன்: நிரையொன்றிய ஆசிரியத்தளை

கொடுத்/தனன்>இரண்/டினில்: நிரையொன்றிய ஆசிரியத்தளை

இரண்/டினில்>ஒரு/பே/னா: நிரையொன்றிய ஆசிரியத்தளை

ஒரு/பே/னா> இனி/யொரு: கலித்தளை

இனி/யொரு>தடை/யில்/லை: நிரையொன்றிய ஆசிரியத்தளை 

தடை/யில்/லை>தொடர்ந்/தெழு/த: கலித்தளை

தொடர்ந்/தெழு/த>கருப்/பில்: கலித்தளை

கருப்/பில் >எழு/தா/தே: இயற்சீர் வெண்டளை

எழு/தா/தே >யென்/றார்: நேரொன்றிய ஆசிரியத்தளை

யென்/றார்>இருக்/கும்: இயற்சீர் வெண்டளை

இருக்/கும்>இது/வொன்: இயற்சீர் வெண்டளை

இது/வொன்> றும் /போச் : நேரொன்றிய ஆசிரியத்தளை

றும் /போச் >சே: நேரொன்றிய ஆசிரியத்தளை

தளைகளின் எண்ணிக்கை:

வஞ்சித்தளை-1

ஆசிரியத்தளை -8

கலித்தளை-3

வெண்டளை-3

சரி , இப்போது முக்கியமான கட்டத்துக்கு வந்து விட்டோம். 

ஆசிரியப்பா என்றால் என்ன விதிகள்?

1. குறைந்த பட்சம் மூன்றடிகள் பெற்றிருத்தல் வேண்டும்.

நம்மிடம் நான்கு அடிகள் உள்ளன.


2. இயற்சீர்கள் மிகுந்து வருதல் வேண்டும்.
பாதிக்கும் மேல் இயற்சீர்கள் தான் வருகின்றன. (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் ஆகிய நான்கும் தான் இயற்சீர்கள்)

 3.ஆசிரியத்தளை மிகுந்து வருதல் வேண்டும்.

15 தளைகளுள் 8 ஆசிரியத்தளைகள் என்பதால் இதுவும் சரியாக இருக்கிறது.

4. ஈற்றடியின் ஈற்றசை ஏ, ஓ, ஈ, ஆய், ஐ அல்லது என் என்று முடிதல் வேண்டும்.

நம்முடைய பா ( பா தான்) 'சே' என முடிகிறது. அதாவது ஏ ஓசை. ஆக இதுவும் சரி.

5.கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய வாய்பாடுகள் வருதல் கூடாது.

அப்படி எதுவும் வரவில்லை.

6.அளவடியை விட அதிகமான சீர்கள் கொண்ட அடிகள் வருதல் கூடாது.

அளவடி என்பது 4 சீர்கள் கொண்டது. நம் எல்லா அடிகளும் அளவடிகள் தான்.


7.முதலடியும் ஈற்றடியும் அளவடியை விட குறைந்து வருதல் கூடாது. இடையே அடிகள் குறைந்து வரலாம். அப்படி, இடையே அடிகள் குறைந்தால் சிந்தடி மற்றும் குறளடிகள் மட்டும் வருதல் வேண்டும்.

நம் எல்லா அடிகளும் அளவடிகள் தான்.

ஆக, மேற்கண்ட ஏழு நிலைகளையும் வெற்றிகரமாகத் தாண்டிவிட்டதால் இது ஆசிரியப்பா தான். 

அது சரி இந்தப் பாட்டு என்ன கருத்தைச் சொல்லவருகிறது என்றெல்லாம் கேட்கக் கூடாது.
அதெல்லாம் விதிகளில் வராது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...