Skip to main content

ஊரு விட்டு ஊரு வந்து...

  அவள் ஒரு நாட்டியமாடும் ஆட்டக்காரப் பெண். ஆட்டமாட அங்கே இங்கே என போகும் இடங்களிலெல்லாம் அவனைப் பார்க்கிறாள். அவனுக்கும் ஆட்டம் ஆடுவது தான் தொழில். அவன் மேல் பிரியம் அவளுக்கு . இப்படியிருக்க அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாத வருத்தத்தால், அவள் உடல் மெலிகிறது. 

அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன.


அவளைப் பார்க்க வந்த அவள் தோழி, இப்படி மெலிந்து போகக்   காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள்.


அவளது திகைப்பை அறிகிறாள் அவள். தான் உண்டு தன் ஆட்டம் உண்டு என்று இல்லாமல் இப்படிக் காதல் வயப்பட்டு மெலிந்து போனதை தோழியிடம் சொல்கிறாள்.


 நான் மதிப்பு வைத்துள்ள அவன் வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்களில் இருப்பானா என்று தேடினேன். 

 அங்கு அவனைக் காணவில்லை.


ஆண்கள் பெண்களோடு சேர்ந்து ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்களில் எல்லாம் தேடினேன். 

 அங்கும் அவனைக் காணவில்லை. 


நான் ஒரு ஆட்டக்காரப் பெண். பிரகாசமான சங்கால் செய்யப்பட்ட, என் வளையல்கள்  நான் மெலிந்து போனதால் என் கையில் தங்காமல் நழுவுகின்றன. என் வளையல்களை நழுவ வைத்தானே அவனும் ஒரு ஆட்டக்காரன் தான்.   


மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டுங் காணேன் மாண்தக் கோனை

யானுமோர் ஆடுகள மகளே என்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த

பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. 


(ஆதிமந்தியார் - குறுந்தொகை)


சொல்லும் பொருளும்:


மள்ளர் -வீரர்

குழீஇய - குழுமியுள்ள 

விழவு -விழா

தழீஇய - தழுவிய

துணங்கை- ஒருவகை ஆட்டம்

யாண்டும் -எங்கும் 

மாண் - மாண்பு

தக்கோன்-  தகுதி உடையவன் 

யான் - நான்

ஆடுகள மகள் - ஆட்டக்காரப் பெண்

 கோடு - சங்கு

 ஈர்த்தல் -அறுத்தல் 

இலங்குதல் - விளங்குதல் 

நெகிழ்தல் - நழுவுதல்

பீடு - பெருமை

குரிசில் -தலைவன் 

ஆடுகள மகன் -ஆட்டக்காரன் 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...